அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சுற்றுச்சூழல் மாசுபடுதல்



சுற்றுச்சூழல் மாசுபடுதல் 
மாசுபடுதல்


வரையறை
வாயு, நீர், திடபொருள் போன்ற காரணிகளோ, வெப்பம், இரைச்சல், கதிர்வீச்சு, போன்ற ஆற்றல்களோ தங்களது இயல்பு, இருப்பிடம் மற்றும் அளவின் மூலம் சுற்றுப்புறத்தின் தன்மைகளை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாக்கி அதன் அங்கங்களான மனிதர்கள், விலங்குகள், செடிகள் போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், பாதுகாப்பு (அல்ல) நலத்திற்கு தீங்கு விளைவிப்பது மாசுபடுத்துதல் என்றழைக்கப்படும்.
மாசுபடுத்துதல் மூலம் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுற்றுப்புறத்தில் புகுத்தி அவற்றிளுள்ள உயிரினங்களுக்கும் சுற்றுச்கூழல் இயக்கத்திற்கும் தீங்கு மற்றும் அசெளகார்யங்களை மாசுபடுத்திகள் (pollutants) உண்டாக்குகின்றன. மாசுபடுதல் வேதியியல் பொருள்கள் மூலமோ, ஆற்றல்களான இரைச்சல், வெப்பம் (அ) ஒளி மூலமோ ஏற்படுகின்றது. மாசு உண்டாக்கும் மாசுபடுத்திகள் என்பவை வேற்று பொருள்களாகவோ, ஆற்றலாகவோ, இயற்கையாக பொருள்களாகவோ இருக்கலாம். இயற்கையில் அவை அளவினை மீறும் பொழுது மாசுபடுத்திகளாக கருதப்படுகின்றது. மாசுபடுதல் ஓரிட மூலம் (அ)
முன்னுரை
மாசுபடுதல் இரு காரணிகளால் ஏற்படுகின்றது. இயற்கையாகவோ, மனித செயல்களின் மூலமோ ஆகும். இயற்கையாக ஏற்படும் மாசு நம் வாழ்வில் அதிக தாக்குதல ஏற்படுத்தாது. ஏனெனில் அவை மீண்டும் உயிர்த்தெழும் ஆற்றல் கொண்டவை. ஆனால் மனித செயல்களினால் ஏற்படும் மாசு மிகுந்த இன்னல்களை கொடுக்கக்கூடியவை. மக்கள் பெருக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதற்கு மூலதனமாகும். பொதுவாகவே மக்கள் தொகை பெருக்கத்தினால் நமது வாழ்விற்காக இயற்கையின் ஆதாரங்களை நாம் சார்ந்து உள்ளோம். நமது தேவைகள் அதிகரிக்கும் பொழுது இயற்கையோடு உள்ள தொடர்பும் நமக்கு அதிகரிக்கின்றது. அதே போல் மனிதர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினை இயற்கையின் மேல் திணிக்கும் பொழுது அதன் மூலம் நன்மைகள் மட்டுமன்றி பக்க விளைவுகளும் ஏற்படும்.

சிறிய மக்கள் தொகையானது எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் இயற்கையை தாக்கிவிடாது. ஆனால் அதிக மக்கள் தொகையானது மக்களின் தேவைக்கேற்ப இயற்கையின் அழிவுக்கு வழிவகுக்கின்றது. மாசுபடுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேதனையான விஷயமாகும். மாசுபடுதல் என்பது ஒரு நாளில் ஏற்பட்டது அன்று. அது மனிதர்களின் தவறினால் பல்லாண்டுகளாக ஏற்பட்ட விளைவாகும். நமது இயற்கை ஆதாரங்களை நன்கு பராமரித்து, மேன்மேலும் ஏற்படும் மாசு வகைகளை தடுத்து நாம் வாழுமிடத்தினை நல்ல இடமாக மாற்றவேண்டும்.
இப்பகுதியில் ஆறுவகையான மாசுபடுதல் விவரிக்கப்பட்டுள்ளது.
  • நிலம் மாசுபாடு
  • நீர் மாசுபாடு
  • காற்று மாசுபாடு
  • ஒலி மாசுபாடு
  • வெப்பம் மாசுபாடு
  • கதிரியக்கம் மாசுபாடு
மண் மாசுபடுதல்

