அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஆண்மை விருத்தி மருந்துக்காக பலியாகும் சிட்டுக்குருவிகள்

கவுந்தப்பாடி: சிட்டுக்குருவிகள் இனம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஆண்மை விருத்தி மருந்துக்கு பயன்படுவதாகக் கூறி, அவற்றின் இனமே அழிந்துவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் கம்பங் கொல்லையிலும், கரும்பு காட்டிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை, மொபைல் போன் டவர் மூலம் காற்றில் பரவும் மின்காந்த அலைகளால் வெகுவாக குறைந்தன. ஆண்மை விருத்திக்கு உதவுவதாக நம்பப்படுவதால், இவை கூட்டம் கூட்டமாக தற்போது கொல்லப்படுகின்றன. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம், ஆப்பக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில், கரும்பு காட்டுக்குள் கூடு கட்டி வாழும் சிட்டுக்குருவிகளை வலை விரித்து பிடிக்கின்றனர். அவற்றை கொன்று தோலுரித்து, ஒரு குருவி ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பை சீராக்கவும், ஆண்மை விருத்திக்கும், சிட்டுக்குருவி கறியை சமைத்து உண்கின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில வைத்தியர்கள், ஆண்மை விருத்திக்கு உதவும் சிட்டுக்குருவி லேகியம் தயாரிக்க, கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு குருவியின் கறி, அதிகபட்சம் 50 கிராம் மட்டுமே இருக்கும் என்பதால், ஒரு நபரே 20க்கும் மேற்பட்ட குருவிகளை வாங்கிச் செல்வர். ஒவ்வொரு நாளும், பல நூறு சிட்டுக்குருவிகள் கொல்லப்படுவதால், அவற்றின் இனமே அழிந்துவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக