அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 25 ஜூலை, 2010

தெரியவில்லை வங்கியின் எல்லை பார்வைக்கு வைத்தால் பயன்

கூடலூர் : "நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தங்களின் எல்லைப் பகுதியை, வங்கிகளில் ஒட்டி வைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல வங்கிகளில், மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து, வசிப்பிடம், வாடிக்கையாளர் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் தங்களுடைய சேவைப் பரப்பு வரையறுக்கப்பட்டது; இப்பகுதிகளில், சேமிப்பு கணக்கு, கடன் வழங்குதல், வைப்பு, முதலீடு பெறுதல் உட்பட சேவைகளை வழங்குகிறது. வங்கியின் சேவைப் பகுதிகள் குறித்தும், எந்த வங்கியில் கடன் பெறுவது என்பது குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. பிரச்னைக்கு தீர்வு காண, சேவை வழங்கும் பகுதி விபரங்களை, வாடிக்கையாளர்கள் அறிந்துக் கொள்ள, வங்கிகளில் ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

"பயம்' இருந்தால் "ஜெயம்' இருக்காது நிலவும் நிலையை மாற்ற அறிவுரை

ஊட்டி: "அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும்' என, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம்,  ஊட்டியில் நடத்தப்பட்டது. மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் மையங்கள், கிராம நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடு குறித்து பேசினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும். பல நிலைகளில், தனக்கு என்ற செயல்பாட்டை தவிர்த்து மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மையங்கள், மன்றங்கள், மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி வைக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளை மக்கள் அறிய உதவ வேண்டும். மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மக்களுக்கு உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். குறைகளுக்கு புகார் அனுப்புவதோடு இருந்து விடாமல், தொடர் கண்காணிக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தயார்படுத்த வேண்டும்; மக்கள், தட்டிக் கேட்பவர்களாக மாற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் பேசுகையில், "மக்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கொண்டுள்ளனர்; அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கு பயந்து, பணிந்து வாழும் நிலை மாற வேண்டும். மக்களை விழிப்படைய செய்வதுடன், அடிப்படை தேவைகள் பெற உதவ வேண்டும். ரேஷன் கார்டு பெற்றுத் தருதல், முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருதல் உட்பட அரசு நலத்திட்டங்களை பெற உதவுவது அல்லது அவைகளை பெற வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளும் நலத்திட்டங்கள், செயல்பாடுகளில் நிலவும் குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; முறைகேடுகளை களைய மேலதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சேகரித்து, விவாதிக்க வேண்டும். உள்ளூர் குறைபாடுகளை மக்கள் மூலமாக தீர்க்க வலியுறுத்த வேண்டும்.நீர் வளம், சுகாதார சீர்கேடு, கழிவு நீர் அகற்றுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில், உள்ளாட்சி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். புகார் அளிக்கும் முன், ஆதாரங்களை திரட்ட வேண்டும். மக்கள் நலனுக்கு செயல்படும் அமைப்பாக உருவாக வேண்டும். இவ்வாறு, வீரபாண்டியன் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்து, அமைப்புகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ், ரமேஷ், ஜெயச்சந்திரன், சுப்ரமணி, மஞ்சுளா, ராமச்சந்திரன், டேவிட், கவிதா, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். கிராம நுகர்வோர் மன்ற அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

அம்பலமூலா இலவச கண் சிகிச்சை முகாமில்

பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 120 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தமிழ்நாடு அறக்கட்டளை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்க மருத்துவமனை இணைந்து அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. டாக்டர் லோகோஸ் பேசினார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவமனை கண் நோய் பிரிவு மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 120 பேர் பங்கேற்று பயனடைந்ததில் 20பேர் கண் புரை அறுவை சிகிச்சைக் காக ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் சங்க திட்ட மேலாளர் பீட்டர் ரொனால்டோ தலைமை வகித்தா. மைய தலைவர் சிவசுப்ரமணியம், கண்பரிசோதகர்கள் முத்துராஜ், நாகூர்கனி, கலாவதி மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், மையத்தின் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

"தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' 30ம் தேதி கோவையில் விழிப்புணர்வு