மேலோட்டம்
மண் பின்வரும் காரணிகளால் மாசுபடுகின்றது.
  • திடக்கழிவுகள் தேக்கத்தால் ஏற்படுவது
  • உயிரியல் சுழற்ச ஏற்படாத பொருள்களின் சேர்க்கையால்
  • வேதியியல் பொருள்கள் நச்சுகளாக மாறுதல்
  • மண் வேதியியல் பங்கீடுகளின் மாற்றத்தால் ஏற்படுவது  (மண்ணின் வேதியியல் குணங்களில் ஏற்படும் சம நிலையின்மையால்)
இந்த பூமியில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும், அதன் ஒவ்வோர் பொருளின் அடித்தனத்தையும், வாழ்வினையும்
  • ஒரு வருடத்தில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பின் இழப்பு
  • ஒரு வருடத்தில் 24 மில்லியன் டன் மேல்புர மண் அரிப்பு ஏற்படுகிறது
  • ஒரு வருடத்தில் 15 மில்லியன் ஏக்கர் வேளாண் விளைநிலங்கள் அதிகபட்ட பயன்பாட்டிலும் தரமற்ற மேலாண்மையினாலும் இழக்கப்படுகின்றது
  • பாலைவனமாக மாறும் நிலங்கள் மூலம் 16 மில்லியன் சதுர மைல் அளவு உலகின் நிலப்பரப்பு இழக்கப்படுகின்றது
இரண்டு வகையான முறையற்ற செயல்பாட்டால் நிலங்கள் / மண்கள் வீணாகிறது. அவை பின்வருமாறு
1.ஆரோக்கியமற்ற மண் மேம்பாட்டு முறைகள்
  • முறையற்ற உழவினால் மண்ணின் தன்மை வீணாகுதல்
  • அங்ககம் பொருட்களின் நிலையற்ற விகிதம் அதாவது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற அங்ககப் பொருட்களின் விகிதம் நிலையற்று இருப்பதினால் மண்ணின் செழுமை மாறுவதோடு மட்டுமல்லாமல், பாலைவன மண்ணாக மாறுதல்
  • ஊட்டப்பொருள் (அ) சத்துப்பொருட்கள் மண்ணில் முறையற்ற பாதுகாப்பில் இருக்கும் போது, செயற்கை உரங்களானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் உயிற்சிதைவற்ற நிலையிலிருப்பதால் இவைகள் மண்ணில் குவிகின்றது. இவை மண்ணிலுள்ள உயிரணுக்களான பாக்டீரியா, பூசணங்கள் மற்றும் பிற உணிரணுக்களை அழிக்கிறது
  • மண்ணின் அமிலத்தன்மையின் முறையற்ற பாதுகாப்பினால் பயிரப்படும் வெவ்வேறு பயிர்களின் தன்மையை பாதிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மண்ணின் கனிமங்களின் தன்மையை குறைக்கிறது. அதிக அமிலமுள்ள மண்ணில் கனிமங்கள் கரையத்தக்க நிலையிலிருப்பதால் மழைக்காலத்தில் அவை கரைந்து மழைநீருடன் சென்றுவிடுகிறது. களர் மண்ணில் கனிமங்கள் கரைக்க முடியாத தன்மையில் இருப்பதால் கலப்பு அங்ககப் பொருட்களை உறிஞ்சும் தன்மையற்று காணப்படுகிறது
2. முறையற்ற நீர்பாசன முறைகள்
  • குறைவான வடிதல் தன்மையுடைய மண்ணின் நிலையால் மண்ணில் உப்பு படிதல் அதிகமாகி உவர்நிலையை அதிகரிக்கிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சிகள் பாதிப்பது மட்டுமல்லாமல் பயிர்களை அழைக்கிறது.
  • நீர் பாசனமற்ற நிலமானது குவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை பயன்பாட பொருள்களை பண்படுத்துவதில்லை. இதனால் நிலத்தின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது
  • சரியற்ற நீர்பாசனமானது மண்ணின் ஈரத்தன்மையை குறைப்பதுடன் தாதுக்களின் கரைப்பானில் பற்றாக்குறை ஏற்படுகிறது
ஆதாரங்கள் மற்றும் முறைகள்
நிலத்தின் மாசுபாட்டிற்கு கீழ்கண்டவை முக்கிய ஆதாரமாக நிகழ்கிறது. அவைகளின் வகைகள் பின்வருமாறு.
  • வேளாண்மை
  • சுரங்கம் மற்றும் கற்சுரங்கம்
  • கழிவு தேக்கம்
  • கழிவு நீரோட்டம்
  • வீட்டுமனைகள்
  • தகர்ப்பு மற்றும் கட்டுமானம்
  • தொழிற்சாலைகள்
மண் / நிலம் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்
மண் மற்றும் நீர் மாசுபாடு
  • இரத்த புற்றுநோயை உள்ளடக்கிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமைதல்
  • குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பாக அமைதல்
  • பாதரசமானது சிறுநீரக சேதத்தையும், சைக்கலோடைனஸ் கல்லீரலில் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது
  • நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் மத்திய நரம்பு இயக்கத்தில் ஒருவித பதற்ற அழுத்தம் ஏற்படுதல்
  • தலைவலி, குமட்டல், களைப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் நோய் ஏற்படுதல்
மற்றவை
  • பாதிக்கப்பட்ட மண்ணுடன் நேரடியாக (பூங்கா, பள்ளி போன்றவற்றை பயன்படுத்துதல்) அல்லது மறைமுகமாக (ஆவியாகுதல்) போன்றவற்றுடன் தொடர்பு
  • மண் மாசுபாடு என்பது நீர் மாசுபாட்டின் இரண்டாம் நிலை மற்றும் காற்று மாசுபாட்டின் படிதல் (எ-டு - அமில மழை)
  • மாசுபாடுடைந்த மண்ணில் பயிர்கள் விளைவிக்கப்படுவதால் உணவு பாதுகாப்பில் பிரச்சனைகள் ஏற்படுதல்
  • இது நீருடன் தொடர்புடையவையாகும். நீரில் பாதிப்பு இருக்கும் போது மண்ணானது மாசுபடுகிறது
மண் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு:
  • நுண்ணுயிர்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் கணுக்காலிகள் போன்றவையானது மண்ணின் சூழ்நிலையை பொருத்து மாறுபடும். இவை முதல்நிலை உணவு சங்கிலியின் சில பகுதிகளை அழித்து மற்ற விலங்குகளை உண்ணும் விலங்கு இனங்களுக்கு எதிர்மறை விளைவாக அமைகிறது
  • சிறிய விலங்குகள் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன உணவுகளை உட்கொள்ளும்போது இந்த உணவு சங்கிலி, பெரிய விலங்குகள் வரை பாதிக்கிறது. இதனால் இவைகளின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மண் மாசுபாட்டினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவு:
  • தாவரங்களில் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டு மற்றும் விளைச்சலில் குறைவு
  • மரங்கள் மற்றும் தாவரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை உறிஞ்சி உணவு சங்கிலி வரை அதன் நச்சுதன்மையை கொண்டு வருதல்
உப்புத்தன்மையுடை மண்:
மண்ணின் உப்புத்தன்மையை அதிகரிப்பதால் மண்ணின் தன்மையானது பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பற்றாக்குறையாக உள்ள சாக்கடை வசதிகள் மற்றும் நல்ல பாசனவசதி உள்ள பகுதிகளில் உப்பானது எளிதாக மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. மண்ணில் அடிப்புறத்திலுள்ள உப்பானது கோடை காலத்தின் போது ஏற்படும் வெடிப்பில் மேலே வந்து மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. குறைந்த வடிகால் வசதியுடன் இந்நிலையில் தீவிர சாகுபடி மேற்கொள்ளும் போது மண்ணின் உவர்தன்மையானது அதிகரிக்கிறது.
நம் நாட்டில் உவர் நிலமானது 6 மில்லியன் ஹெக்டேராகும் பஞ்சாப்பில் மட்டும் 6000-8000 ஹெக்டேர்களாகும். உலகின் வறண்ட மற்றும் வறண்ட பகுதியில் 6 ல் ஒரு பகுதி அதிக உவர்தன்மையை கொண்டிருக்கும்.
சில மண் மாசுக்கள் மற்றும் அதன் தாக்கங்கள்:
  • ஃபுளோரைட்ஸ்:
பச்சையத்திலுள்ள மாங்கனீசுடன் ஃபுளோரைட்ஸ் இணைந்து ஒளித்தொகுப்பினை தடுக்கிறது. இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடுகிறது. ஃபுளோரைடு மாசுபாட்டிற்கு மக்காச் சோளம் எளிதில் பாதிக்கக்கூடிய பயிராகும். இவற்றின் தாக்கத்தால் மனிதர்களின் பற்களில் கறை எற்படும். எலும்பு ஃபுளோரைட்ஸினால் வழுவற்ற எலும்பு படகு போன்ற அமைப்பு மற்றும் வளைந்த முழங்கால் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
  • தழைச்சத்து உரமிடுதல் (நைட்ரேட்ஸ் + நைட்ரைடு):
நச்சுத்தன்மையானது இலைகள் மற்றும் பழங்கள் மூலம் உணவு சங்கிலியில் நுழைகிறது. பாக்டீரியாக்கள் உணவுப் பாதையில் நைட்ரேட்ஸை நைட்ரைட்டாக மாற்றுகிறது. பின்னர் இவை இரத்தத்தில் நுழைந்து ஹீமோகுளோபினுடன் இணைந்து மெட்டா ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜனின் கடத்தும் திறமானது குறைகிறது. இதன் தாக்கத்தால் மெத்தனமோகுளோபிநீமியா என்ற நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் இந்த நோயினால் குழந்தைகளின் நிறம் நீலமாக மாறுகிறது. இந்த நைட்ரேட் நச்சுக்களின் போது மெத்தலின் புளு என்ற மருந்தினை ஊசியின் மூலம் குழந்தைகளுக்கு செலுத்தப்படாமலிருந்தால் உயிர் சேதம் ஏற்படும். மேலும் இவை மனிதர்களை தாக்கும் பொழுது மூச்சுத்தினறல் ஏற்படும்.
  • களைக் கொல்லிகள்:
இவைகள் வளர்ச்சிதை மாற்றத்தை தடுப்பதனால் ஒளிச்சேர்க்கையானது தடுக்கப்பட்டு மற்ற வளர்ச்சிதை மாற்ற செயல்களானது தாவரங்களை அழித்து விடுகின்றது. சில தருணங்களில் போலியம் (phloem) திசுவானது அங்கக உணவினை தடுப்பதால் பயிரானது அழிந்து விடுகிறது.
மாசு கட்டுப்பாடு:
காற்று வழி தெளிப்பான்:
  • பெட்ரோல் பொருட்களிள் வெடிக்கும் தன்மையை குறைப்பதால் அவை மண்ணினால் உறிஞ்சப்படுகிறது. இவை நிலத்தடிநீரில்படிந்து பாதிப்பினை தடுக்கும் தடுப்பான் இவை நிலகீழ் பகுதியில் அமைந்து பின்னர் இவை கரையும் தன்மையிலிருந்து நீராவி பகுதிக்கு செல்கிறது.
வேளாண் நடவடிக்கைகள் மூலம் மண் மாசு கட்டுப்பாடு:
  • பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டை குறைத்தல்
  • சரியான அளவில் உரத்தினை பயன்படுத்துதல்
  • பயிர் விளைச்சல் நுட்பத்தினை அதிகரிப்பதன் மூலம் களை வளர்ச்சியை தடுத்தல்
  • தனிப்பட்ட ஒரு குழியில் தேவையற்ற பொருட்களை குவித்தல்
  • மேய்தலை கட்டுப்படுத்துதல் மற்றும் வனமேம்பாடு
  • காற்று அரிப்பினை தடுக்க காற்று தடுப்பான் அல்லது கவசத்தினை அமல்படுத்துதல்
  • மண் அரிப்பினை தடுக்க அணை மற்றும் சரிவு பகுதியில் மண் கட்டமைப்பு தாவரங்கள் அல்லது புற்களை வளர்த்தல்
  • காடு வளர்ப்பு மற்றும் மீண்டும் வன வளர்ப்பு
நீர் மாசுபடுதல்
மேலோட்டம்
நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொருள்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்பட்டு அதன் தரம் குறைவதே ஆகும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் ஏற்படுவதாகும். நீர் மாசுபாடு என்பது பெருங்கடல்கள், ஏரிகள், நீரோட்டங்கள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் உள்ள இடங்கள் அனைத்திலும் ஏற்படக்கூடிய தூய்மைக்கோடாகும். இதனால் நச்சுப்பொருள்கள் தேவைப்படும் பொருட்கள், எளிதில் கரையக்கூடிய பொருள்கள் கதிர்வீச்சுகள் ஆகியவற்றின் வெளியீடு ஏற்பட்டு நிலத்தின் அடியில் மாற்றம் படிந்துவிடும். இதனால் நீர் நிலைகளின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக வளம்குன்றிய நீர்நிலைகள் (Entrophication) என்று நிலைமை ஏற்படும். அதாவது நீர் நிலையில் மாசுபடுத்திகளினால் அதிகமாக வளர்ந்து பரவுவதால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.
சுற்றுப்புறத்திற்கு மணிச்சத்தினால் (phosphorus) ஏற்படும் தாக்கம்:
அதிகமான மணிச்சத்து கேடு விளைவு
  • வளம் குன்றிய நீர்நிலைகள்
  • பிரணவாயுவின் பற்றாக்குறையினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் நச்சுப்பொருள்கள் உண்டாகும்.
  • குடிநீரை தூய்மைப் படுத்துவதற்கான செலவு அதிகமாகுதல்.
  • அப்பகுதியின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படுதல்
  • வண்டல் படிவங்கள் அதிகரிப்பதால் பொழுதுபோக்கிற்கான நீர் உபயோகித்தல் தடை ஏற்படுதல்
  • நீரின் மேற்புறத்தில் ஏற்படும் படிவங்கள் மற்றும் துர்நாற்றம்
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
வளம் குன்றிய நீர்நிலைகள்
Eutrophication
வளம் குன்றிய நீர்நிலைகளை குறைக்கும் வழிமுறைகள்
