அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 மே, 2012

கூடலூர் நுகர்வோர் மைய மக்கள் மையத்தின் ஆலோசனை கூட்டம்


ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின் மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் ஊட்டியிலுள்ள வட்டார அலுவலகத்தில் நடந்தது. 
 
செயலாளர் கணேசன் வரவேற்றார். 
 
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு, பாண்டிசேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண் டனர். 
 
 கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு செயல்பாடுகள், அமைப்பு வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைப்பு நிர்வாக குழு தொடர்ந்து செயல்பட வேண்டும். 
 
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இக்காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 
 
நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு தரமற்ற, கலப்பட உணவுகளை தடுக்க வேண்டும். 
 
அரசுத்துறைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்வேறு அரசு பணிகள், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்படுகிறது. அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிட வேண்டும். 
 
கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள், கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனை அரசு சரி செய்ய வேண்டும். 
 
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் நிலைபாடுகள் மோசமாக உள்ளது. 11 தகவல் ஆணைய பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிறைவு செய்து தகவல் உரிமை சட்டம் சிறப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நுகர்வோர் கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
 
கூட்டத்தில் இணை செயலாளர் ஜெயச்சந்திரன், இந்திராணி, பொருளாளர் கனகலிங்கம், வட்டார பொறுப்பாளர்கள் மாரிமுத்து, முருகன், பசுபதி, பாண்டியன், நிர்வாக குழுவினர் வேலு, தங்கராஜா, செல்வராஜ், ராஜசேகர், தேவதாஸ், ஜெயபிரகாஷ், மஞ்சுளா, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
ஊட்டி வட்டார பொறுப்பாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பேருந்து நிலைய பராமரிப்பு பணி மோசம் கூடலூர் நுகர்வோர் மையம் குற்றசாட்டு

ஊட்டி: ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்


மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பயணிகளும், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் வந்திறங்கும் ஊட்டி மத்திய பஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பாரமரிப்பும் இன்றி மிக மோசமான நிலையில் இருந்தது. பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள் பல முறை வலியுறுத்திய பின் கடந்த மாதங்களில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி வழங்கி சேதமடைந்திருந்த பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் மலர் கண்காட்சி துவங்கிய காலத்தில் துவக்கப்பட்டது. தற்போது பஸ் நிலையத்தின் பாதி அளவிற்கு மட்டுமே தார் போடப்பட்டுள்ளது. தார் போடப்பட்ட பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ்கள் சக்கரங்கள் திரும்பும் இடங்களில் தார் உதிர்ந்து பெயர்ந்து வருகிறது. மிக மோசமான முறையில் தார் போடப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.


மேலும் தண்ணீர் செல்ல எந்தவித நடவடிக்கையும்இன்றி மேடு பள்ளமாக தார் பரப்பப்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் மீண்டும் குண்டும் குழியும் ஏற்படும் அபயாம் உள்ளது. மக்களின் வரிப்பணம் முறையாக செலவு செய்யப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. உரிய ஆய்வுகள் மேற்கொண்டு முறையாக தரமான முறையில் பஸ் நிலைய பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.


 இப்படிக்கு 

சிவசுப்பிரமணியம் 

தலைவர்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு

மையம்  மக்கள் மையம்

 



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 23 மே, 2012

"ஜில்'லுன்னு ஒரு டூர்!

நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  இந்த தகவல் பக்கத்தை வைத்து கொண்டால் குழப்பம் இல்லாமல் உங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்யலாம்.  


