அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 27 மே, 2011



நிகழ்ச்சியில்  மாணவிக்கு   கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கிய பொது எடுத்தப்படம்
அருகில் எய்ட் எட் அக்சன் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிதரன் பொன்விழா நகர்புற வேலை வாய்ப்பு திட்ட சமுதய ஒருங்கிணைப்பாளர் கோபால் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர் .



 
நிகழ்ச்சியில்  மாணவிக்கு 
 நெல்லியளம்  நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் 
காசோலை வழங்கியபோது எடுத்தப்படம் 


நிகழ்ச்சியில்  மாணவிக்கு   கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கிய பொது எடுத்தப்படம்


திங்கள், 23 மே, 2011

':உலக பல்லுயிர் பெருக்க தின நிகழ்ச்சி photos 27.05.2011











கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இயற்கை வளங்களின் ஜீவன் இளைஞர் "கையில்':உலக பல்லுயிர் பெருக்க தின நிகழ்ச்சியில் நிதர்சனம்

: "நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இளைஞர்கள் முன் வரவேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சி.பி.ஆர். பவுண்டேஷன், "நெஸ்ட்' அமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் பந்தலூர் , "எய்ட் அட் ஆக்ஷன்' ஆகிய அமைப்புகள் இணைந்து பந்தலூர் அருகே நெலாக்கோட்டையில் உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. 

இதில், சி.பி.ஆர். பவுண்டேஷன் கள அலுவலர் குமாரவேல் பேசுகையில்,""பல்லுயிர் பெருக்கம் என்பது பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழ கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களின் வரிசை தான். மரபு வழி பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழ்நிலை அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை என பல்வேறு வகை படுத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்வகை இனங்களை காப்பது என்பது அவற்றின் இருப்பிடங்களில், வாழிடங்களில் வைத்து காப்பாற்றுவதுதான் சிறப்பான செயலாகும்,'' என்றார். 
 
நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில்,
""மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு தினம் வகுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவில் நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதிலும், கூடலூர் பகுதியில் அனைத்து வகை உயிரினங்கள், தாவரங்கள், விவசாய பயிர்கள் என அனைத்தும் வாழும் தன்மை கொண்டதால், நீலகிரியின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு இளைய தலைமுறையினர் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயலாற்றிட வேண்டும். இப்பகுதி மனிதர்கள் அவற்றை அழிக்காவிட்டாலும், வேறிடத்திலிருந்து வரும் நபர்கள் மூலம் அழிவு பாதையில் செல்கிறது. மூலிகை தன்மை கொண்ட தாவரங்கள், மரங்கள், நுண்ணியிரிகள் போன்றவை அழிந்து வருவதை தடுக்க வேண்டும்,'' என்றார். 
 
கூடலூர் கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராபர்ட் பேசுகையில்,""வனப்பகுதியில் வளரும் வனவளங்கள் மட்டுமின்றி வீட்டு தோட்டத்தில் வளரும் மா, பலா, கொய்யா, நெல்லி போன்ற மரங்களும் மருத்துவத்துறையிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையை குப்பை மேடாக்கவதையும், நீரோடைகளை அசுத்தப்படுத்துவதையும் தடுத்திட மாணவர்கள் முன்வரவேண்டும்,'' என்றார்.

பொன்னானி ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில்,""மனிதன் விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டவனாகவும், தன்னம்பிக்கை உள்ளவனாகவும், எதிர்கால வாழ்க்கையை உணர்ந்தவனாகவும் வாழ கற்றுக்கொண்டால் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர ஏதுவாகும். தன்னையும், சமுதாயத்தையும் வளர்த்துக்கொள்ள மாறினால் இயற்கை வளங்களையும் காப்பாற்றும் வகையில் மாறிட ஏதுவாகும்,'' என்றார். 


நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 

நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,""நுகர்வோர் பாதிக்கப்படாலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால் எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பேரிடர்களை தடுக்க இயலும். வனப்பகுதிகளை அழிக்க கூடாது ,'' என்றார். 

நிகழ்ச்சியில் மையத்தின் நிர்வாகி கணேசன் மற்றும் 60 க்கும் மேற்ப்பட்ட பயிற்சி மைய இளைஞர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சசீதரன் வரவேற்றார். 