  • நீர் பிழப்பு பகுதிகளின் மேலாண்மை முறைகள்
  • மணிச்சத்து உரங்களை தேவையான அளவு உபயோகித்தல்
  • மணிச்சத்து உரங்களின் வகை
  • அங்கக உரங்கள் உபயோகப்படுத்தல்
  • வடிகால் வசதிகளை மாற்றியமைத்தல்
இரசாயன நேர்த்தி
நீர் சுழற்சி மற்றும் மாசுபாடு
நீர் சுழற்சி என்பது நீர் சுழலும் பாதையாகும். பூமியில் நீரானது மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதுவே பூமி மற்றும் வளிமண்டலத்தின் இடையே ஏற்படும். நீர் சுழற்சி (அ) தொடர் நீர் இயக்கம் என்றழைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளில் இது நடைபெறுகின்றது.
  • ஆவியாதல்: நீரானது திரவத்திலிருந்து வாயுத்தன்மையாக மாறுதல் இலைத்துளை மூலம் ஆவியாகுதல்
  • படிந்துவிடுதல்: ஆவியானது குளிர்ந்த பதத்தில் படிந்துவிடுதல் (குளிரூட்டப்பட்ட அறை)
  • மழை பெய்தல்: பூமிக்கு மீண்டும் வரக்கூடிய நீர் (மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் பெரியதாகி மழையாக பெய்யும்)
நீர் சுழற்சி மற்றும் மாசுபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு
நீர் சுழற்சியின் படி, இயற்கையின் நிகழ்வாக நம்மைச் சுற்றி உள்ள நீரானது நிலத்தினுள் உறிஞ்சப்பட்டு ஆறுகள் மூலம் நீரோடைகளாக சென்று கடலினை அடையும். உயிர்சிதைவு ஏற்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நன்மை அளிக்கும் முறையில் மாற்றப்படும். அதுபோல் கனிம மாசுபடுத்திகள் பரந்து இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பது இல்லை.
சிறிய அளவிளான அங்கக மற்றும் கனிம மாசுபடுத்திகள் நீரோடைகளில் பாதுகாப்பாக சிதைக்கப்பட்ட கடலுள் கலந்து விடுவதால் சூழிலடத்திற்கு ஏதும் தீங்கு இல்லை. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் இருந்தால் கடலோர உயிரினங்களை பாதிக்கும்.
வழிகள் மற்றும் முறைகள்
நீர் மாசுபாடு ஏற்படுத்தும் முக்கிய வழிகள் பின் வருவனவாகும்.
  • பெட்ரோலிய பொருட்கள்
  • செயற்கை வேளாண் இரசாயனங்கள்
  • கடின உலோகங்கள்
  • தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள்
  • அளவிற்கு அதிக அங்கக பொருட்கள்
  • படிமானங்கள்
  • தொற்று ஏற்படுத்தும் கிருமிகள்
  • காற்று மாசுபடுதல்
  • வெப்ப மாசுபாடு
  • மண் மாசுபாடு
நீர் மாசுபாடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு
மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள்,
  • டைபாய்டு
  • அமிபியாசிஸ்
  • ஜியார்டியாசிஸ்
  • அஸ்காரியாசிஸ்
  • கொக்கி புழுக்கள்
மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள்
  • தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல்
  • மூச்சு திணறல் நோய்கள்
  • மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், வாந்தி மற்றும் வயிற்றுவலி
வாந்தி மற்றும் வயிற்றுவலி
இரசாயனங்கள் (பூச்சிக்கொல்லிகள், ஹைட்ரோகார்பன், அங்கக மாசுபடுத்திகள், கடின உலோகங்கள்) போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள்.
Water Production
  • புற்று நோய் - இரத்தப் புற்று நோய்
  • இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிப்பாதைகளை தடுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்
  • நரம்பு மண்டலங்களுக்கு சேதம்
  • சிறுநீரகம் மற்றும் கல்லுரலுக்கு சேதம்
  • டிஎன்ஏ விற்கு சேதம்
பாதரசத்தினால் ஏற்படும் பாதிப்பு
  • கர்ப்பத்தினுள்: நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, குறைந்மத பதிவுகள், கற்பதற்காக ஏற்படும் கோளாறுகள், காது கேளாண்மை மற்றும் மூளை பாதிப்பு
  • பெரியவர்களுள்: நியாபக மறதி, உறுப்பின் காழ்ப்பு, பக்கவாத நோய்கள், இதய நோய்கள் மற்றும் மரணம்.
பிற தகவல்கள்:
நீர் மற்றும் மாசுபட்ட மண்ணும் சேர்ந்தால் நீர் மாசுப்பாடு ஏற்படும் (அ) காற்று தொற்றுகள் (உதாரமாண அமில மழை) போன்றதும் நீரினை மாசுபடுத்தும்.
மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும். (உதாரணமாக மீனில் உள்ள அதிக பாதரச அளவு)
மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.
நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
  • உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து அதனை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும். மேலும் மீன்களில் நோய்களை பரப்புகின்றது.
Water Pollution
எண்ணெய் பூசப்பட்ட வாத்து
  • இரசாயன மாசுபாடினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரான பாதிப்புகள் ஏற்படும். அவற்றின் இனப்பெருக்கம், வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும்
  • நீரில் உள்ள பாதரசம் நேர் எதிரான அசாதாரண குணங்கள் குன்றிய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் மரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்
  • அழியாத அங்கக மாசுபடுத்திகள் மீன் இனங்களுக்கு மரணம் மற்றும் குறைபாடுகளை எற்படுத்தும்
  • நீரில் உள்ள அதிக உப்பு உயிரினங்களை அழித்து விடும்.
நீர் மாசுபாட்டினால் மரம் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
நீரில் வளரும் செடிகளை ஒளித்தொகுப்பினை பாதித்து அதனால் அவற்றின் சூழ்பத்தினையும் பாதிக்கும்.
நீரில் உள்ள மாசுபடுத்திகளை உட்கொள்ளும் செடிகள் அவற்றை உணவுச் சங்கில் மூலம் உண்ணும். மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பரவச்செய்கிறது.
நீரில் உள்ள அதிகப்படியான உப்பு (சோடியம் க்ளோரைடு) செடிகளை அழித்துவிடும்.
கட்டுமானங்களில் இருந்து விழும் மரக்கட்டைகள் களிமண் மற்றும் மணல் போன்றவை சரிவதாலும் செடிகள் அழிந்து விடும்.
நீரில் உள்ள களைக்கொல்லிகள் செடிகளை அழித்துவிடும்.
நீர் மாசுபாடு மேலாண்மை:
உயிர்வழி நிவர்த்தி:
நுண்ணுயிர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி நிலைப்பட்ட வலயினுள் உள்ள அங்கக பாகங்களின் உணிர்சதைவை துரிதமாக்குதல்.
முழுமையடைந்த பெட்ரோலியம் ஹெட்ரோகார்பன் பொருள்களுக்கு (எம்.டி.பி.இ தவிர்த்து நீள் சங்கிலி அதிக மூலக்கூறு எடை மற்றும் கரையாத பொருள்களால் ஆன அனைத்தும்) பொருந்தும்.
பிற நிலைப்பட்ட வலய நிவர்த்தி தொழில் நுட்பங்கள் (எ-டு. மண் நீராவி பிரித்தெடுத்தல், உயிர்காற்றோட்டம்)
வரையறை முறைகள்: மின்னணு ஏற்பான் (ஆக்ஸிஜன், நைட்ரேட்), ஊட்டச்சத்தி (நைட்ரஜன், பாஸ்பரஸ்), ஆற்றல் மூலம் (கார்பன்).
நிவர்த்தி முறைகள்: காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்று மாறுபட்ட (நைட்ரேட் சுவாசம்), காற்றில்லாத (பிராணவாயு அல்லாத சுவாசம்), ஒன்றுபட்ட வளர்சிதை மாற்றம்.
இரு நிலை பிரித்தெடுத்தல்:
  • நிலத்தை நீரினை மாசுபடுத்தும் அனைத்து பொருள்கள் பெட்ரோலிய பொருள்களின் தனிப்பட்ட நிலை, நிலத்தடியிலிருந்து ஆவியாகும் ஹைட்டேரா கார்பன் ஆகியவற்றை வெளியேற்றுதல்
  • அதிகமான வெளியேற்றம் ஆற்றல் கொண்டதால், பெட்ரோலிய பொருட்களின் உயிர்சிதைவினை அதிகப்படுத்துவதுடன் நிலத்தடியிலுள்ள பல்வேறு நிலை கொண்ட பொருட்களையும் அகற்றிவிடும்
  • வரையறை முறைகள்: காற்றற்ற , நீரளவையியல் மற்றும் நீர்
  • நேர்த்தி முறைகள்:
  • ஒரு குழாயினை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை அதிவிரைவு இரு நிலைஓட்டமாக வெளியேற்றுதல்
  • இரு (அ) அதிகமான குழாய்களை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை வெளியேற்றுதல்
இயற்கையாக அளவினை குறைத்தல்:
  • இயங்கா நேர்த்தி முறையான இது இயற்கையான முறைகளை கொண்டு பங்குகளை சிதைத்தல் மற்றும் பரவவிடுதல் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்
  • பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்தி குறைப்பதுடன் விரைவில் தாக்குதல் ஏற்படும் பொருட்களுக்கு அது பரவாமல் தடுக்கும்.
  • இயக்க நேர்த்தி முறைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவினை குறைக்கும் இடங்களுக்கு பொருந்தும்.
முறைகள்:
  • அழித்தல் (உயிரியல் முறைகள்): காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்றற்ற (பிராணவாயு அற்ற சுவாசம்), மற்றும் குறைந்த காற்றுள்ள (குறைந்த பிராணவாயு அளவு)
  • அழித்தல் அல்லாத மறைகள் (இயற்பியல் முறைகள்): ஆவியாக்குதல், பரப்புதல் (இயந்திர முறை கலப்பு மற்றும் மூலக்கூறு பிரித்தல்) மற்றும் உறிஞ்சுதல்
உயிரியல் முறைகள்:
இயற்கையான உயிர்சிதை முறைகள் ஏற்படும் வேகத்தினை இரசாயனங்கள் (அ) உயிரினங்களை கொண்டு அதிகப்படுத்துதல்
சிந்திய எண்ணெய்களை கடலோரங்கள் மற்றும் நன்செய் நிலங்களில் உள்ள சூழிலடம் பாதிக்காமல் அகற்றுதல்.
வரைமுறை முறைகள்:
காற்றுள்ள (அ) காற்றல்லாத நுண்ணுயிர்கள் மூலம் மக்குதல் (எ-டு. பாக்டீரியா)
நேர்த்தி முறைகள்:
  • உரமிடுதல்: உயிர்சிதைவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மாசுபட்ட சுற்றுப்புறத்தில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களை சேர்க்க வேண்டும்
  • விதையிடுதல்: நுண்ணுயிர்களை இருக்கும் இளங்கை மண்ணில் சேர்த்தல்
பரவச் செய்யும் பொருள்:
  • புறஈர்ப்பான்களை கொண்ட இரசாயனங்கள் எண்ணெயினை சிறு துகள்களாக உடைத்து நீரினுள் கலந்து பின்னர் காற்று அலைகள் மற்றும் ஓட்டங்கள் போன்ற இயற்கை செயல்களினால் மேலும் உடைந்துவிடுதல்
  • கடலில் உள்ள நீரின் உப்பு அளவு, வெப்பநிலை மற்றும் உள்ள நிலைகள் பரவும் திறனை நிர்ணயிக்கும்
  • இயந்திரங்கள் மூலம் அல்லது தூய்மைபடுத்துதல் கடினமாகும் பொழுது கடலின் நிலை கரடுமுரடாக அமைந்திருந்தால் இம்முறையை பின்பற்ற வேண்டும்.
ஈர்ப்பான்கள்:
  • நீரினை முழுக்கிவிடும் அதாவது எண்ணெய் விரும்பும் மற்றும் நீர் விரும்பாத பொருள்கள்
  • எண்ணெய் சிந்தியுள்ள நிலைகளில் உபயோகிக்கலாம். இது பின்வரும் காரணிகளை நிர்ணயம் செய்யும்
  • ஈர்பான்கள் வகை மற்றும் எண்ணெயின் வகையை கொண்டு உறிஞ்சும் திறன் வேறுபடும்
  • நீர் வழிந்தோடும் தன்மையை பொறுத்து எண்ணெய் தக்க வைத்துக் கொள்ளுதல் அமையும்.
  • சுலபமாக உபயோகிக்கும் முறை ஈர்ப்பான்களின் வகை மற்றும் மண்ணின் வகையை கொண்டு அமையும்.
  • ஈர்க்கும் பொருள்
  • இயற்கை அங்கக பொருள்: மிதப்பான்களில் இணைக்கப்பட்ட மரத்தூள்கள் தங்களது எடையில் 3 முதல் 15 முறை வரையில் எண்ணெயினை முழ்கடிக்கும்.
  • இயற்கை கனிம: களிமண், பெர்லைட், வெர்மிகுலைட், கண்ணாடி நூல், மணல் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவை தங்களது எடையில் 4 முதல் 20 முறை, எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும்.
  • செயற்கை: பாலியுரேத்தேன், பாலித்தீன், நைலான் இழைகள் தங்களது எடையில் 70 முறை எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும். இவற்றில் சிலவற்றை தூய்மைபடுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மற்றவை ஒரு முறை உபயோகித்த பின் அழித்து விட வேண்டும்.
  • பொதுமக்களின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பக்குவத்தின் அடிப்படையில் தொழிற்சாலையின் தொடர்ச்சியான மேம்பாட்டினை அப்பகுதியை பொருத்து சரிவிகிதமாக்குதல்.
காற்று வெளி மாசுபாடு
Industrial Pollution