ஊட்டி தாவரவியல் பூங்கா:
கடந்த 1845ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஊட்டியில் காய்கறி தோட்டம் உருவாக்கப்பட்டு "தாவரவியல் பூங்கா' என அழைக்கப்பட்டது. இதில், காய்கறிகளை விளைவித்து, தங்கள் தேவைக்கு அறுவடைக்கு செய்து வந்தனர். காலப்போக்கில், காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டது. இதையடுத்து, ஊட்டியில் வசித்து வந்த ஆங்கிலேய மக்களிடம் நன்கொடை மற்றும் சந்தா மூலமாக வசூலிக்கப்பட்ட தொகை மூலம், இப்பகுதியில் ஒரு தோட்டக்கலை அமைப்பை ஏற்படுத்தி, பொது பூங்காவாக துவங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 1847ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், தனது சொந்த ஆர்வத்தில், பூங்கா மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். பூங்காவை பொலிவாக்கும் வகையில், தோட்டக்கலை அமைப்பில் பிரசித்தி பெற்ற தோட்டக்கலை நிபுணர் ஐவர் என்பவர், பூங்காவின் கண்காணிப்பாளராக 1848ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.பூங்காவின் பொறுப்பை ஐவர் ஏற்றுக் கொண்ட போது, பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் காணப்பட்டன. லண்டனில் உள்ள "க்யூ' பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை ஐவர் பெற்றிருந்ததால், 10 ஆண்டுகள் போராடி லண்டன் "க்யூ' பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை மாற்றினார்.தோட்டக்கலை துறை மூலம், ஆராய்ச்சிக்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்ட பின், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் வளர்க்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. தற்போது, 117 குடும்பங்களை சேர்ந்த 2,000 ரக தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், 144 ரக பரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிகள், டைனோசர் காலத்தில் இருந்த "ஜிங்கோபைலபா' என்ற மரம் உட்பட ஏராளமான மர வகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
* ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் தாவரவியல் பூங்கா உள்ளது. கோடை சீசன் காலங்களில் அரசு "சர்கில்' பஸ்கள் இயக்கப்படுகின்றன; தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.

ஊட்டி படகு இல்லம்:
படகு சவாரிக்கும், மீன் பிடிக்கவும், 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சலீவனால், ஊட்டி நகரின் மத்தியில் ஏரி உருவாக்கப்பட்டது; 2.75 கி.மீ., நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை இந்த ஏரியின் நீர், குடிநீராக பயன்பட்டு வந்தது. இதற்கு பின், ஊட்டி நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள், ஏரியில் கலந்ததால், குடிக்க பயனற்று போனது. சுதந்திரத்துக்கு பின், இந்த படகு இல்லம் ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலமாக மாறியது.தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. சிறுவர்களை கவர, ஏரியின் கரையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது; இங்குள்ள மினி ரயிலில் பயணம் செய்து இயற்கையை ரசிக்க முடியும்.படகு இல்லத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இரு ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் 55 லட்சம் மதிப்பில் புதிய படகு இல்லம் உருவாக்கப்பட்டது. படகு சவாரி முடிந்தவுடன், குதிரை சவாரி மேற்கொள்ள ஏதுவாக, தனியார் சார்பில் குதிரைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. படகு இல்லத்துக்குள் நுழைய சிறுவர்களுக்கு 5 ரூபாய், பெரியவர்களுக்கு 10, வீடியோ காமிராவுக்கு 75, புகைப்பட காமிராவுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் மான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது; பூங்காவில் கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
* ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள படகு இல்லத்துக்கு செல்ல, அரசு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் மூலமும் செல்ல முடியும்.

தொட்டபெட்டா சிகரம்:
கடல் மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது; தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகவும் கருதப்படுகிறது. நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் "உயரமான சிகரம்' என்று பொருள்.வனத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளதால், சிகரத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் காட்சிமுனை அமைக்கப்பட்டு, "டெலஸ்கோப்' நிறுவப்பட்டுள்ளன; ஊட்டி நகரம், குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு ரசிக்கலாம்
* ஊட்டி - கோத்தகிரி சாலையில், ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது. கோடை சீசன் காலங்களில், அரசுப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில், கோத்தகிரி பஸ்களில் சென்று தொட்டபெட்டா சந்திப்பில் இறங்கி தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம். இந்த சந்திப்பிலிருந்து தொட்டபெட்டா சிகரம் செல்ல 3 கி.மீ., தூரம் உள்ளதால் வாகனங்களில் செல்வது சிறந்தது. "டிரக்கிங்' விரும்புபவர்கள், இந்த சந்திப்பிலிருந்து நடந்து சென்றால், புது அனுபவமாக இருக்கும்.