ஊட்டி : "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில், கோவையில் வரும் 30ம் தேதி, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய - மக்கள் மைய தலைவர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:தரமான பொருட்களை விற்பனை செய்ய, தரமான பொருட்கள் குறித்து அறிந்துக் கொள்ள, மத்திய அரசு, இந்திய தரக் கட்டுப்பாட்டு மையத்தை (பி.ஐ.எஸ்.,) செயல்படுத்தி வருகிறது. தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தர கட்டுப்பாட்டு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் சார்பில், கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு குறித்த, "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சியை நடத்துகிறது.தர நிர்ணய சட்டங்கள், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் வேலை குறைபாடு நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறல், போலி தர முத்திரைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், "கூடலூர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம்; 94885-20800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தர முத்திரைகள், போலி பொருட்கள் குறித்த புகார் இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

மாணவர்களின் போக்குவரத்து பிரச்னை நுகர்வோர் பாதுகாப்பு மையம் யோசனை

ஊட்டி: "மாணவர்களுக்கான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், வெளியிட்டுள்ள அறிக்கை:
 
அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கான பஸ்கள், நகரப் பகுதிகளுக்கு மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில பஸ்களின் நடத்துனர்கள், பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றி செல்ல மறுக்கின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்ல, போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். 
 
பஸ்சில் பயணிக்கும் முறை குறித்து, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர், வரிசையில் நின்று பஸ்களில் ஏறி பயணிக்கின்றனர். இம்முறையை, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும். 
 
இதை கண்காணிக்கவும், மாணவர்களை ஏற்றிச் செல்லாத பஸ்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பள்ளி மாணவர்களிடையே ஒரு குழுவை ஏற்படுத்தினால் பயன் கிடைக்கும். தனிக்குழுவாக இல்லாவிட்டாலும் என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., மாணவர் படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் இப்பணியை மேற்கொள்ளலாம். 
 
பள்ளி நிர்வாகங்கள் ஆதரவு தெரிவித்தால்,கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ஆதரவு தரும். பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, போக்குவரத்து, போலீசார், கல்வித் துறையினர் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

வியாழன், 22 ஜூலை, 2010

சேவைக்கு என்ன தேவை?


தேசிய அளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த வேளையில், அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. "சாலை விபத்தில் பலத்த காயமடையும் நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும் முன்னரே உயிரிழக்கிறார்' என்பது தெளிவானது. இதற்கு மற்றொரு காரணம் இருந்தது "சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால், விபத்தில் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூறுகிறார்கள். உயிரைக் காப்பாற்ற வாய்ப்பளிக்கும் தங்க நிமிடங்களைத் தவற விடுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது' என்பதே.

இதையொட்டியே, புதிய சட்ட முன்வடிவைத் தயாரிக்கத் தேவையான பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சரகம் கோரியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஆணையத் தலைவர் நீதிபதி எம்.ஜெகன்நாத ராவ் தலைமையிலான குழுவினர், "விபத்துகளால் காயமடைந்தோர் மற்றும் இதர ஆபத்தான நிலையில் இருப்போருக்குத் தேவைப்படும் அவசர சிகிச்சை' பற்றி விரிவான ஆய்வு நடத்தி,​​ 2006-ம் ஆண்டு அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

சட்ட ஆணையத்தின் பரிந்துரையை முன்வைத்து, அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் விபத்துக்கான அவசர சிகிச்சையை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இது ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான் என்றாலும், அரசின் உத்தரவுபடி அனைத்து மருத்துவமனைகளும் விபத்துக்கான அவசர சிகிச்சையை இப்போது அளித்து வருகின்றன.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர் குறித்த விவரங்களை அருகேயுள்ள காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அளிக்கும் சிகிச்சைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். இறந்தால், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரிடும் என்பன போன்றவை  ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள்தான் என்றாலும், இப்போது அதை ஏற்று, அவை சிகிச்சை அளித்து, சாட்சியமும் அளிக்கின்றன. இப்போது, காப்பீட்டுத் திட்டத்திலும் தனியார் மருத்துவமனைகளோடு தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதால் விபத்து தவிர பிற இயற்கை நோய்களுக்கும் தனியார் மருத்துவமனைகள் இலவசமாகவே மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.