Air Pollution
தொழிற்சாலை மாசுபாடு
மின் உற்பத்தி
கட்டிடத் தகர்ப்பு
காற்று வெளி மாசுபாடு என்பது வளிமண்டல பகுதியில் ஏற்படும் சீர் குலைவின் அறிகுறியாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு
  • வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள்
  • வேதிப் பொருட்களின் செறிவு நிலை
  • பல்வேறு / வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் சிதறும் / வீணாகும் தன்மையானது உட்கொள்ளும் தன்மையை விட குறைவாகவே உள்ளது (கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சி)
  • புதிய வேதி வினையின் எதிர் செயல் மற்றும் உயிர் சிதைவற்ற பிரிவின் தோற்றம்
  • உலக வெப்பமயமாதல் அமில் மழை, புகை மூட்டப்பனி, ஓசோன் செறிதளர்வு போன்றவை காற்று வெளி மாசுபாட்டின் தாக்கமாகும்.

சிமெண்ட் தொழிற்சாலை மாசுபாடு
வாகன மாசுபாடு
கார் / கரி எண்ணெயின் வெப்பம்
     
நம் தினசரி வாழ்க்கையுடன் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியானது தொடர்புடையதாகும். இந்த இரண்டு சுழற்சியும் மிக முக்கியமானதாகும். இவை நம் பூமியில் கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் தொகுப்பினை ஒழுங்குபடுத்துகிறது.

ஆதாரங்கள் மற்றும் முறைகள்
முக்கிய ஆதாரங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் வாகனத்தின் புகை
  • வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்
  • தொழிற்சாலை இயக்கமுறை
  • வாகன தயாரிப்பு
  • உரங்களின் தொகுதி
  • கட்டிடத் தகர்ப்பு
  • திடக் கழிவு மாசுபாடு
  • திரவத்தின் நீராவி
  • எரிமலை குழம்பு
  • எரி பொருள் உற்பத்தி
  • சாலை கட்டமைப்பு
  • மின்சார உறுப்பு உற்பத்தி
  • உலோகம் பிரித்தெடுத்தல்
  • காட்டுத் தீ
  • வேளாண்மை
காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு
  • இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது
  • நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்
  • கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்
  • ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்
  • இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்
காற்று வெளி மாசுபாடு
  • சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்
  • செயற்திறனின் அளவினை குறைத்தல்
  • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
  • அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்
  • நரம்பு நடத்தையில் பாதிப்பு
  • இரத்த நாடியில் பாதிப்பு
  • புற்றுநோய்
  • முதிர்ச்சியற்ற இறப்பு
காற்று வளி மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு
  • ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றது.
  • காற்று மாசுபாட்டினால் வளிமண்டல ஒஓசோன் படலத்தின் மேல் படலத்தில் தாக்கம் ஏற்படும் அதிகப்படியான புறஊதாக்கதிர்கள் சூரியனிடமிருந்து புவிக்கு வருவதால் உலகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது
  • ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது
காற்று மாசுபடுதலினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்
Air Pollution
Air Pollution
அமில மழையினால் அழியும் மரங்கள்
  • அமில மழையினால் மரங்கள் அழிந்து தாவரங்களின் இலைகள் அழிந்து மற்றும் மண்ணினை உரங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்தற்றதாக மாற்றுகிறது
  • ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டையினால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துவிடுகின்றது
  • ஓசோனின் கீழ் படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை தாக்குதலால், தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் இவை தாவரங்களின் திசுக்களை நேரடியாக அழிக்கிறது
காற்று மாசுக்கள்
காற்று மாசுபட காரணமான வாயுக்கள்
காற்று மாசுபட காரணமான முக்கியமான வாயுக்களின் வகைகள் பின்வருமாறு:
  • சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2)
  • நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (NOX = NO + NO2)
  • ஓசோன் (O3)
சல்பர் - டை - ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு போன்றவை முதன்மை நிலை காற்று மாசுபடுத்திகளாகும். ஓசோன் இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.
SO2 - ன் ஆதாரங்கள்
  • ஆற்றல் உற்பத்தி
- மின் உற்பத்தி
- பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
- மற்ற எரியக்கூடிய பொருட்கள்
  • வாணிகம் மற்றும் குடியிருப்பு பயன்பாடு
  • தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
  • உற்பத்தி இயக்குமுறை
  • தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
  • போக்குவரத்து
- சாலை போக்குவரத்து
- மற்ற போக்குவரத்து (விமானம், கப்பல், இரயில்கள்)
எரிபொருள் மட்டும் கொஞ்ச நைட்ரஜனை உற்பத்தி செய்கிறது. (எடுத்துக்காட்டாக, எண்ணெய் மற்றும் நிலக்கரியில் - 0.5 - 1.5% நைட்ரஜன் உள்ளது) எரிவாயுவில் நைட்ரஜனின் தன்மை எரிபொருளை விட குறைவாகவே உள்ளது. வளிமண்டல நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்கள் எரிக்கும் அறையில் வினைபுரிந்து பெரும்பாலான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
  • நைட்ரிக் ஆக்ஸைடு (NO) அல்லது நைட்ரஜன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) போன்ற இரண்டு முக்கிய நைட்ரஜன் ஆக்ஸைடுகளில் மொத்தம் NO க்கு சமமாகம்
  •  நைட்ரிக் ஆக்ஸைடு (NO) ஒரு நிறமற்ற வாயுவாகும். நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) ஒரு பழுப்பு சிகப்பு கலந்த நிறத்தினை கொண்டும் அதிக நெடியுடனும், நாற்றத்துடனும் கொண்ட வாயுவாகும்.
ஆதாரங்கள்
1. எரிபொருட்களை எரிக்கும் போது NO2 மற்றும் NO ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 90 சதவிகித NOx எரிப்பு பொருளானது NO ஆக இருக்கும். இவை காற்றில் ஆக்ஸிஜனேற்றமடைந்து நைட்ரஜன் - டை - ஆக்ஸைடாக NO2 மாறுகிறது. ஆகையால் வளிமண்டலத்தில் NO2 - ன் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இவை நேரடியாக வெளியேற்றப்படுகிறது. எஞ்சியிருப்பவை வளிமண்டலத்திலே வேதி வினையில் செயல்படுகிறது.
2. சாலை போக்குவரத்தானது பாதி நைட்ரஜன் வெளியேற்றத்தில்   பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி 20%  நைட்ரஜனை வெளியேற்றுகிறது.
  • சாலை போக்குவரத்து
  • மற்ற போக்குவரத்து
3. ஆற்றல் உற்பத்தி
  • மின் உற்பத்தி
  • பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
  • மற்ற எரியக்கூடிய பொருட்கள்
4. தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
5. உற்பத்தி இயக்குமுறை
6. தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெதுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றத்தின் இயற்கை ஆதாரங்கள்
Air Pollution
மண்ணிலிருந்தும் நைட்ரிக் ஆக்ஸைடு் (NO) வெளியேற்றுகிறது.