ரோஜா பூங்கா:
ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு கடந்ததை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், ஊட்டி விஜயநகரப் பகுதியில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டு, "நூற்றாண்டு ரோஜா பூங்கா' என பெயரிடப்பட்டது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 10 எக்டேர் பரப்பில் 5 தளங்களில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில், 4,000 ரக ரோஜாக்கள் உள்ளன. ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்கள் கொண்ட பூங்காவாக, ரோஜா பூங்கா திகழ்ந்து வருவதால், சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில், 2006ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில் "கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்' விருது வழங்கப்பட்டது. தற்போது, இதன் பரப்பு விரிவாக்கப்பட்டு புதிய பூங்கா உருவாக்கும் பணி நடந்து வருகிறது
* ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள ரோஜா பூங்கா, இரு புறங்களிலும் சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. செங்குத்தான பகுதியில் பூங்கா உள்ளதால், பஸ்கள் இயக்கப்படுவதில்லை. நடந்தோ அல்லது ஆட்டோவிலோ தான் செல்ல வேண்டும்.

மரவியல் பூங்கா:
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியான 14 லட்சம் மதிப்பில், ஊட்டி பர்ன்ஹில் சாலையில், இரு ஆண்டுகளுக்கு முன் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள இப்பூங்கா, மர வகைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.பூங்காவில், 100க்கும் மேற்பட்ட பல்வேறு சோலை மரங்களும், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் உள்ளன. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களும் முகாமிட்டு வருகின்றன.
* ஊட்டி பஸ் நிலையத்தில் அருகில் உள்ளதால், 5 நிமிடத்தில் நடந்து செல்லலாம்.

பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி:
பைக்காரா நீர்வீழ்ச்சி, சினிமா படப்பிடிப்பில் பிரபலமானது. பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், இங்கு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது; ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், இந்த படகு இல்லத்தில் சவாரி செய்ய விரும்புகின்றனர். ஊட்டியிலிருந்து பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து மற்றும் ஷூட்டிங் பாய்ன்ட் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிகமான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களை காண ஆர்வம் காட்டுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளதால், குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும்.
* ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா நீர் வீழ்ச்சி. தனியார் வாடகை வாகனங்கள் மூலமும், அரசு பஸ்கள் மூலமும் பைக்காரா பகுதிக்கு செல்லலாம்.

உயிலட்டி நீர்வீழ்ச்சி:
சுற்றுலா மையத்தால் இந்த நீர்வீழ்ச்சி அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும், இதை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நீர் வீழ்ச்சியும், கேத்ரீன் நீர் வீழ்ச்சியை போன்று பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியின் அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில், நீலகிரியின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த ஆங்கிலேயர் "ஜான் சலீவன்' நினைவிடம் உள்ளது. இதில், நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், எல்லை கோடுகள் என முக்கிய தகவல்கள் உள்ளதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனாக உள்ளது.
* உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு,கோத்தகிரியில் இருந்து அரசு மற்றும் மினி பஸ்கள் என, காலை 6.00 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