ஆனால், தற்கொலை முயற்சி, கொலை முயற்சி, தீ விபத்து, அடிதடி போன்றவற்றில் பலத்த காயத்தோடு வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அனுமதி வழங்குவதில்லை. நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்துகின்றனர் இதில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் வழியிலேயே உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தின் தென்கோடியில் இறக்க நேரிட்டால், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர், அவரது பிரேதத்தைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடகிழக்கு மாநிலத்தின் ஒரு மூலையில் இருக்கும் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வருகிறது.

இப்படி, வழக்கில் சாட்சியமாக காவல்துறையால் சேர்க்கப்படுவதும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றப் படியேறி ஓய்ந்து போவதும் நீடிப்பதே,காவல்துறை வழக்கு தொடர்பான நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகள் புறக்கணிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

போலீஸôருக்குத் தகவல் தெரிவித்ததற்காக நோயாளிகளின் உறவினர்களாலேயே மிரட்டப்படுவதும், கொலை வழக்கில் சாட்சியம் அளிக்கச் செல்லும்போது, எதிராளிகளின் கொலை மிரட்டலுக்கு மருத்துவர்கள் ஆளாவதும் நடைபெறுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில், எந்த வகையில் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடுபவராக இருந்தாலும் அவரை நோயாளியாகவே கருதி, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சையை அளிக்கிறார்கள். மேலும், அந்த மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கான வசதி இல்லாவிட்டால், உரிய உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ், மருத்துவர் வசதியோடு வேறு மருத்துவமனைக்கு இடம் மாற்றுகிறார்கள்.

 மேலும் கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டு, சுய நினைவை இழந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளியிடம் உரிய பணம், காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும்,அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்த பிற அரசிடம் இருந்து மானியத் தொகையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

சட்டப் பிரச்னைகள் இருந்தாலும் அந்நாடுகளின் அரசும், சட்டமும் மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கின்றன. பெரிய அளவிலான வழக்குகள் தவிர,பிறவற்றில் மருத்துவரின் சாட்சியங்கள் விடியோ கான்பரன்சிங் மூலம் பெறப்படுகிறது. இதனால், நீதிமன்றப் படியேறுவது குறைகிறது.

இதுதவிர, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அபராதம், படுக்கை மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாவிட்டால் அபராதம் என அரசும் சட்டம் இயற்றியிருக்கிறது.அரசு மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பதைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இப்போது விபத்துகளில் பாதிக்கப்படுவோரை அனுமதிக்கும் தனியார் மருத்துவமனைகள் கொலை, தற்கொலை முயற்சிகளில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. இதற்கு மருத்துவர்கள் கூறும் காரணத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.

விபத்தாகட்டும்,கொலை, தற்கொலை முயற்சி வழக்காகட்டும், உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு, மருத்துவர்களை அலைக்கழிக்கும் போக்கை நீதிமன்றமும், அரசும் கைவிட்டாலே, அனைவரையும் நோயாளியாகவே பாவித்து, சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

atk school kamarajar programme

mangorange eye camp


பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

செவ்வாய், 13 ஜூலை, 2010

அனீமியா நோயால் 60 சதவீத பெண்கள் பாதிப்பு

அனீமியா நோயால் 60 சதவீத பெண்கள் பாதிப்பு மாவட்ட குடும்ப நல மருத்துவர் தகவல்

 ""நீலகிரியில், 60 சதவீத பெண்கள் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள தயங்குகின்றனர்,'' என மாவட்ட குடும்ப நல மருத்துவ அதிகாரி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், குன்னூர் உபாசி அரங்கில் உலக மக்கள் தொகை தின சிறப்பு கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது. கவுரவ விருந்தினராக பங்கேற்ற மாவட்ட மருத்துவ, கிராமப்புற சேவை மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் டாக்டர். ஜெயலட்சுமி பேசியதாவது:

நீலகிரியில் ஆறு அரசு மருத்துவமனைகள், 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 194 துணை சுகாதார நிலையங்கள், தன்னார்வ அமைப்பான இந்திய குடும்ப நலச்சங்கம், 18 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், இரண்டு நகராட்சி சுகாதார நிலையங்களில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, அறுவை சிகிச்சை செய்ய, மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பல பெண்கள் பலவீனமான நிலையில் உள்ளது தான். மாவட்டத்தில் பல பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 சதவீத பெண்கள் அனீமியா நோய்க்கு ஆளாகியுள்ளனர்; பெண்கள் சரியான நேரத்தில் போதிய அளவு உணவை உட்கொள்ளாதது தான் இதற்கு காரணம். பெண்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள், "வாசக்டமி' என்ற குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும். மாவட்டத்தில் ஜனத்தொகை அதிகரித்து வருகிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும். இவ்வாறு, டாக்டர். ராஜலட்சுமி பேசினார். மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் குன்னூர் சாந்தி விஜய் பள்ளி மாணவி ராஜலட்சுமி முதலிடம், குன்னூர் புனித மேரீஸ் பள்ளி மாணவியர் சுஸ்மிதா, சாரல் மார்டினா இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர். ஓவியப் போட்டியில், குன்னூர் சாந்தி விஜய் பள்ளி மாணவியர் வைஷ்ணவி, திவ்யா முதலிரு இடங்கள், குன்னூர் புனித மேரீஸ் பள்ளி மாணவி கவுரி 3வது இடம் பெற்றனர். .

 வரும் 2050ம் ஆண்டில்"அம்மாடியோவ்!'
மக்கள் தொகை சிறப்பு கருத்தரங்கில்"திடுக்'

வரும் 2050ம் ஆண்டின் உலக மக்கள் தொகை, 900 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., சபை தெரிவித்துள்ளது' என, மக்கள் தொகை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு,வீடாக வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல் அளித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், குன்னூர் உபாசி அரங்கில், உலக மக்கள் தொகை தின சிறப்பு கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம்  வரவேற்றார். சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர், சிறப்பு விருந்தினராக பேசியதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் 60 நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பெருகியுள்ள மக்கள், அவர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி உட்பட மக்களின் தேவைகளை அறிந்துக் கொள்ள, இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது. கணக்கெடுப்பின் முக்கியத்துவம் அறியாத பலர், கணக்கெடுப்பு நடத்தும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பாதுகாக்கப்பட்ட, சட்ட விதிகளுக்கு உட்பட்ட சகல வசதிகள் நிறைந்த வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே துல்லியமான கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். உலக மக்கள் தொகை 686 கோடியாக உள்ளது; இந்தியாவில் 118 கோடி பேர் வசிக்கின்றனர்; உலக மக்கள் தொகையில் இது 17 சதவீதம்; மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலப்பரப்பு விரிவடையாததால், 17 சதவீத மக்கள் 2.4 சதவீத நிலத்தில், கடும் நெரிசலுக்கு மத்தியில் வசிக்கின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு 1.50 கோடி பேர் பிறக்கின்றனர்; மக்கள் தொகை, ஆண்டுக்கு ஏழு கோடி அதிகரிக்கிறது; இதே நிலை நீடித்தால், வரும் 2050ம் ஆண்டின் உலக மக்கள் தொகை, 900 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை சாதனம் குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே அதிகளவு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, சுந்தர் பேசினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம், குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காந்திபுரம், ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையத்தினர் குறு நாடகம் நடத்தினர்.

விழித்துக்' கொண்டால் தான் உண்டு! தொழிற் பயிற்சி வகுப்பில் "அட்வைஸ்'

3."விழித்துக்' கொண்டால் தான் உண்டு! தொழிற் பயிற்சி வகுப்பில் "அட்வைஸ்'

பந்தலூர்: "தாங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே, ஏமாற்றப்படுவதில் இருந்து விடுபட இயலும்' என, நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது.