அமோனியா வெளியேற்றத்தின் ஆதாரங்கள்
Air Pollution

அமோனியா வெளியேற்றத்திற்கு வேளாண்மை ஒரு முக்கிய ஆதாரமாகும். கால்நடை வளர்ப்பு பண்ணை மற்றும் இவற்றின் தேவையற்ற கழிவுகளிலிருந்து அதிக அளவு அமோனியா வெளியேற்றப்படுகிறது. அதிக கால்நடை கழிவுகளில் மட்கும் யூரியா மற்றும் கோழிக் கழிவுகளின் யூரிக் அமிலம் போன்றவற்றினால் அதிக அமோனியா வெளியேற்றப்படுகிறது.
Air Pollution
முக்கியமான ஆதாரங்கள்
  • கால்நடை - 50 சதவிகித வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது
  • உரமிடுதல்
  • கடல்கள்
  • தாவரங்கள்
  • அங்கக உயிரிப் பொருட்களின் எரிப்பு
கார்பன் மோனாக்ஸைடு (CO)
  • கார்பன் சம்பந்தப்பட்ட எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்- டை - ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாகிறது
  • ஆனால் அனைத்து முழுமையாக எரிக்கப்படுதில்லை. அந்த தருணத்தில் கார்பன் மோனாக்ஸைடு (CO) உற்பத்தியாகிறது
  • மனிதர்களின் பயன்பாடான மோட்டர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கார்பன் மோனாக்ஸைடு வெளியேற்றத்திற்கு ஆதாரமாகும்
ஆவியாகும் கரிமச் சேர்வை (VOCs)
ஆவியாகும் கரிமச் சேர்வை என்பது கரிமச்சேர்வை ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடியதாகும். மேலும் இவை சுத்தமான ஹைட்ரோகார்பனிலிருந்து வரும் கரிம காற்று வளி மாசுக்களையும் உள்ளடக்கியது. இவை பகுதியாக ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரைன், சல்பர் அல்லது நைட்ரஜன் போன்றவற்றை உள்ளடக்கிய கரிமச் சேர்வையாகும்.
முக்கிய ஆதாரங்கள்:
  • ஓவியம் (ஆவியாகும் திரவம்)
  • எண்ணெய் உற்பத்தி (வாயு தீச்சுடர் மற்றும் வெளியேற்றம்)
  • எண்ணெய் துரிதம் (தீச்சுடம் மற்றும் நிலையற்ற வெளியேற்றம்)
  • எண்ணெய் அல்லது துரிதப்படுத்தப்படும் பொருட்களின் விநியோகம் (சேமிப்பிப்பிலிருந்து ஆவியாக்கம், வெளியேற்றப்படும் கொள்கலினால் இடப்பெயர்ச்சியில் ஏற்படும் இழப்பு)
  • உலர்ந்த சுத்தம் (துணிகள் ஈரமில்லா தன்மை)
  • மது உற்பத்தி (வடிப்பாலை மற்றும் எரிச்சாராயம்)
  • சாகுபடி பண்ணை (பயிர் வளர்ச்சி, பதப்படுத்திய பசும்புல் உற்பத்தி கழிவுநீர் படர்வு)
ஆவியாகும் கரிமச் சேர்வைக்கு (VOC) இயற்கை ஆதாரங்கள்
VOC யின் வெளியேற்றத்திற்கு வனவியல் ஒரு முதன்மை இயற்கை ஆதாரமாகும். வெப்ப மண்டல காடுகளானது பொதுவாக பாதிக்கும் மேற்பட்ட மீத்தேனிலிருந்து VOC வெளியேற்றப்படுகிறது. தாவர தொகுப்பில் அதிக கரிம மூலக்கூறு இருக்கும். இவை வளிமண்டலத்தில் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுகிறது.
ஓசோன் (O3)
ஓசோன் என்பது;
  • படை மண்டலம் (stratosphere), இது இயற்கையாக அமைந்த வளிமண்டலத்தின் மேல் படலமாகும்.
  • அடிவளிமண்டலம் (troposphere), இயற்கையாக மற்றும் மனித இனத்தின் வெளியீட்டால் வளிமண்டலத்தில் ஏற்படும் கீழ் படலமாகும்.
  • படை மண்டலம் (stratosphere), சூரியனிடமிருந்து புவிக்கு வரும் அதிகப்படியான புறஊதாக்கதிர்களை தடுத்து இயற்கைக்கு நன்மைதரும் வகையிலுள்ளது
  • ட்ரோபோஸ்பியர் (அ) அடிவளிமண்டல், மனிதர்களிடமிருந்து வரும் முதன்மை மாசுக்களால் உருவாக்கப்பட்டதாகும். இதனடிப்படையில் இது ஒரு காற்று வளி மாசாகும்
  • இந்த அடிவளிமண்டலத்தின் முதன்மை மாசுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களிடம் வினைபுரிந்து இரண்டாம் நிலை மாசுக்கள் உருவாகிறது.
  • ட்ரோபோஸ்பியர் படலம், ஒளிவேதியியல் மூடுபனியின் முக்கிய பகுதியாகும்
நிலையான கரிம வாயுககள் (POPs)
  • நிலையான கரிம வாயுக்கள் சூழ்நிலைமண்டலத்தில் சிதைவடையாமல் நிலையாக இருக்கும் வாயுக்களாகும். இவை மண் தரத்தினை பாதியாக குறைக்கிறது
  • இதன் பகுதியுடன் டை ஆக்ஸின், ஃப்யூரான், பாலிகுளோரினேட் பைஃபினைல்ஸ் (PCB3) மற்றும் ஆர்கனோகுளோரின் பூச்சிகள் (DDT) போன்றவையும் அடங்கும்.
  • இவைகள் உணவு சங்கிலியின் வழியாக மனிதன் மற்றும் விலங்குகளின் திசுக்களில் நுழைகிறது. மேலும் இவை காற்றுத் துகளுடன் நீண்ட போக்குவரத்து தன்மையை உடையது
நிலையான கரிம மாசுக்களின் ஆதாரங்கள்
சில POPs க்கள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. மற்ற POPs க்கள் தொழிற்சாலை இயக்கங்களான உற்பத்தியில் கரைப்பான், பாலிவினைல் குளோரைடாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
காற்று மாசுபாடு மேலாண்மை
ஒருபார்வை
தொழில்நுட்பம், சரியான நேர்த்தி முறையில் முன்னேற்றம் மற்றும் தொழிற்சாலை பகுதியில் மாசு கட்டுப்பாடு, மாசுபாட்டின் அளவினை தடுப்பது மற்றும் தேவையற்ற பொருட்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவது போன்றவையாகும். இவை மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலின் அடிப்படையில் தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக அமையும். வகைபாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
மாற்று தொழில்நுட்பம்
  • நேர்த்தின் தற்போதைய முறையில் வெவ்வேறு சாத்தியமான செயற்கூறுகளை அளித்தல் மற்றும் மாசு கட்டுப்பாடு
  • தற்போது இருக்கும் மாற்று நுட்பங்கள்
- மண் ஆவியை பிரித்தெடுத்தல்
- உயிரி வெளியேற்றம்
- உயிரி அடுக்குகள்
- விளை நில பண்ணை
- குறைந்த தட்பவெப்ப நிலையில் வெப்பமடைந்து  ஆவியாகுதல்
- காற்று வளி தெளிப்பான்
- உயிரியல் தெளிப்பான்
- இயற்கை தளர்ச்சி
- தரைநீரில் உயிர்வழி நிவர்த்தி
- இருமுனை கட்டம் பிரித்தெடுப்பு
- கடல் நீரில் உப்பு பிரித்தெடுப்பு முறை

  • சில அறிவியலறிஞர்கள் அணு சக்தியை உருவாக்கத்தின் அடுத்த நிலையை அடைவதற்கு அணுக்களை பிளவுப்படுத்துகின்றன.
தூய்மையான தொழில்நுட்பங்கள்
  • புதுப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் பல தடவை உதவுகிறது. குறைந்தபட்ச விலை இதனுள் அடங்கும். ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களின் அதிக பயன்பாட்டை தடுத்தல்
  • தற்போது நிலவரத்திலுள்ள தூய்மையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு
- நீர் ஆற்றல்
- சூரிய சக்தி
- காற்றுச் சக்தி
- புவி வெப்ப சக்தி
- அங்கக உயிரிப்பொருட்கள் ஆற்றல்
- பண்படுத்துதல்
- தாவர வளர்ப்பு
- மட்குக் குப்பை