கோடநாடு காட்சிமுனை:
கோடநாடு காட்சிமுனையின் அழகிய கோபுரத்தில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வனங்கள் தெரியும். கோபுரத்தில் உள்ள "பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை காணலாம். நீலகிரி தொகுதிக்கு உட்பட தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் ரசிக்கலாம்.நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் "மாயாறு' ஆற்றின் பயணம், கண்களை விரிவடைய செய்யும் அழகிய வயல்வெளிகள், அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை முகடுகள், உள்ளத்தை கபளீகரம் செய்யும். கோத்தகிரியிலிருந்து கோடநாடுக்கு செல்லும் போது, சாலையின் இருபுறம் பசுமையாக காணப்படும் தேயிலை தோட்டம், பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.
* கோத்தகிரி - கோடநாடுக்கு செல்ல காலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 12 முறை அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கேத்ரீன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, காலை 9.00 மணியிலிருந்து இரவு 7.30 வரை மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கேத்ரின் நீர் வீழ்ச்சி:
பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை நனைத்து, பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது கேத்ரீன் நீர்வீழ்ச்சி. காட்சி கோபுரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்பவர்கள், தண்ணீரில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் பாசி படிந்திருக்கும் பாறைகள், காலை வாரி விடும். காட்சிக் கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை தாண்டினாலும், விபத்து அபாயம் ஏற்படும். நீர் வீழ்ச்சியை ரசிக்க செல்பவர்கள் இதை கடைபிடித்தால், இனிமையான சுற்றுலாவாக இருக்கும்.
* கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் அரவேணுவில் இருந்து 2.5.கி.மீ., தொலைவில் உள்ளது.

நேரு பூங்கா:
கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ளது நேரு பூங்கா. இங்கு, பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்தும்.
* கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய பகுதிகளில் நடந்து செல்லும் தொலைவில் தான் நேரு பூங்கா உள்ளது.

சிம்ஸ் பூங்கா :
ஜே.டி.சிம் என்ற ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ்பூங்கா, இயற்கையின் அற்புத படைப்பு; பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. கற்பூர மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. யுஜிநாய்டஸ், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் பூங்காவை அலங்கரிக்கின்றன.சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, படகு இல்லம், சிறுவர் பூங்காவும் உள்ளன. பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பையும் காண முடியும்; 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன.
* குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் சிம்ஸ்பூங்கா உள்ளது; குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மினி மற்றும் அரசு பஸ்கள் உள்ளன; குன்னூர் - கோத்தகிரி செல்லும் பஸ்களிலும் பூங்காவுக்கு செல்லலாம்.

லேம்ஸ்ராக்:
சிம்ஸ்பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனை, பயணிகளுக்கு "திரில்' அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும்; காட்சி முனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளதால், புதிய அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் பெறுகின்றனர். காட்சி முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சி முனைகளை கண்டு ரசிக்க முடியும்; பள்ளதாக்கில் கொட்டிக் கிடக்கும் இயற்கை காட்சிகள் மனதுக்கு இதம் தரும்.
* குன்னூரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே செல்வதால், தனியார் வாகனங்களில் செல்வது நல்லது.

டால்பின்ஸ் நோஸ்:
டால்பின்ஸ் நோஸ் காட்சி முனையும், பள்ளதாக்கு காட்சி முனை தான்; லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலை வழியாகத் தான், டால்பின்ஸ் நோஸ் காட்சி முனைக்கும் செல்ல வேண்டும். குதிரை சவாரி, டெலஸ்கோப் போன்றவை இங்குள்ளன; பள்ளத்தாக்கு காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு ரசிக்கலாம். கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பகுதி ஆகியவற்றை, இக்காட்சி முனையில் இருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனை, சுற்றுலாப் பயணிகளுக்கு "குளுகுளு' அனுபவத்தை குறைவில்லாமல் தரும்.
* சிம்ஸ்பூங்காவில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ்கள், தனியார் வாகனங்களில் செல்லலாம்.

முதுமலை புலிகள் காப்பகம்:
கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. தவிர, யானைகள் முகாம், மியூசியம் உள்ளன. இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்; இவர்கள், வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, வாகனங்கள் மூலம், தினமும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும், பிற்பகல் 3.00 மணி முதல் 5.30 மணி வரையும் சவாரி நடத்தப்படுகிறது; ஒருவருக்கு 35 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.யானைகள் மூலம், தினமும் காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 5.30 வரையும் சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். நான்கு பேர் செல்லும் யானை சவாரிக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* முதுமலை தெப்பக்காடுக்கு, ஊட்டியிலிருந்து மைசூர், பெங்களூரு குண்டல்பேட்டை பகுதிக்கு இயக்கப்படும் தமிழக கர்நாடக பஸ்கள் மூலமும், கூடலூரிலிருந்து அரசு பஸ், தனியார் வாகனங்கள் மூலமும் செல்ல முடியும்.
ஊசிமலை: ஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.

