அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 28 ஜூன், 2011

சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகசிய வாக்கெடுப்பு

கிராமத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சாராயம் என்பதை உணர்ந்தார். குடிப்பது ஆண்களாக இருந்தாலும் குடியால் பாதிப்பது பெண்களும் குடும்பத்தினரும்தான் அதிகம் என்பதை அறிந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தினார். ஒரு கிராமத்தில் 25 சதவீத பெண்கள், மதுவிலக்கு அமல்படுத்தக் கோரினால், அந்த கிராமத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தினார். 
 
இதையடுத்து, 2009ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. 1949ம் ஆண்டு பம்பாய் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு கிராமத்தில் 25 சதவீத பெண் வாக்காளர்கள் தங்களது கிராமத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநில கலால் துறையிடம் மனு கொடுத்தால், அதன் அடிப்படையில் அந்த கிராமத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 சதவீத வாக்காளர்கள் வாக்களித்து இருந்தால் அந்த கிராமத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். சாராயம் விற்பது நிறுத்தப்பட வேண்டும். இப்படி ஏராளமான கிராமங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகசிய வாக்கெடுப்பு 
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

விருட்சமாகும் ஒரு விதை!

அன்னா...விருட்சமாகும் ஒரு விதை!
ஏம்ப்பா, அவர் சொல்றதை கவர்மென்ட் ஏத்துக்குமா? ஏத்துண்டா நல்லது தாம்பா எதிர்காலத்துல..
* ஆமாமா... கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் வாங்கறது மொத, எல்லாத்துக்குமில்லே நோட்டை நீட்ட வேண்டியிருக்கு... இதுக்கு முடிவு வந்தா சுபிட்சம் வந்திரும்ல..

அது சரி தான், நம்ம ஜனநாயக நாட்டுல, பார்லிமென்ட் எதுக்கு இருக்கு; அது தானே எல்லாத்தையும் செய்யணும்; அதை இவரெல்லாம் மிரட்டறது நல்லாவா இருக்கு...
?
நீ சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. எப்படியோ நல்லது நடந்தா சரிதேன்...�
இப்படி நாகர்கோயில் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்த நேரத்தில், ருசிகரமான அளவளாவல் காற்றில் மிதந்தபடி வந்தது.
இவர்கள் பேசியது சரியா, தவறா என்று பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், யாரை பற்றி இந்த படிப்பறியா மக்கள் பேசிக் கொண்டிருந்தனர் என்றால் வியப்பான ஒன்று.
அவர் தான், அன்னா ஹசாரே. சமூக ஆர்வலரான இவர், நாட்டில் ஆட்சி, அரசு நிர்வாகத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர். அரசுடன் இவர் தலைமையிலான குழு பேச்சு நடத்தினாலும், இது நாள் வரை இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மசோதாவை நிறைவேற்றும் பொறுப்பு, பார்லிமென்ட்டிடம் தானே இருக்கிறது.
லோக்பால் மசோதாவில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் அன்னா. இதை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும் சில முக்கிய விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
நம் நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சியில் ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். ஆகையால், நாட்டின் மீதுள்ள அக்கறையில் சிவில் சொசைட்டியினர் சொல்லும் யோசனைகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தங்களது யோசனைகள் எல்லாவற்றையும் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று அரசை பணிய வைக்கும் தொனியில் வரம்பு மீறக்கூடாது தானே.
அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் சேர்ப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து பரிசீலனை செய்ய கால அவகாசம் தர வேண்டும்.
முதலில் மசோதாவை தாக்கல் செய்ய அரசை அனுமதித்தாலே போதும். அதன் பின், மாநில சட்டப் பேரவைகளுக்கு அனுப்பி, அவற்றின் கருத்தை அறிய முடியும். அதையடுத்து, லோக்பால் மசோதா எல்லா கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.
நமது அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவரையில் 114 முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் எப்படி சாத்தியமானது. மக்களாட்சியில் எல்லாமே சாத்தியம்தான். முடியாதது என்பது ஒன்றும் இல்லை.
அன்னா போன்ற சமூக ஆர்வலர்கள் போட்டது விதை தான்; அது ஆலாய் பரந்து விரிந்து விருட்சமாக பலன் கொடுக்கப்போவது மட்டும் உறுதி.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்