புதுமையான / ஆக்கத்திறமையான தொழில்நுட்பங்கள்
  • புதுமையான தொழில்நுட்பத்தினால், மாசுக்களை கட்டுப்படுத்தும் திறமானது முன்னேற்றமடைதல்
  • தற்போதுள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:
- நீர்மம் வாயுக்களை உறிஞ்சும் கருவி
- காற்று தூய்மைபடுத்துதல்
- ஆக்ஸ்ஜனேற்றமடைதல்
- நல்ல காற்றோட்டம்
- மறுவளர்த்தி
- திண்மமாக்குதல்
- மண்ணை தூய்மையாக்குதல்
- உயிரியல் பொருள்
- சிதறச் செய்யும் பொருள்
- ஆற்றல் துகள்கள்
- குளிர்விக்கும் கோபுரங்கள்
காற்று மாசு கட்டுப்பாடு
காற்றுத் திறன்
  • காற்றிலுள்ள இயக்க ஆற்றலை விட காற்றுத்திறனின் மின்சாரத்தின் தன்மை குறைவாகும்
  • இயக்க ஆற்றலின் தன்மை, வேகம் 3 உடன் நேரடியான சமவிகிதமாகும்
காற்று ஆற்றல் உற்பத்தி
Air Pollution
நீர் எரிபொருள் பகுதி
  • நீர் என்பது ஆற்றலின் ஆதாரமாகும். நீரானது 12~ மின் கலத்தின் அதிக இயக்க ஆற்றல், அதிகப்படியான மின்காந்த கதிர் வீச்சின்போது ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கிறது
  • வாயு வெளியேற்றம் என்பது காற்றும் மற்றும் நீராவியின் கலவையால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுவாகும்.
  • எரிபொருள் அட்டைகள், வண்டிகள், பேருந்துகள், விமானம், கப்பல்கள், மற்றும் ஆற்றல் நிலையம் போன்றவற்றின் பயன்பாடு. இதுமட்டுமல்லாமல் நிலக்கரி எண்ணெய் (அ) வாயுக்களின் ஆற்றலில் பயன்படுத்தும் கருவிகளும் அடங்கும்
இயற்கை வாயு எரிபொருள் பயன்படுத்தும் பள்ளிபேருந்து
Air Pollution
வினையூக்கி மின்மாற்றி
  • தானியங்கு ஊர்த்தியில் பொருத்துதல் மற்றும் தொழிற்துறைகளில் பல்வேறு வகையான வடிப்பான்கள் மற்றும் உறைப்பான்களை பொருத்துதல்
  • சிறுமணியாலான உலோகத்திற்குள் ஆவியாகும் வாயுக்கள் வினைபுரிந்து தீங்குவிளைவிக்கும் வாயுக்களை தீங்கற்றதாக மாற்றப்படுகிறது.
போக்குவரத்தின் மாற்று
  • வாகன ஒருங்கிணைப்பு
மலேசியா அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மற்றும் ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கார்பன் - டை - ஆக்ஸைடு (CO2), கார்பன் மோனாக்ஸைடு (CO), நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (NO2), சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2), போன்றவற்றிக்காக தனிப்பட்ட நபர்களுக்கு இடையே போக்குவரத்து பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.
  • மக்கள் போக்குவரத்து
பாதாள இரயில் அல்லது ஒருமித்த இரயிலை பயன்படுத்தும்போது சுற்றுப்புறச்சூழலுடன் விரோதமற்றும் பசுமை கூடக வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற போக்குவரத்தினை அதிகப்படுத்துதல் 
Air Pollution
மிதிவண்டி ஒரு மாற்று வழி
இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு
  • சிறப்பான ஆற்றல்மிக்க பயன்பாட்டிற்கு தவறாமல் சோதனை செய்வது மற்றும் உதிரி பாகங்களை மாற்றுவது
  • போக்குவரத்திற்கு இயந்திரத்தில் தரம் மிக முக்கியமானதாகும் தீங்குவிளைவிக்க கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது
எளிமையான முறையில் காற்று மாசுக்கட்டுப்பாடு
அ. தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல்
ஆ. வளிமண்டலத்தில் வாயுக்கள் வருதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், புயல் காற்று சேகரிப்பில், தற்போது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மாசுக்களை மாற்றுகிறது
இ. நிலக்கரியானது நிலைமாற்றம் அல்லது தெரிவிலிருந்து வாயு எரிபொருளாக மாற்றம்
ஈ. கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு (ஒரு வகை கொடி, கேரட்) நைட்ரஜன் ஆக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு மற்றும் பிற வாயுக்கள்.
ஒலி மாசுபாடு
ஒரு கண்ணோட்டம்
இந்த குறிப்பிட்ட ஒலி மாசுபாடானது, தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அதிக பயன்பாட்டால் ஏற்படும் மிகையான சத்தமாகும். நாம் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் சப்தங்களை எழுப்புகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
டெசிபல் முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் - 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். அதாவது
திண்ணத்தின் அளவு - 10 log10 (1/10) (dB)
உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.
ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவின் உதாரணங்கள் பின்வருமாறு:
கேட்பதின் ஆரம்ப நிலை 0 dB மோட்டார் சைக்கிள் (30அடி) 88 dB
சலசலவென ஒலி 20 dB உணவு அரைக்கும் கருவி (3அடி) 90 dB
சிறிய முணுமுணுப்பு (3அடி) 30 dB பாதாளத் தொடர் 94 dB
இரைச்சலற்ற வீடு 40 dB டீசல் வண்டி (30அடி) 100 dB
இரைச்சலற்ற தெரு 50 dB அறுவடை இயந்திரம் (3அடி) 107 dB
சாதாரண உரையாடல் 60 dB காற்றழுத்த முறையில் இயங்கும் கடாவு ஆணி (3அடி) 115 dB
காரின் உள்ளே 70 dB சங்கிலி ரம்பம் (3அடி) 117 dB
சப்தத்துடன் பாட்டு (3அடி) 75 dB அதிக சத்தத்துடன் கூடிய நடனம் 120 dB
மோட்டார் வண்டி (25அடி) 80 dB ஜெட் விமானம் (100அடி) 130 dB
மற்ற ஒலி அளவீடுகள் பின்வருமாறு
  • சமூக மக்கள் ஒலியின் சமமான / நிகரான நிலை
  • கலவையான ஒலியின் விகிதம்
  • சமமான ஆற்றல் அளவு
  • ஒலி மற்றும் அதன் எண்ணிக்கையின் அட்டவணை
  • ஒலி கதிர்வீச்சின் முன்கணிப்பு
  • ஒலி அலகு
  • ஒலி நிலை
  • ஒலி மாசுபாடு நிலை
  • ஒலி விகிதம்
  • உணர்ந்து கொள்ளும் ஒலியின் நிலை
  • போக்குவரத்து ஒலியின் அட்டவணை
  • சப்தத்தின் அளவு (இரைச்சலின் அளவு)
  • சப்தத்தின் அளவு மீட்டர்
  • சப்த அழுத்த அளவு
  • உலக ஒலி செல்லும் திட்டம்
ஆதாரங்கள் மற்றும் முறைகள்
ஒலி மாசுவிற்கு கீழ்கண்ட பிரிவுகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.
  • சாலை போக்குவரத்து இரைச்சல்
  • விமான இரைச்சல்
  • இரயில் இரைச்சல்
  • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி
  • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு
  • தொழிற்சாலை இரைச்சல்
ஒலி மாசுபாட்டின் விளைவு
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ் பேர்க் பகுதியானது, இடஅமைப்பு மற்றும் அதிகமாகிவரும் கட்டிடம் போன்றவற்றின் இரைச்சலினால் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் காலை நிலையையும் அதாவது குளிர் காலத்தில் தட்பவெப்பநிலையானது நேர்தலைகீழாக மாறுகிறது (வால்ஸ்லி, 1997).
  • வாழ்வியல் / உடலியல் சார்ந்த விளைவு: அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.
  • உளவியல் சார்ந்த விளைவு: ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொருத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.
  • இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்
  • தொடர்பு (தகவல் தொடர்பு): ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.
  • சோர்வு மற்றும் தலைவலி: ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.
  • தொழில்ரீதியான இரைச்சல்: தொழில் சம்பந்தப்பட்ட இரைச்சலினால் சோர்வு, தலைவலி, உற்பத்தியில் இழப்பு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றது. இதன் விளைவானது பாதிக்கப்படும் மனிதனின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொருத்து அமைகிறது.
  • போக்குவரத்து: மோட்டார் வண்டிகள், பேருந்துகள், இரயில் வண்டி மற்றும் விமானம் போன்றவற்றின் இரைச்சல் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது. அதிக நகர மக்கள் இருக்கும் இடங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இது கட்டுப்படுத்த முடியாத அதிக இரைச்சல் சப்தத்துடன் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். இரயில் வண்டி இயக்கம் அதிகமுள்ள சுற்றுப்புற குடியிருப்புகளில் ஒலியின் அளவானது 80-100 டெசிபல் மற்றும் மூன்று அடுக்கு குடியிருப்பின் திறந்த வெளியில் 90 டெசிபலாகும் பதிவாகிறது.
  • சமூக இரைச்சல்: veitch - ன்  படி அதிக இரைச்சலினால் தலைவலி, எரிச்சல், குழப்பம் போன்றவை ஒலி மாசுபட்டால் ஏற்படுகிறது. இந்த நிலையானது கடந்த 20 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. சமூக இரைச்சலுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆய்வுகள் ஆதாரமாகும்.
வார்ட் & சுட்வெல்ட், 1973 மனவழுத்தம், நிலையற்ற தன்மை மற்றும் அதிவேகமான பேச்சு
டேமன், 1977 சுற்றுவட்டப்பகுதியில் சுமூக வாழ்க்கை நிலை பாதித்தல்
ஆப்பிள்யார்டு & லின்டெல், 1972 அக்கம் பக்கத்து வீடுகளில் சமூக உறவு குறைவு
கொஹென், எவன்ட், கிரான்ட்ஸ் & ஸ்டெகோல்ஸ், 1980 பள்ளி சம்பந்தமான செயல் திறன் குறைதல்
கொஹென் மற்றும் சிலர் வீட்ச் 1996 உயர் இரத்த அழுத்தம்
18-19 வயதுடையவர்களில் 60 சதவிகித மக்களின் கேட்கும் திறன் குறைதல்
அய்ரிஸ் & ஹீக்ஸ், 1986 உரத்த இசையால், மனிதனின் ஒருமுகப்படுத்திய தீவிரத்தின் தன்மையில் பாதிப்பு
தைய்கன், 1988 உறக்கம் புறக்கணிப்பு
ஒலி மாசுக்கட்டுப்பாடு
பாதுகாப்பு
  • அலுவலகங்களில் இரைச்சல் ஏற்படுத்தும் கதவுகள், மதில், மேல் முகப்பு போன்றவற்றின் தொந்தரவை தடுப்பதற்கான வழியை கையாளுதல்
  • திரையரங்கு மற்றும் சினிமா போன்றவற்றில் ஏற்படும் எதிரொலியை தடுக்க கடத்தாப் பொருட்களின் பயன்பாடு
  • தொழிற்சாலையில் வேலை செய்யும் வேலையாட்களை பாதுகாக்க காதுகளில் பொருத்தப்படும் ஒரு கருவியின் பயன்பாடு
  • நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகர குடியிருப்புகளில் கட்டமைப்பானது ஒலித்தடையை கொண்டு அமைப்பதால் போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலை குறைக்கலாம்
தாவர வளர்ப்பு
  • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது
பகுதிகளாக பிரிப்பு
  • குடியிருக்க தகுதியான பகுதிகளாக நகர பகுதிகளை பிரித்து மறுகட்டமைப்பு செய்வது
  • அருகிலிருக்கும் கட்டங்களை பொருத்து தொழிற்சாலை ஒழுங்கான மேம்பாட்டு கூட்டடைப்புடன் பிரித்தல்
வெப்பநிலை மாசுபாடு