"எய்டு அண்ட் ஆக்சன் இந்தியா' அமைப்பின் மூலம், மகளிர் குழுக்களுக்கான இலவச தொழிற்பயிற்சி, பந்தலூரில் நடத்தப்படுகிறது. நெல்லியாளம் மூன்றாம் நிலை நகராட்சியின் மூலம் பரிந்துரைக்கப்படும் குழுக்களை சேர்ந்த பெண்கள் 33 பேருக்கு, 3 மாதங்களாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.


ஒரு கட்டமாக, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய  மக்கள் மையத்துடன்  இணைந்து   பயிற்சி மையத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிதரன் வரவேற்றார்.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி பேசுகையில், ""எல்லாம் தெரியும் என்பதை விட, தெரியாதவற்றை கேட்டு தெரிந்து அதற்கேற்ப செயல்படுவதால், சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும். தெரிந்தவற்றை பிறருக்கு தெரிய வைத்து, சமுதாயத்தில் ஏமாறாமல், ஏமாற்றப்படாமல் பாதுகாக்க, இதுபோன்ற பயிற்சி முகாம்கள் பயன் தரும்,'' என்றார்.

பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ். எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தானந்த் பேசுகையில், ""சமுதாயத்தில் சிறப்பு நிலையை அடைய வேண்டும். அதற்கு, சமுதாயத்தோடு ஒன்றி வாழவும், தன்னால் முடிந்த அளவு உதவி புரியும் பக்குவமும் வர வேண்டும். வேலைக்காக வழிகாட்டும் பயிற்சியை முறையாக பெற்று, குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும், '' என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""2005-"06ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, 15 சதவீதத்தினர் மட்டுமே, நுகர்வோர் சட்டம் குறித்து தெரிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோராக நம்மை நம்பி சமுதாயமும், சமுதாயத்தை நம்பி நுகர்வோரும் இருக்கும் நிலையில், நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் ஏமாற்றப்படாதவாறு பெற வேண்டும். கடையில் வாங்கும் பொருட்களின் எடை, தயாரிப்பு, காலாவதி தேதி, விலை, தயாரிப்பு முகவரியை தெளிவாக பார்த்து வாங்க வேண்டும். தவறினால், உயிரை காப்பாற்ற பயன்படுத்தும் மருந்துப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை கலப்படம், காலாவதியை பெற்று பயன்படுத்தி, இன்னலுக்கு ஆளாக நேரிடும். நுகர்வோர் தாங்களாகவே விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார்.

மைய நிர்வாகி முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.




கவுரவத்தின் பெயரில் காவு கொடுக்கும் கொடூரம்


கவுரவக்

கொலைகள் & மொழி மாச்சரியமின்றி எல்லா ஊடகங்களிலும் இடம்பிடித்து விட்ட தலைப்புச் செய்தி. குடும்ப கவுரவத்திற்கு எதிராக நடந்துக் கொண்டார்கள் என்பதற்காக தொப்புள் கொடி உறவையே அறுத்துக் கொள்வதற்கு பெயர்தான் கவுரவக் கொலை. உயிரை கொல்லும் கொலைக் குற்றத்திற்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்த முயல்வது சமூக கட்டமைப்பின் அவலம்.

வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஒரே சாதிக்காரர்களாக இருந்தாலும், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்துக் கொள்ள தடை இருக்கிறது. காரணம் ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர, சகோதரிகள். மீறித் திருமணம் செய்தால் ‘காப் பஞ்சாயத்து’ மூலம் தண்டனை உண்டு. பெரும்பாலும் பிரிந்து விட உத்தரவிடுகிறது. கல்யாணம் முடிந்த பிறகு எப்படி பிரிவது? முடிவு மரணத் தண்டனை. சாதி மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இப்படி தண்டனைகள் உண்டு. இது ஒன்றும் புதிதல்ல, அந்த மாநிலங்களில் காலம் காலமாக நடந்துக் கொண்டிருக்கும் குற்றம். இப்போதுதான் ஊடக வெளிச்சத்தில் சிக்கியுள்ளன.