ஊட்டி, ஜூன் 26.06.2011
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, 
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்கம் மற்றும் 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  சார்பில் 
ஊட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்த பிரசார கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். 
நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரசாரத்தை எழுத்தாளர் சங்க தலைவர் ஜே.பி., துவக்கி வைத்தார். 
மனநல மருத்துவர் ஜெரால்டு, போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசினார். 
கூட்டத்தில் 
போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவனைகளிலும் மறு வாழ்வு மையம், போதை மீட்பு மையங்கள் உருவாக்க வேண்டும். 
டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரசின் வருமானத்தை பெருக்க மதுவை தவிர்த்து வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். 
18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். 
பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 20 ஜூன், 2011
















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 19 ஜூன், 2011

15 Aug சுதந்திர தினம்

15 Aug 

சுதந்திர தினம்



காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்

வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்
இன்னும் சில நாட்களில் வருகிறது இன்னொரு சுதந்திர தினம். அதை முன்னிட்டு இதோ என்னுடைய கவிதை ஒன்று.

ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்

வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் - என்
வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால் - ஆஹா
கிடைத்தது சுதந்திரம் ! கிடைத்தது சுதந்திரம் !

நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு - என்
குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால் - அன்று
மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்
கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்

முகமும், முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய், காற்றாய், நிழலாய், அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்

ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை, ஆசைகளை
பயத்தையும், கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி - குறைந்த பட்சம் ஒரு தோழனாவது -
கூட இருந்தால் பாக்கியம். அது சுதந்திரம்.

என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம் !
 
அன்புடன் 
சு. சிவசுப்பிரமணியம்  
தலைவர்

---
பின்குறிப்பு

கொடிக்கு அல்ல, ஆசிரியர்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்து வெயிலில் நின்று, பின் கொடுத்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு விட்டாலும், எல்லோரும் போன பின்பு இப்படி விளையாட முடிந்தால் அது தான் உண்மையில் சுதந்திரம்.
கொடிக்கு அவ மரியாதை என்று யாராவது இந்த குழந்தைகளின் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ ?
 
அன்புடன் 
சு. சிவசுப்பிரமணியம்  
தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இந்தியாவின் முதல் சுதந்திர தின photos

இந்தியாவின் முதல் சுதந்திர தின

photos 

National Flag
National Flag                      
வாசகர்கள் அனைவருக்கும்
சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
-
என்றென்றும் நட்புடன்
சு.  சிவசுப்பிரமணியம் 
தலைவர்
மற்றும் நிர்வாகிகள் 
 




சிவா





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் - மக்கள் மையம்

சனி, 18 ஜூன், 2011

லேதல் பேக்குகள்,    லெதர் பெல்டுகள்
என லெதர் வகை பொருட்களை விரும்பும் நண்பர்களே
இவை தயாரிக்கும்போது 
சித்ரவைபடும் விலங்குகள் பற்றி சிறிது சிந்திப்பிர்களா ? 
 
இவற்றை கொன்று நாம் ஆடம்பரமாக வள வேண்டுமா 
Please don't use leather accessories…

We have no right to kill animals to make fashion statement!!! !


Remember…Killing will stop only when demand declines!!!


Please send this to as many people as you know…


They are crying for help…..Lets help them survive!!!

This massages and its attachments may contain confidential, proprietary
or legally privileged information and is intended solely for the use
of the individual or entity to whom it is addressed. If you have
erroneously received this message, please delete it immediately and
notify the sender.
Any unauthorized review, use, disclosure,
dissemination, forwarding, printing or copying of this email or any
action taken in reliance on this e-mail is strictly prohibited and may
be unlawful. E-mail transmission cannot be guaranteed to be secure or
error-free as information could be intercepted, corrupted, lost,
destroyed, incomplete or contain viruses and any views expressed in
this message are those of the individual sender and no binding nature
of the message shall be implied or assumed unless the sender does so
expressly with due authority of 
Suguna Poultry Farm Limited, 
its
associates/subsidiaries.










கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல்
பாதுகாப்பு மையம்     மக்கள் மையம்
பந்தலூர் 

அம்பலமூலா இலவச கண் சிகிச்சை

பந்தலூர் : பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 

தமிழ்நாடு அறக்கட்டளை 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி வயநாடு ஆதிவாசி நலச்சங்கம் 
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  இணைந்து 

அம்பலமூலா ஆதிவாசி நல மருத்துவமனையில் 
இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. 

ஆதிவாசி நலச்சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சோமன் தலைமை வகித்தார். 
ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 


கண் ஏற்கனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 





இதில், 100 பேர் பயன்பெற்றனர். 13 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டனர். 

முகாமிற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்