எய்ட் அட் ஆக்சன் மையத்தின் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

திங்கள், 9 மே, 2011

நுகர்வோர் நலன் : அடுத்த அரசுக்கு சில ஆலோசனைகள்


இரா.தேசிகன். அறங்காவலர், கன்ஸ்யூமர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா : பணம் கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குபவர், நுகர்வோர். அப்படிப் பார்த்தால், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் படிப்பறிவில்லாதவரும், பட்டப்படிப்பு படித்து ஆடம்பர காரில் செல்பவரும் நுகர்வோரே. "கொடுத்த காசுக்கு உரிய பொருளை, சேவையை கேட்க வேண்டும்' என்ற விழிப்புணர்வு தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நுகர்வோரின் நலன் காக்க, அடுத்து அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் இரா. தேசிகன்.
எந்த ஒரு பொருளையோ, சேவையையோ விலை கொடுத்து வாங்கும் நுகர்வோர், அதில் ஏதேனும் குறை இருந்தாலோ, சேவை குறைப்பாடு இருந்தாலோ, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம், மாவட்ட, மாநில நுகர்வோர் கோர்ட்டு களில் வழக்கு தொடுத்து, உரிய தீர்வு பெற முடியும். சாமானியர்களும் பயன்பெறும் வகையில், 1986ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் வழக்குகள், 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில், நுகர்வோர் கோர்ட் வழக்குகளும், சிவில் வழக்குகளைப் போல ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.
இதனால், சாதாரண சிவில் கோர்ட் வழக்குகள் கிட்டத்தட்ட, 125 ஆண்டுகள் நடந்ததாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை, நுகர்வோர் கோர்ட் வழக்குகளுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. என்னுடைய ஒரு வழக்கு, ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. என்னைப் போன்ற சமூக ஆர்வலருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை நினைத்துபாருங்கள்.
நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்காட, வக்கீல்கள் தேவையில்லை என்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக, எதிர்மனுதாரர்கள், வக்கீல்களை வைத்து ஒவ்வொரு வழக்குக்கான தேதிகளை வைத்துவிடுகின்றனர். தேசிய நுகர்வோர் கோர்ட் வழிகாட்டுதலின்படி, ஒரு வழக்கில் இரண்டு முறைகளுக்கு மேல்,"வாய்தா' வழங்கக்கூடாது. ஆனால், நுகர்வோர் கோர்ட் வழக்குகளுக்கும் வரையறை இல்லாமல், வாய்தா வழங்கப்படுகிறது.
நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல், "பெஞ்ச்' அமைக்கப்படவில்லை. அலுவலக உதவியாளர், "ஸ்டெனோகிராபர்' உள்ளிட்ட அலுவலக பணியாளர் பற்றாக்குறையால், நுகர்வோர் கோர்ட் நிர்வாக செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது.இவையெல்லாம், நுகர்வோர் கோர்ட் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருப்பதற்கு காரணங்கள். மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுகளில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும்பட்சத்தில், எதிர்மனுதாரர், அந்த தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது தீர்ப்புபடி, மனுதாரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
இந்த இரண்டு வழிமுறையை பின்பற்ற தவறும் எதிர்மனுதாரரை கைது செய்ய, நுகர்வோர் கோர்ட், உள்ளூர் போலீசிற்கு, "பிடிவாரன்ட்' உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவையும், சில போலீசார் நடைமுறைப்படுத்துவதில்லை. பிடிவாரன்ட் உத்தரவை செயல்படுத்தாத போலீசாருக்கு விளக்கம்கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பும் அவலநிலையில் தான் இன்னும் நுகர்வோர் கோர்ட்டுகள் உள்ளன.
நுகர்வோர் கோர்ட் வழக்குகளை இழுத்தடிப்பதற்கு என்றே சில வக்கீல்கள் உள்ளனர். பிடிவாரன்ட் உத்தரவை செயல்படுத்தாமல், எதிர்மனுதாரருக்கு சாதகமாக செயல்பட சில போலீசாரும் இருக்கின்றனர். இவர்களே சாமானியர்களுக்கு நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதி கிடைக்க காலதாமதம் ஆவதற்கு போதுமானவர்கள். நுகர்வோர் கோர்ட் வழக்குகளில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்ல முடியாது.
இந்நிலை மாற, புதிதாக அமைய உள்ள அரசு, அவசியம் செயல்படுத்த வேண்டிய ஆலோசனைகள்:
வழக்குகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க, நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளையும், பணியாளர் நியமனத்தையும் செய்துத் தர வேண்டும்.
நுகர்வோர் கோர்ட்டுகளின், "பிடிவாரன்ட்' உத்தரவுகளை செயல்படுத்த போலீஸ் நிலையங்களில் தனிபிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் இந்த உத்தரவுகளை இரண்டு நாட்களுக்குள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
நுகர்வோர் கோர்ட் வழக்குகளில், இருமுறைக்கு மேல் எதிர்மனுதாரர் தரப்பில் வாய்தா கேட்கப்படும், ஒவ்வொரு முறைக்கும், மனுதாரருக்கு, 500 ரூபாய் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதிபதிகள் ஓய்வுபெறும்போது, காலியாகும் அப்பணியிடத்தை உடனடியாக நிரப்பி, வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நுகர்வோர் கோர்ட் இணையதளம், "அப்-டேட்'டாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று நுகர்வோருக்கு பயன் கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டும். இதன்மூலம், நுகர்வோர் என்ற வட்டத்தில் வரும், கோடிக்கணக்கான மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களது பாராட்டுகளும் அரசுக்கு சென்று சேரும்.