தமிழகத்திலும் கவுரவக் கொலைகள் உண்டு. ஆனால் கோத்திரத்தின் பெயரால் அல்ல; சாதியின் பெயரால். வேறு சாதியில் திருமணம் செய்த பெண்களை கொன்று போட்ட நிகழ்வுகள் கடந்த ஒராண்டில் மட்டும் 20 பதிவாகி உள்ளன. பெரும்பாலும் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்ததால் நிகழ்த்தப்பட்ட கொலைகள். சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் நடந்த கொடூரக் கொலைக்கு மட்டும் வசதி வேறுபாடு காரணம்.

மதம் மாறி திருமணம் செய்பவர்களை கொலை செய்வதும் நாடு முழுவதும் நடந்து வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரே மதமாக இருந்தாலும் சாதி மாறி திருமணம் செய்வதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த விவரங்கள் வெளியில் தெரிந்த பிறகு தொண்டு நிறுவனங்களும், தேசிய மகளிர் ஆணையமும் கள ஆய்வில் இறங்கி புள்ளிவிவரங்களை சேகரிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 1000 பேர் கவுரவக் கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் இவர்கள். இந்த 1000 பேரில் கருவாய் இருந்த உயிர்கள் கணக்கில் சேரவில்லை.

இதன் தீவிரத்தை உணர்ந்து ‘சக்தி வாகினி’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இப்பிரச்னை குறித்து மத்திய அரசும், 8 மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜூன் 21ம் தேதிதான் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, ‘‘கவுரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். அதற்கான சட்டமுன்வடிவு தயார்” என்று கூறியுள்ளார். ‘‘இந்த காட்டுமிராண்டிதனமான கொலைகளை தடுக்க சட்டம் போடுவதுடன் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் அவசியம்’’ என்கிறது மக்கள் கண்காணிப்பகம் போன்ற சமூக அமைப்பு.

கருணைக் கொலைக்கே அனுமதியில்லாத நாட்டில் கவுரவக் கொலைகளை எப்படி அனுமதிப்பது?

கவுரவத்தின் பெயரில் காவு கொடுக்கும் கொடூரம்
காகிதமாகும் மூங்கில் மரங்கள்


மனிதர்களின் பல்வேறு தேவைகளை மூங்கில்கள் ஈடு செய்கின்றன. மூங்கில் கொம்பு, பாய், அரிசி, காகிதம் என பல பயன்கள் மூங்கில்கள் மூலம் கிடைக்கின்றன. கொல்லிமலையில், அடிவாரம் முதல் உச்சி வரை காடுகள் நிறைந்துள்ளன. இங்கு, மூங்கில்கள் அதிகம். மலை உச்சியில் மட்டுமின்றி மலை துவங்கும் அடிவாரமான காரவள்ளியிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன. மொத்தம் 461 எக்டேர் வீதம் ஆயிரத்து 152 ஏக்கர் பரப்பளவில் இந்த மூங்கில் வனம் அமைந்துள்ளது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளை கடந்தால் அவற்றில் பூப்பூக்க துவங்கிவிடும். பின், அம்மரங்கள் காய்ந்து விடும். இதுபோல், 80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வளர்ந்துள்ள மூங்கில் மரங்கள் தற்போது காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை, காகிதம் தயாரிப்பதற்காக தமிழ்நாடு காகித தயாரிப்பு நிறுவனத்தினர் வெட்டி எடுத்து வருகின்றனர்

தரமான பொருட்கள் வாங்க

தரமான பொருட்கள் வாங்க

கோவையில் 30ல் விழிப்புணர்வு முகாம்

ஊட்டி, ஜூலை 13:

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தரமான பொருட்களை கண்டறிதல் மற்றும் தர முத்திரைகள், தர நிர்ணய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய தர கட்டுபாடு அமைவனம், கோவை கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து கோவையில் வரும் 30ம் தேதி தர விழிப்புணர்வு, தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள் என்ற விழிப்புணர்வு பயிற்சியை நடத்தி வருகிறது. இப்பயிற்சியில் தர நிர்ணய சட்டம், தர முத்திரைகள், தர முத்திரை குத்தப்பட்ட பொருட்களில் சேவை குறைபாடு, நிவர்த்தி செய்தல், புகார் தெரிவித்தல், நிவாரணம் பெறுதல், போலி தர முத்திரைகள் அறிந்து கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் மையத்தை அணுகலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: 94885 20800.