National Enviromental Awarness Campaign

  • National Enviromental Awarness Campaign

2012-2013
NEAC 2012-2013 Form
Guidelines for Participation
NEAC Press Matter
2011-2012
NEAC 2011-12 Application
Guidelines for Participation
Undertaking Format
2010-2011
NEAC 2010-11 Application
NEAC 2010-11 Theme
Press release NEAC
 or please visit us http://www.peacetrust.in/national/index.php


http://moef.nic.in/modules/divisions/ee/?f=neac

http://moef.nic.in/downloads/public-information/Notice%20for%20NEAC%202012-13%20already%20published%20in%20the%20newspaper%20on%2028.04.pdf


http://cpreec.org/guidelinessandforms_cpreec.pdf

 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 20 மே, 2012

சேரங்கோடு இலவச கண் சிகிச்சை முகாம் May 13. 2012




























கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 17 மே, 2012




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 10 மே, 2012

கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும் - 18




நமக்கு சேவைக் குறைபாடு நிகழ்ந்ததாக உணர்ந்தால் எத்தகைய நிறுவனத்தின் மீதும் நாம் வழக்கு தொடர முடியும்

இந்தத் தொடரில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறை தொடர்பான நுகர்வோர் குறைபாடுகள் என்ன என்பது பற்றியும், அது தொடர்பான  வழக்குகள் சிலவற்றையும்  பார்த்து வந்தோம். இந்த வாரம் மேலும் சில துறைகளின் முக்கிய வழக்குகள் குறித்துப் பார்க்கலாம்.

கல்வி நிறுவனங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயகிருஷ்ணன், நாமக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். அவருக்கு கல்லூரியின் சூழ்நிலை சரிப்பட்டு வராததால் ஓராண்டுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து, டி.சி. கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்து, ஆறு மாதம் கழித்து டி.சி.யை வழங்கியுள்ளது. இதனால், ஜெயகிருஷ்ணனுக்கு ஓராண்டு படிப்பு வீணானது. இதனால், மன உளைச்சலடைந்த அவர் நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது புகாரளித்தார். வழக்கை விசாரித்த குறைதீர்மன்றம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மன உளைச்சலுக்கு 50,000 ரூபாய் வழங்கவும், வழக்குச் செலவுக்கு 2,000 ரூபாய் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

பெரம்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரஷ்யாவுக்குச் சென்று எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கல்வி ஆலோசனை நிறுவனத்திடம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். விமானப் பயணச் சீட்டுக்கென்று தனியாக ஒரு லட்சம் ரூபாய் கட்டியிருந்தார்.

‘பாடங்கள் ஆங்கிலத்தில்தான் கற்றுத் தரப்படும். புத்தகங்களுக்குக் கட்டணம் இல்லை. நல்ல வசதியான தங்கும் விடுதி. சலுகைக் கட்டணத்தில் உணவு போன்றவை அந்தப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும். ரஷ்யப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்ல பாதுகாவலர் ஒருவர் சென்னையில் இருந்து உடன் வருவார்’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறது அந்தத் தனியார் கல்வி ஆலோசனை நிறுவனம். ஆனால், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல யாரும் இல்லை. உணவுக்காக வாரம் ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. பாடங்கள் ரஷ்ய மொழியில் கற்றுத் தரப்பட்டது. எனவே ஆறாவது நாளிலேயே சென்னை திரும்பிய மாணவி அந்நிறுவனத்தின் மீது, காவல் துறையில் புகார் செய்ய... 86,750 ரூபாயை அந்நிறுவனம் கொடுத்தது. மீதிப் பணம் தராமல் ஏமாற்றியதால் மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்தார். ஆணையம் மாணவிக்கு மீதிப் பணம் 2,13,300 ரூபாய் தரவும், மன உளைச்சலுக்காக 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது.

