அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 டிசம்பர், 2011

மக்கள் ஆலோசனை மையம்

ஊட்டி:

"நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்' என தெரிவிக்கப் பட்டுள்ளது

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் ஆலோசனை மையம் சார்பில், ஊட்டியில், மக்கள் ஆலோசனை மையம் துவக்கப்பட்டது. மன்ற நிர்வாகி மஞ்சுளா வரவேற்றார்.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு, மக்கள் மைய மற்றும் மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது:

நுகர்வோர் விழிப்புணர்வு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது; சிலரால் மட்டுமே நுகர்வோர் குறித்து பேசப்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, நுகர்வோர் சம்மேளனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 18 சதவீதத்தினர் மட்டுமே விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; 12 சதவீதத்தினர் மட்டுமே நுகர்வோர் குறை தீர்மன்றத்தை அணுகுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பல சிறப்பம்சம் இருந்தும், அதை பயன்படுத்த இயலா மல், அறியாமல் உள்ளனர். இந்நிலை மாறி விழிப்புணர்வு பிரசாரம், கருத்தரங்கு, பயிற்சி முகாம்கள் நடத்தினாலும் முழுமையாக சென்றடைவதில்லை. மக்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே சிந்திக்கின்றனர். ஏமாறும் மக்கள், நிவாரணம் பெறவும், புகார் செய்யவும் வழி தெரியாமல் உள்ளனர். இவற்றை தெளிவுபடுத்தவும், பாதிப்புக்கு நிவாரணம் பெறவும் உதவ, ஆலோசனை மையம் துவக்கப்பட்டுள்ளது.

மையத்தை அணுகி தொடர்பு கொண்டால், நுகர்வோருக்கான ஆலோசனை மற்றும் வழிமுறை தெளிவுபடுத்தப்படும். 94885-20800, 93453-98085, 94880-94501, 96265-85301 என்ற எண்களில், காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறினார்.மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட நுகர்வோர் செயல்பாட்டு இயக்க செயலர் வக்கீல் ஆனந்தம், நீலகிரி மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலர் வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பந்தலூர் மருத்துவமனை வளாகத்தில் 25 வது நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஒரு நாள் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டத

விஜய சிங்கம் வரவேற்றார்  
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்
cchep cc pro...1.JPG 

நிகழ்ச்சிக்கு கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் இன்னாசிமுத்து தலைமை தாங்கி பேசும்போது நுகர்வோர் சட்டம் இயற்றப்பட்ட 1986 முதல்  இன்று வரை  25 -- ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் மக்களிடம் அரவமின்மையல் விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது 
மக்கள் தேவை இல்லாத பொருட்களுக்கு ஆசை படுவதை விட தேவைகளை மட்டும் வங்கி பயன் படுத்துவதால் அதிக செலவினங்கள் தவிர்க்கப்படும். போலி விளம்பரங்கள் மற்றும் இலவசங்களுக்கு அடிமை ஆகாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.  தற்போது கலவி நிறுவனகள் மற்றம் பல சேவை நிறுவனகள் அரசு அங்கிகாரம் அரசு சான்றிதழ் என கூறி விளம்பர படுத்துகின்றன இவற்றின் உண்மை தன்மை அறிந்து பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



cchep cc pro...3.JPG

 
சிறப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரமான தங்கம் மற்றும் ஹால் மார்க் முத்திரைகள் 916  22 கரட்  தரங்கள் குறித்தும் தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியன் குறித்தும் விளக்கமளித்தார்.
 
பந்தலூர் அரசு மேல்நிலை உதவி பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி  நுகர்வோர் கடமைகள் ரசிதுகள் ஆவணங்கள் ஆகியன  குறித்து விளக்கமளித்தார் 
 
பொன்னானி பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் சுற்றுச்சுழல் பாதுகாப்பு அதன் அவசியங்கள் மற்றும் ஓசோன் படலங்கள் பாதிப்பு மக்களின் எதிர்கால பதிப்புகள் குறித்து விளக்கமளித்தார் .
 
சேரன்ஸ் அறக்கட்டளை இயக்குனர் தங்கராஜ் பட்டு துணிகள் மற்றும் துணிகள் வாங்கும்போது கணிக்க வேண்டியன குறித்து விளக்கமளித்தார் .
 தொடர்ந்து ஓய்வு தலைமையாசிரியர் பெள்ளு, பிரைட் பியுச்சர் அகாடமி முதல்வர்    தனராஜ், மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தனர் 
 
 
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவர்கள்  தையல் நிலையம் மாணவர்கள் மகளிர் குழுவினர் உட்பட 100 க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்
கணேசன் நன்றி கூறினார்.
 
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center


Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com




ஞாயிறு, 4 டிசம்பர், 2011

எய்டஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலூர்: பந்தலூரில்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் எய்டஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் தண்டபாணி, எய்ட்ஸ் நோய் பரவுதல் மற்றும் தடுத்தல் குறித்த பிரசுரங்களை வெளியிட்டார். நெல்லியாளம் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் "ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்' இயக்குனர் விஜயன்சாமுவேல், ஐ.சி.­டி.சி. ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, நுகர்வோர் சங்க நிர்வாகி தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்




.*அம்பலமூலாவில் நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய ம்சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வினோத் வரவேற்றார். சங்க மேலாளர் ரொனால்டோ தலைமை வகித்தார். சோமன்,ஐ.சி.டி.சி.கவுன்சிலர்விஜயசாரதி ஆகியோர் பேசினார். லேப் நிர்வாகி கவிதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்