திங்கள், 12 ஜூலை, 2010

பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை

பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை



பந்தலூர்:"கல்வியில் சிறந்தால், எதிர்காலம் வளமுள்ளதாக அமையும்' என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.பொதுத் தேர்வில் சாதித்த பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பந்தலூரில் செயல்படும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள்  மையம்  மற்றும்  காந்தி சேவை மையம் சார்பில், பாராட்டு கேடயம் மற்றும் பணமுடிப்பு, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


நடப்பாண்டு சாதித்த மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. ஆசிரியர் மாரப்பன் வரவேற்றார். பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர்.கணேசன் தலைமை வகித்து பேசுகையில், படிப்பதற்கு ஏதுவான ஊக்குவிப்பு, அரசு உதவி வழங்கப்படுகிறது. மாணவர்கள் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற முன்வர வேண்டும்,'' என்றார்.


சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, பந்தலூர் துணை தாசில்தார் குமார் ராஜா பேசுகையில், பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்க மாணவர்கள் சாதிக்க வேண்டும். சிரமம் பாராமல் படித்தால், எதிர்காலம் வளமுள்ளதாக மாறும்,'' என்றார்.காந்தி சேவை மைய செயலர் சந்திரன் பேசுகையில், ""படிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்க, பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது. பெற்றோர் வழிகாட்டுதலின் படியும், ஆசிரியர்கள் ஆலோசனையின் படியும் கீழ்படிந்து, படிப்பில் மட்டும் நாட்டம் செலுத்தி, சாதிக்க உழைக்க வேண்டும்,'' என்றார்.


பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ரஷீதா, பிளஸ் 2 வகுப்பில் முதல் இடம் பெற்ற வாசுகி ஆகியோருக்கு, கேடயம், பணமுடிப்பு வழங்கப்பட்டன.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம்.  பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) செந்தில், ஆசிரியர் சித்தானந்த், மற்றும்
காந்தி சேவை மைய தலைவர் தாஸ், பொருளாளர் கனகா,
செயற்குழு உறுப்பினர்கள் கபீர், அபுதாகீர், செந்தாமரை பங்கேற்றனர். மைய அமைப்பாளர் நவுசாத் நன்றி கூறினார்.


விழிப்புணர்வு சதவீதம் குறைவு

விழிப்புணர்வு சதவீதம் குறைவு











ஊட்டி:"நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்' என தெரிவிக்கப் பட்டுள்ளது














நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் ஆலோசனை மையம் சார்பில், ஊட்டியில், மக்கள் ஆலோசனை மையம் துவக்கப்பட்டது. மன்ற நிர்வாகி மஞ்சுளா வரவேற்றார்.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் மைய மற்றும் மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:














நுகர்வோர் விழிப்புணர்வு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது; சிலரால் மட்டுமே நுகர்வோர் குறித்து பேசப்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; 12 சதவீதத்தினர் மட்டுமே நுகர்வோர் குறை தீர்மன்றத்தை அணுகுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.














நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பல சிறப்பம்சம் இருந்தும், அதை பயன்படுத்த இயலா மல், அறியாமல் உள்ளனர். இந்நிலை மாறி விழிப்புணர்வு பிரசாரம், கருத்தரங்கு, பயிற்சி முகாம்கள் நடத்தினாலும் முழுமையாக சென்றடைவதில்லை. மக்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே சிந்திக்கின்றனர். ஏமாறும் மக்கள், நிவாரணம் பெறவும், புகார் செய்யவும் வழி தெரியாமல் உள்ளனர். இவற்றை தெளிவுபடுத்தவும், பாதிப்புக்கு நிவாரணம் பெறவும் உதவ, ஆலோசனை மையம் துவக்கப்பட்டுள்ளது.