இதுபோல நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவருக்கு 18 மாதங்களாகியும் கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம் விதித்து, ஆறு வாரங்களுக்குள் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதுடன் மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய், வழக்குச் செலவுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டுமென கூறியது நுகர்வோர் குறைதீர் மன்றம்.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதத் தவணையில் பணம் கட்டி வீட்டுமனை வாங்கும் பலரும் அது தொடர்பான சேவைக் குறைபாட்டுக்கு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். கரூரைச் சேர்ந்த சேதுராஜ் என்பவர் அவரது மகன் பெயரில் கரூர் ரியல் எஸ்டேட் ஒன்றில் மாதந்தோறும் 250 ரூபாய் வீதம் 40 மாதங்கள் தவணை செலுத்திய பிறகு, பதிவு செய்வதற்கு 3,000 ரூபாய் பணம் கட்டினார். ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ‘பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், மனை வழங்க முடியாது’ என்று கூறிவிட்டனர். இதனால் மன உளைச்சலடைந்த அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளித்தார். நுகர்வோர் குறைதீர் மன்றம் சேதுராஜ்க்கு ஒதுக்கப்பட்ட மனையை வழங்க உத்தரவிட்டதுடன் மன உளைச்சலுக்காக 30,000 ரூபாயும் வழக்குச் செலவுக்கு 3,000 ரூபாயும் தீர்ப்பு வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் கூறியது.

ரியல் எஸ்டேட் நிறுவனம் வாக்களித்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருந்தாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவோம் என உத்தரவாதம் கொடுத்து அந்தக் கெடுவுக்குள் முடித்துக் கொடுக்காவிட்டாலோ, தற்காலிக விலையேற்றத்தால், குறிப்பிட்ட ஃப்ளாட் ஒதுக்கிவிட்டு, வேறு காரணங்களால் மாற்றிக் கொடுத்தாலோ இதுபோல் இன்னும் வேறு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலோ தாராளமாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் அணுகலாம்.

தங்க நகை
தங்க நகை தொடர்பான புகார்களுக்கும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். நாகர்கோவிலைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர் அங்குள்ள நகைக்கடையொன்றில் தங்க செயின் ஒன்று வாங்கியுள்ளார். அந்த நகையை அணியும்போது, கழுத்தில் குத்தல் ஏற்படவே அதைச் சரி செய்யவும், அழுக்கு எடுத்துத் தரவும் அந்த நகைக் கடைக்கு மீண்டும் சென்று நகையைக் கொடுத்துள்ளார். அதற்கு அவர்கள் பில் கொடுக்காமல் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளனர். பின்னர், அந்த நகையை வாங்கிப் பார்த்தபோது 260 மில்லிகிராம் எடை குறைந்துள்ளது. சரியான எடையில் புதிய நகை வேண்டுமென்று கேட்டபோது,  சேதாரம் பிடித்தம் செய்வோம் என நகைக் கடைக்காரர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடைக்காரர் நகையைக் கொடுக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளித்தார். நுகர்வோர் குறைதீர் மன்றம் நகைக் கடையின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ராமலட்சுமிக்கு தங்க நகையைத் திருப்பி வழங்கவும்,  மன உளைச்சலுக்கு 3,000 ரூபாய் வழங்கவும், 3,000 ரூபாய் வழக்குச் செலவுக்கும், 260 மில்லிகிராம் எடைக்குறைவுக்கு. 750 ரூபாயும் இரண்டு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது.

இதுபோல எந்த நுகர்வோர் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் நாம் புகாரளிக்கலாம். மின்சாரம் தொடர்பான மின்சார ஆணையம் நிர்ணயித்திருக்கும் விதிகளுக்கு புறம்பாக மின்சார வாரியம் செயல்பட்டால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், உரிய காரணமின்றி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தால், உரிய நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க மறுத்தால் நுகர்வோர் மன்றத்தை நாடி தீர்வு பெறலாம். மின்சார வாரியம் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தில் புகாரளித்தும் தீர்வு பெறலாம். மின்சாரக் குறைதீர்ப்பாளர், தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம், 19 - ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை - 600 018  044-28411376,28411378,28411379 tnerc@nic.in என்ற முகவரியில் புகாரளிக்கலாம்.