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!


மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!

நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எது மரபணு (Gene)?

ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா, கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்) கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக் கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில் வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும் எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.

அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா? என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.

எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?

காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது. கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள், ‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்' காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப் பயிர்கள். எப்படி?

உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில், பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச் சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில் நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம். ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும், பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன? குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.

தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.

பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு, களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில் கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது சமீபத்திய சாதனை.

‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…

உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும், பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ, பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய் மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான். ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.

இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!

‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின் மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.

முதலில் இது தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த “பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).

மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.

ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும் வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு (sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.

நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள், auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம் கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள் காரணமாக இருக்கக் கூடும்.

மரபணு ஊடுருவல் (Gene Transfer)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.

வெளிபரவல் (Out Crossing)

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள் விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும் வாய்ப்புண்டு.

பதிலளிக்கப்படாத பல கேள்விகள்

“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை. சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம். ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும் குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான் Globalisation நியதியா ?

மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.

அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.

தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.

எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!

சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள்

சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள்

tree









மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
tree1












பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் மரகன்றுகளை நடலாமே.
tree2












தண்ணீர், காகிதம், ஆற்றல் மூலங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாமே!
tree3












பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாமே
tree4












மிக குறுகிய தூரங்கள் செல்வதற்கு மிதி வண்டி(அ) நடைபயிற்சி மேற்கொள்ளலாமே
tree5












மிக நீண்ட தொலைவு செல்வதற்கு வாகனங்களை பயன்படுத்தலாமே
tree6












குழல் விளக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை ஆற்றலை சேமிக்கலாமே
tree7












சூரிய ஆற்றல் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தலாமே.
tree8












வீட்டின் மேற்கூரைகளில் வீணாகும் உணவுப் பொருட்களை பறவைக்கு அளிக்கலாமே.
tree9












மக்கும் தன்மையுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்
tree10












குளிப்பதற்கு Shower-ஐ பயன்படுத்தலாமே குடிநீர் சிக்கனம் தேவை.
tree11























வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நாயக்கன்சோலை இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில் 
இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.






கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் , 
மக்கள் மையம் ,  தமிழ்நாடு அறக்கட்டளை; 
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்; 
நாயக்கன்சோலை கிராம மக்கள்; 
ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் 
ஆகியவை இணைந்து 
நாயக்கன் சோலை நடுநிலைப்பள்ளி வளாகத்தில்
 இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின
முகாமில் கண் பரிசோதகர்கள் பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர் 

முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மக்கள் 

கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு குறித்து
 மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் விளக்கமளித்தார் .

  இதில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர். அமராவதிராஜன் மற்றும் டாக்டர்கள் 100 நோயாளிகளை பரிசோதனை செய்தனர். அதில், 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டிக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

ஊர் பிரமுகர் தியாகராஜா வரவேற்றார். கிராம தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், எச்.ஏ.டி.பி., சமுதாய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, தேவதாஸ், பள்ளி ஆசிரியர் அனிதா, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.