மையத்தை அணுகி தொடர்பு கொண்டால், நுகர்வோருக்கான ஆலோசனை மற்றும் வழிமுறை தெளிவுபடுத்தப்படும். 94885-20800, 93453-98085, 94880-94501, 96265-85301 என்ற எண்களில், காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறினார்.மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட நுகர்வோர் செயல்பாட்டு இயக்க செயலர் வக்கீல் ஆனந்தம், நீலகிரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்


உலக  சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு முகாம் நடத்திய படங்கள் 
நாள் : 6 .௦06.2010
இடம் : அரசு உயர் நிலை பள்ளி அத்திக்குன்னா
௦  




























கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல்


பாதுகாப்பு மையம் மக்கள் மையத்திற்கு


சிறந்த தன்னார்வ அமைப்புக்கான நினைவு பரிசினை


மாவட்ட நிர்வாகம் மற்றும்


இந்திய செஞ்சிலுவை சங்கம் வழங்கியது பரிசினை


அபுபபாஜி அறக்கட்டளை நிறுவனர்


வழங்கியபோது எடுத்தப்படம்


பரிசினை மைய தலைவர்


சிவசுப்ரமணியம் பெறுகின்றார். அருகில்


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமலைசாமி


இந்திய செஞ்சிலுவை சங்கம் மாவட்ட சேர்மன் கேப்டன் மணி


ஆகியோர் உள்ளனர்.


செவ்வாய், 6 ஜூலை, 2010

பெருகும் வாகனங்கள்...! அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்...!


பெருகும் வாகனங்கள்...! அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்...!



நாட்டின் மக்கள் தொகையைப் போலவே, வாகனப் பெருக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.



கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கான்ட்ராக்டர்கள் கோல்மால், அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என பல்வேறு காரணங்களால் இச்சாலை மேம்படுத்தும் பணிகளில் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப தரமான சாலை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் அரசு இயந்திரங்கள் திணறுகின்றன.அதிலும், இயந்திர வாழ்க்கை வாழும் சென்னைவாசிகள், சாலையில் மின்னல் வேகத்தில் பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் விபத்துக்களும், உயிரிழப்புக்களும் தான் அதிகரிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில், சென்னை நகரில் மட்டும் விபத்துக்களில் 888 பேர் பலியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் அதிகமான வாகனங்கள் உள்ளன.



ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு நாள் ஒன்றிற்கு 2416 வாகனங்கள் என்ற நிலை, 2007ல் 2645 ஆக உயர்ந்தது. இந்த வகையில் கடந்த 2006-07ம் ஆண்டு 91 லட்சம் வாகனங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டது. 2007-08ம் ஆண்டு ஒரு கோடியே 69 ஆயிரமாக மேலும் உயர்ந்தது. இதில், ஏழு லட்சத்து 6 ஆயிரம் வாகனங்கள் டிரான்ஸ்போர்ட் வாகனங்களாகவும், 93 லட்சத்து 63 ஆயிரம் வாகனங்கள் சொந்த உபயோகங்களுக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 82 சதவீதம் இருசக்கர வாகனங்கள்.சென்னை மாநகரில் கடந்த 2008ம் ஆண்டு 6823 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 888 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பை ஏற்படுத்திய 859 விபத்துக்களில், 857 விபத்துக்கள் டிரைவர்களின் தவறால் நடந்தவை.

இதில், 885 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மோசமான சாலை காரணமாக நடந்த இரண்டு விபத்துக்களில் மூன்று பேர் இறந்துள்ளனர்.அரசு பஸ்களால் நடந்த 110 விபத்துக்களில் 117 பேரும், தனியார் பஸ்களால் நடந்த 24 விபத்துக்களில் 24 பேரும், லாரிகளால் நடந்த 189 விபத்துக்களில் 199 பேரும், கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகனங்களால் நடந்த 176 விபத்துக்களில் 179 பேரும், இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர பல்வேறு இடங்களில் நடந்த 66 விபத்துக்களில் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 4296 சிறுவிபத்துக்களில், 5060 பேர் லேசான காயமடைந்துள்ளனர். அதிலும், இருசக்கர, இலகு ரக வாகனங்கள் தான் விபத்துக்கள் அதிகமாக ஏற்படக் காரணமாக இருந்துள்ளன.