புதிய குடும்ப அட்டை வழங்குதலில் ஏற்படும் தாமதம், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் போன்றவற்றில் உரிய ஆவணங்கள் கொடுத்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்தல், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களில் குறைபாடு, சரியான நேரத்திற்கு ரேஷன் கடை திறக்காமலிருத்தல் மற்றும் இன்ன பிற குறைபாடுகளுக்கும் மாநில நுகர்வோர் உதவி மையத்தை நாடலாம். 044-  28592828 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உங்களின் பிரச்சினை கொண்டு செல்லப்படும்.www.consumer.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு சென்று நுகர்வோர் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆன்லைனிலேயே உங்கள் புகாரையும் பதிவு செய்யலாம். நுகர்வோர் குறைதீர் மன்றம் செல்வதற்கான ஆலோசனைகளையும் பெறலாம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 5 மே, 2012











பந்தலூர்
பந்தலூர் நெல்லியாளம்  நகராட்சியில் வேலு காமாட்சி என்பவர்  துப்புரவு ஆய்வாளராக பணிபுரிகின்றார்  இவர்  துப்புரவு ஆய்வாளர்  பணிக்கு வருவதில்லை.
இதனால் நெல்லியளம் நகராட்சியில் வகிக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்,  பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளரை காணவில்லை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ 1 ரூபாய் ஒன்று மட்டும் சன்மானம் வழங்கப்படும்  என துண்டு பிரசுரத்தை நகராட்சி பகுதியில் ஒட்டி உள்ளன
இவர் பணிக்கு முறைப்படி வரத்தினால் நெல்லியாளம் நகராட்சியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு
நகராட்சியில் பிறப்பு இறப்பு பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது
இதனால் அரசு வழங்கும் பெண் குழந்தை உதவி தொகை மற்றும் பிரசவ உதவி தொகை  இறந்தவர்களின் வாரிசு சான்று மற்றும் இறப்பு உதவித்தொகை மற்றும் இதர உதவிகள் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நகராட்சி பகுதிகளை உள்ள குடிநீர் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள படாமல் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை உள்ளது 
கோழி கழிவுகள் பந்தலூர் தேவாலா சாலையோரம் உப்பட்டி நெல்லியாளம் சாலையோரம் கொளப்பள்ளி சாலையோரம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளை முறையற்று கொட்டப்படுகிறது இதனை உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை இதனால் பொது மக்கள் மற்றுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  
துப்புரவு ஆய்வாளர் இல்லாததினால் நகர பகுதிகளில் கொசு தடுப்பு புகை அடித்தல் பணி நடை பெறுவதில்லை நகர கால்வாய்கள்  தூர் வரப்படாமல் உள்ளது
நகராட்சியில் உள்ள கறிக்கடைகள், மீன் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை  உரிய ஆய்வுகள் மேற்கொள்ள படாமல் உணவில் கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை உள்ளது.
நகராட்சியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் துப்புரவு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இவர் எத்தனை நாள் பணிக்கு வந்துள்ளார் என்னென்ன பணிகள் மேற்கொண்டுள்ளார் என தகவல் உரிமை சட்டத்தில் கேட்டும் இதுவரை எந்தவித பதிலும் நகராட்சியில் இருந்து வரவில்லை
இது போன்ற பல்வேறு பதிப்புகள்  ஏற்படுவதினால் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணி உரிய முறைப்படி வரவேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படத்தினால் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளரை காணவில்லை என துண்டு பிரசுரத்தை நகராட்சி பகுதியில் ஒட்டி உள்ளன பந்தலூர் பகுதியில் இத்துண்டு பிரசுரததை  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் நிர்வாகி தனிஸ்லாஸ் பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜய சிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஒட்டினர்

--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center


Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.comகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்