அதிக வெப்ப கழிவு மற்றும் வெப்ப நீரோட்டம் போன்றவற்றின் காரணத்தால் வெப்ப நிலை மாசுபாடு உண்டாகிறது. வெதுவெதுப்பான நீரில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஆகையால் அங்கக பொருட்களின் மக்கும் திறனானது குறைகிறது. பச்சை பாசியானது நிலப்பச்சை பாசியாக மாறுகிறது. பல விலங்குகளின் இனம்பெருக்கம் பாதிக்கிறது. ஒரு நன்னீர் வகை மீன்களின் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் மற்றும் சால்மன் இனத்தின் முட்டையிடுதல் போன்றவை உயர் வெப்பநிலையில் ஏற்படும் போது தோல்வியடைகிறது.
வெப்பநிலை மாசுபாடு என்பது மனிதனின் செயலால் நீரில் ஏற்படும் தட்பவெப்பநிலையின் ஏற்றம் அல்லது இறக்கமாகும். மின் நிலையம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நீரினால் வெப்பநிலை மாசுபாடு உண்டாகிறது. இயந்திரங்களின் வெப்பத்தை தனிக்க உதவும் நீரினை வெளியேற்றும் போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவு மற்றும் உயர்வாழினங்களை பாதிக்கும் தன்மு பொன்றவற்றால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. நகர மக்களின் பயன்பாடான சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, மேற்பரப்பு நீருடன் கலப்பதால் அதிக தட்பவெப்பநிலையைக் கொண்ட நீருக்கு ஆதாரமாக அமைகிறது.
s
பொட்ரீரோ உற்பத்தி நிலையம்

வெதுவெதுப்பாக உள்ள ஆற்றுகளில் மிகக் குளிர்ந்த தன்மையுடைய நீர்த்தேக்கத்த வெளியீடும் போது வெப்பநிலை மாசு ஏற்பட காரணமாக அமையும். இதனால் மீன்கள் (அதன் முட்டை மற்றும் கூட்டுப்புழு) ஆற்றின் தன்மை பாதிக்கிறது.
தற்போது இருப்பதை விட இன்னும் வெப்பநிலை மாசுபாடு அதிகமாகும் போது உலகவெப்பமய பாக்கலின் தாக்கம் அதிகரிக்கும். அதிக செயல் பணிகளை உள்ளடக்கிட தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் அதிக வெப்பத்திறனால் வெப்பநிலை மாசுபாடு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு ஏற்படுவதற்கான விளக்கம் பின்வருமாறு.
Thermal Pollution
சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாவில் பொட்ரீரோ உற்பத்தி நிலையின் வெப்பமான நீர் வெளியீடு
  • உற்பத்திக்கான மூலப் பொருட்கள் (அங்கக மற்றும் இரசாயன பொருள்)
  • பல்வேறு செயல் முறைகளில் வெவ்வேறு வேதி வினை
  • அதிக வெப்ப திறனால் உற்பத்தியாகும் பயனற்ற பொருள் (திரவமாக) வெளியேற்றப்படுகிறது
  • சுற்றுப்புறச்சூழல் முறையின் தட்பவெப்ப நிலையை உயர்த்துதல்
வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் வானிலை மாற்றத்தினை குறிப்பாக வளிமண்டல தட்பவெப்ப நிலையை அளவீடுகிறது. இந்த அளவீடப்பட்ட வரைபடமானது கடந்த 10 வருடம் அளவின் படி ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடானது தற்போது இருக்கும் வெப்பநிலையின் விகிதத்தை கூறுகிறது. இதன் அடிப்படையில் வெப்பநிலையை நிலையாக தக்கவைத்து கொள்ள மேற்கோள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள்
வெப்பநிலை மாசுபாட்டிற்கு காரணமான முக்கிய ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு.
  • மின் நிலையங்களில் தொல்லுயிர் எச்ச எரிபொருட்களின் பயன்பாட்டால் உருவாக்கப்படும் மின்சக்தி
  • தொழிற்சாலையின் வசதிகளால் குளிர்விக்கப்படும் நீர்
  • கடற்கரை பகுதிகளில் காட்டழிப்பு
  • மண்ணரிப்பு
  • வேளாண்மை ஆதாரங்கள்
சூழலியலில் தாக்கம் - மிதவெப்பமான நீர்
உயர் வெப்ப நிலையானது நீரில் கரையும் ஆக்ஸிஜனின் (DO) தன்மையை குறைக்கிறது. இவ்வாறு ஆக்ஸிஜன் கரையும் தன்மை குறைவதால் மின், நீர் நில வாழிகள் போன்ற உயிரினங்களை பாதிக்கிறது. இவ்வகை உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தின் விகிதமானது வெப்பநிலை மாசுபட்டால் அதிகரிக்கும் போது உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவில் குறைபாடும் ஏற்படுகிறது. இதனால் எண்ணிக்கையில் குறைகிறதுஇ சுற்றுப்புறச்சூழலில் மாற்றங்கள் ஏற்படும் போது உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதாவது உயிரினங்களுக்கு தகுந்த சூழலுக்கு இடப்பெயருகிறது. மீன்கள் மிதமான தண்ணீரில் வாழ்கிறது. இவைகள் இடம்பெயருவதில்லை ஆகையால் கிடைக்கும் ஆகாரத்தின் அளவு குறைகிறது. பழைய மற்றும் புதிய சுற்றுப்புறச்சூழலின் இணக்கமான உணவு சங்கிலியில் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் முடிவாக உயிரியியல் பல்வகை குறைகிறது.
பெறப்பட்ட நீரினால் மீன் இறப்பு
தட்பவெப்பநிலையில் 1-2 டிகிரி செல்சியஸ் அளவு மாற்றங்கள் நிகழும் போது உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மற்ற உயிரியல் அணுக்களும் பாதிக்கிறது. மேலும் சவ்வூடு பரவலுக்கு செல்லும் உயிரணுக்களின் ஊடுருவும் தன்மை, உயிரை புரதத்தின் திரளும் தன்மை, நொதி வளர்ச்சிதைமாற்றம் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் இனப்பெருக்கம் மற்றும் இறப்பு விகிதம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.
நீரில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது நீரித் தாவரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தும் குறைந்த வாழ்க்கைச் சூழலையும், சிற்றினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் காணப்படுகிறது. இதனால் இந்த பாசிகள் நீரில் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. ஒளிச்சேர்க்கையின் அளவு குறைவதால் தாவரத்தின் அதிக அடர்த்தி தாவரத்தின் சுவாச விகிதத்தை அதிகரிக்கிறது. இது வளமூட்டப்பட்ட நீர் நிலைகளுக்கு ஒத்தாகும். இந்த நீர்நிலைகளில் வேளாண்மை கனிம உரங்கள் பயன்பாட்டால் நீர்மூலக்கூறுகள் மாசுபடுகிறது. அதிக அளவு அதிகரிக்கும் வெப்பநிலையினால் நொதி அமைப்பில் நைட்ரஜன் மற்றும் டைசல்பைடு பிணைப்பு உடைந்து நொதியின் முறையை மாற்றுகிறது. இந்த நொதி மாறுபாட்டுடைய நீர்நிலையங்களில் லிப்பீடுகள் உடையும் திறனற்று இருக்கிறது. இதனால் ஊட்டக்குறையானது ஏற்படுகிறது.
வரையறுக்கப்பட்ட நிலையில் வெதுவெதுப்பான நீரினில் குறைந்தபட்ச அழிவையையும் நீர்நிலவாழினங்களின் உட்கிரக்கும் தன்மை அதிகமாகும் இருக்கும். இந்த நிலையானது பொதுவாக பருவம் சம்பந்தப்பட்ட நீருக்கு பொருத்தும். இதனை வெப்பநிலை செறிவூட்டம் எனலாம். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும் போது நீர் மசுக்களானது மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெதுவெதுப்பான நீரினில் இருந்து நீர் பசுக்கள் ஒன்று கூடி கூட்டமாக இருக்கும். ஆனால் மின்நிலையத்தின் வெளியேற்றம் தடுக்கப்படும் போது குளிர்காலத்தில் நீர்பசுக்கள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டு எண்ணிக்கையானது குறைந்துவிடும்.
வெப்பநிலையானது, நன்னீரில் 700 பாரன்கைட், உப்புநீரில் 800 பாரன்கைட் மற்றும் வெப்பமண்டல பகுதியின் மீன்களில் 850 பாரன்கைட் ஆகும்.
சூழிலியலில் விளைவு - குளிர் நீர்
நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் குளிர் நீரினால் ஆறுகளிலுள்ள மீன்கள் மற்றும் பெரிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்களையும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகள் வெதுவெதுப்பான வெப்பநிலையை உள்ளடக்கிய பகுதியாகும். இதனால் இந்த ஆறுகளில் நிலையான மீன் இனங்கள் மற்றும் குறிப்பிட்ட முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தட்பவெப்பநிலையானது நன்னீரில் 500 பாரன்கைட்டுக்கு குறைவாகவும் உப்பு நீரில் 750 பாரன்கைட்டாகவும், வெப்ப மண்டலத்தில் 800 பாரன்கைட்டாகவும் இப்பகுதியில் உள்ளது.

வெப்பநிலை மாசுக்கட்டுப்பாடு
கஸ்டல் நீப்பர் மின் நிலைய குளிர்விப்பான் கோபுரம், டார்ட்மட், ஜெர்மனி

தொழிற்சாலை கழிவுநீர்
ஐக்கிய நாடுகளில் வெப்பநிலை மாசுவானது தொழில் சம்பந்தம்பட்டான ஆதாரங்களான மின்நிலையம் பெட்ரோலில் துரிதம், காகித ஆலை, வேதிவினை நிலையம் இரும்பு நிலையம் மற்றும் நுகர் பொருட்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் கட்டுப்படுத்தும் வழிகள் பின்வருமாறு.
  • குளிர்விக்கும் குளம் நீராவி, பரிமாற்றம் மற்றும் கதிரியக்கம் போன்றவற்றினால் மனிதனால் உருவாக்கப்பட்ட குளிர்விக்கும் குளம்
  • குளிர்விக்கும் கோபுரம் - ஆவியாகும் மற்றும் வெப்ப மாற்று முறையின் மூலம் தேவையற்ற வெப்பத்தை வளிமண்டலத்திற்கு அனுப்புதல்
  • ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் மின்திறன் தொழிற்சாலை வெப்பமாக்குதலின் நோக்கத்திற்கு தேவையற்ற வெப்பத்திறன் மறுசுழற்சி செய்யும் செயல்முறை.
மேலே குறிப்பிட்ட முறைகளின் மூலம் ஒருமுறை குளிர்வித்தல் (OTC) என்ற இயக்கமுறையை கையாளும் போது தட்பவெப்பநிலையானது தேவயான அளவு குறைவதில்லை. எடுத்துக்காட்டாக ஸான் ஃப்ரான்சிஸ்கோவின் பொட்ரீரோ உற்பத்தி நிலையத்தில் OTC முறையை பயன்படுத்தும் போது வெளியேற்றப்படும் திறன் அளவானது சுற்றுப்புறத்திலுள்ள வெப்பநிலையை விட 100 செல்சியஸ் (200 பாரன்கைட்) அதிகமாக இருக்கிறது.



- கதிரியக்கம் கதிரியக்க மாசுபாடு
கதிரியக்கம் என்பது புரோட்டான் (ஆல்பா துணிக்கை) எலக்ட்ரான் (பீட்டா துணிக்கை) மற்றும் காமா (மின் காந்த கதிர்வீச்சு) போன்ற சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும். இந்த கதிர்வீச்சு தான் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாகும் கதிரியக்கமானது. அயனி கதிரியக்கம், அயனியாக்க கதிரியக்கம் என இருவகைப்படும். அயனியாக்க கதிரியக்கமானது கிரகிக்கும் அணுக்களை தாக்குகறிது. இவை குறைந்த ஊடுருவும் தன்மையுடையது. அயனி கதிரியக்கமானது அதிக ஊடுருவும் தன்மையுடையது. பெரிய மூலக்கூறு உடைப்பிற்கு இந்த அயன்கதிரியக்கம் காரணமாகும்.
சுரங்கத்தொழில், புளோடோனியம் மற்றும் தோரியத்தின் தூய்விப்பு மற்றும் உற்பத்தி, வெடிக்கத்தக்க மற்றும் அணுஆயுதங்கள், அணு சக்தி நிலையம், எரிபொருள் மற்றும் கதிரியக்க சமதானி உற்பத்தி போன்றவை கதிரியக்கத்திற்கு மனிதனால் உருவாக்கப்படும் ஆதாரங்களாகும்.
பொதுவாக கதிரியக்கத் மூன்று வகைப்படும்: அவை
  • ஆல்பா துணிக்கை - இவற்றை ஒரு துண்டு காகிதம், மனிதனின் தோல் மூலம் தடுக்கப்படுகிறது.
  • பீட்டா துணிக்கை - இவை மனிதனின் தோலில் ஊடுருவிச் செல்லும். இதனை ஒரு சிறிய துண்டு கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவற்றின் மூலம் தடுக்கப்படுகிறது.
  • காமா கதிர்கள் - இலை மனிதனின் தோல் பாதிக்கப்பட்ட செல்கள் மூலம் ஊடுருவிச் செல்லும் இவை அதிக தொலைதூரத்திற்கு உடுருவும் இவற்றினை அடர்த்தியான பலமான நுண்சேர்பொருளின் (concrete) மூலம் தடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள்
     கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாக ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு
  • அணு சக்தி நிலையம்
  • அணு ஆயுதம்
  • போக்குவரத்து
  • அணுச்சிதைவு அப்புறப்படுத்ததல்
  • யுரேனியம் சுரங்கத்தொழில்
கதிரியக்க மாசுபாட்டினால் உயிரியலில் தாக்கம்
  • கதிரியக்க சமதானியஜன் விளைவானது, கதிரியக்கத்தின் உயிரிகளை பாதிக்கும் தன்மை மற்றும் இவை, உயிரணுக்களை உட்கிரகிக்கும் வெளியேற்றம் தன்மையை பொருத்து இருக்கும். பெரும்பாலும் இந்த கதிரியக்கம் உயிரணுக்களின் ஒரு செல்லை தாக்குகிறது. இதனால் மனிதன் மற்றும் பிற பல செல்களுடைய உயிரணுக்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு செல் பாதிப்படையும் போது மற்ற செல்களையும் எதிராக தாக்குகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளை தோல் குடல் மற்றும் இரத்த நாள செல்களானது மனிதனின் உணர்ச்சி தூண்டுதல் மையமாக உள்ளது.
  • உயிரியல் மூலக்கூறுகளுடன் கதிரியக்கம் வினைபுரியும் போது அயன்களை உருவாக்குவதால் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இந்த அயனிகள் முற்றுப்பெறாத அயனிகளாக (free radical) இருந்து, புரதம், சவ்வுகள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. கதிரியக்கமானது டி.என்.ஏவின் தனிப்பட்ட அடிப்பகுதி (அதாவது தைமின்) அழித்தல் ஒரு புரியிழை உடைப்பு, இருபுரியிழை உடைப்பு, வெவ்வேறு டி.என்.ஏ புரியிழையின் பிணைப்பில் சேதம் போன்றவற்றினால் டி.என.ஏ முற்றிலும் பாதிப்படைகிறது. இதனால் புற்றுநோய் பிறப்பில் கோளாறு மற்றும் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
  • கதிரியக்கம் தாக்கம் மனித உடலில் குறைவாக இருக்கும் பொழுது செல்களிலுள்ள உயிர்வேதியியல் திருத்தம் செய்யும் முறையின் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கிறது. ஆனால் அணுமின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் வெளிப்படும் கதிர்கள்ளானது இந்த உயிர் வேதியியல் முறையினால் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் மக்கள் தொகையில் புற்றுநோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அறிவியலறிஞர்களால் கூட இதற்கான நிரந்திர தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை
  • அறிவியல் விஞ்ஞானிகளில் மத்தியில், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் (கறைந்தபட்ச) அளவில் வேறுபட்ட கரத்துக்கள் நிலவி வருகிறது. இதில் சில அறிவியல் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச அளவுக்கு கீழே கதிரியக்கம் இருந்தாலும் அதாவது நுண்ணிய அளவு இருந்தாலும் உயிரியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்து யாதெனில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் அவை மனிதனின் உயிரியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
  • 1945 - ல் ரோஸீமா மற்றும் நாகசாகி என்ற பகுதியில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் ஜோம்ஸ் நீல் மற்றும் அவருடைய ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிக அளவு மக்கள் புற்றுநோய் இரத்த புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் போன்றவற்றால் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது
  • கதிரியக்க மாசுபாடு சுற்றுப்புறச்சூழலில் ஒரு முக்கிய பிரச்சனையாக கருத்தப்படுகிறது. எனவே கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் செய்யப்படும். செயல்களில் போன்றவற்றின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கதிரியக்க மாசுபாட்டின் வகைகள் மற்றும் விளைவுகள்
  • புறஊதாக் கதிர்கள்: சிற்றலையின் அலைநீளம் 100-300 நேனோமீட்டர் மற்றும் அதிக ஆற்றலானது 260 நேனோமீட்டர் அலை நீளத்தில் இருக்கும் பொழுது டி.என்.ஏ வை பாதிக்கின்றது. இவை கண்விழித்திரையிலுள்ள செல்களை தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இவை தோலின் வளர்ச்சி செல்களை பாதிக்கிறது. தோலில் கொப்பளங்கள் ஏற்படுதல் மற்றும் தோலில் சிவப்பேறுதல் (தோல் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய தோலில் உள்ள நிறமிகள் புறஊதாக்கதிர்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்குகிறது. ஆனால் இந்த நிறமிகளில் பற்றாக்குறை ஏற்படும் போது தோல் உலர்வு நோய் உண்டாகிறது. மேலும் இந்த புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
  • காஸ்மிக் கதிர்கள்: காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சுத் தன்மை 0.001 ஏ ஐ விட குறைவாகும். ஆனால் இதன் ஆற்றல் அதிகமாக இருப்பதால் உயிரணுக்களை எளிதில் தாக்குகிறது. அதிஷ்டவசமாக விண்வெளியின் படை மண்டலத்தில் (stratosphere) இந்த கதிர்வீச்சு சிக்கிக் கொள்வதால் குறைந்த அளவு மட்டும் புவிளை வந்தடைகிறது.
    • மற்ற கதிர்வீச்சான ஊடுக்கதிர் (x - கதிர்), இவை உயிரணுக்களின் ஊடுருவி செல்வதால் பல்வேறு உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியானது குறைகிறது.
    • கதிர்களின் தாக்கமானது 1909 - ல் யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட புற்றுநோயின் மூலம் கண்டறியப்பட்டது. உயர்வான மின் நிலையங்களில் பயன்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பன்மயமி (polyploid) கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் ஒருவகை இயக்கமுறையாகும் அணுசக்தி குறையும் பொழுது ஓரகத்தனிமம் (isotopic) I - 132 மற்றும் Sr-90 மூலம் உடனடியாக தாக்குகிறது. கதிரியக்க I -131 ஆனது கேடயச் சுரப்பியுள்ள சாதாரண அயோடின் (I -27) மூலம் செறியை எடுத்துக்கொள்கிறது. இதனால் இரத்த வெள்ளையணுக்கள், எலும்பு பகுதி, மண்ணீரல், நண்நீர்க்கணு போன்றவற்றை தாக்குகிறது.
மேலும் கண் பார்வை கோளாறு, மலட்டுத் தன்மையை அதிகரித்தல், தோல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் கட்டி போன்றவை உருவாகிறது. Sr-90 என்பது கால்சியத்தின் கோளாறு. இவை எலும்புகளை தாக்கி எலும்பு புற்று நோயை உருவாக்குகிறது. வரலாற்று சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டாக ஜப்பானின் ஹீரோஸிமா மற்றும் நாகசாகி பகுதியில் 1945ல் ஏற்பட்ட அணு குண்டு வெடிப்பு ஒரு உதாரணமாகும்.

ஆதாரம்: http://www.studentsguide.in/biology/pollution_environment/radioactive_pollution.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக