அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 28 நவம்பர், 2012

கூடலூர் வருவாய் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

அரசு ஒதுக்கீட்டின் படி ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஒதுக்கீடு


கூடலூர், :  கூடலூர் வருவாய் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் கூடலூர் ஆர்டிஓ ஆதிமூலம் தலைமையில் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
வட்ட வழங்கல் அலுவலர்கள் ராஜேந்திரன், ஜான் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். 
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் பொன் கணேசன், 
எரிவாயு நிறுவன நிர்வாகிகள் உதயகுமார், மிசாத் அலி, அப்துல் ரசீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

நுகர்வோர் சார்பில் நியாய விலை கடைகளில் மாதத்திற்கு 10 லிட்டர் மண்ªண்ணெய் பெற்று வழங்க வேண்டும். உரிய நேரத்தில் கடை திறக்கப்பட வேண்டும்.

இருப்பு பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 
காஸ் ஏஜன்சி வாகனங்களுக்கு தனி அடையாளம், ஊழியர்கள் சீருடை அணிந்து அனைத்து பகுதிக்கும் முறைப்படி சிலிண்டர்களை வினியோகம் செய்ய வேண்டும். 
 கூடலூர் கிளையில் இருந்து உரிய காலத்தில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.  அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும்.
 நகராட்சியில் சுகாதார நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. 
ஆர்டிஓ ஆதிமூலம் கூறியதாவது: 
அரசு ஒதுக்கீட்டிற்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில் நுகர்வோருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
எரிவாயு ஏஜன்சிகள் குறித்த காலத்தில் நுகர்வோருக்கு சிலிண்டர்களை வழங்க வேண்டும்.
கிராமப்புற பகுதிக்கு நேரடியாக எடுத்து சென்று சிலிண்டர் சப்ளை செய்யும் நாள், நேரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு தகவல் தெரிவித்து முன் பதிவு செய்துள்ளவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பிற துறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நீலகிரி கோயில்கள்

நீலகிரி





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
நீலகிரி கோயில்கள் 

பந்தலூர் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும்

பந்தலூர்:"பந்தலூர் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:பந்தலூர் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை தற்போதும் புறநோயாளிகள் மட்டும் பயன்பெறும் வகையில் செயல்படுகிறது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 கி.மீ., தூரமுள்ள கூடலூர் அரசு மருத்துவமனை அல்லது பத்தேரி தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் உள்ளனர். எனினும், போதிய உதவியாளர்கள்,செவிலியர்கள், லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இங்கு ரத்த பரிசோதனை மையம் அமைக்கவும், அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பழுதடைந்துள்ள எக்ஸ்- ரே இயந்திரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்த மருத்துவ மனையை நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 23 நவம்பர், 2012

பந்தலூர் வணிக வளாகத்தில் டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் காந்தி பொது  சேவை மையம்,  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன் சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சியை
 பந்தலூர்அரசு மருத்துவ மனை  சித்தா மருத்துவர் கணேஷன்  துவக்கி  வைத்தார்

 கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி 
சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன்  
காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் நுகர்வோர் மன்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர்
டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள் 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 8 நவம்பர், 2012

சேரம்பாடி பொது மருத்துவ முகாம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


பந்தலூரை அடுத்த சேரம்பாடி சமுதாய கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், கோத்தகிரி ஐலண்ட் அறக்கட்டளை, மேங்கோ ரேஞ்ச் மருத்துவமனை, சாலோம் சாரிடபுள் டிரஸ்ட், பந்தலூர், கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தினர்.
மேங்கோ ரேஞ்ச் மருத்துவமனை மருத்துவர் ரமாபிரபா தலைமையிலான மருத்துவ குழு பங்கேற்று சிகிச்சை அளித்தது. நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
ஐலண்ட் அறக்கட்டளை அறங்காவலர் அல்போன்ஸ்ராஜ், சாலோம் அறக்கட்டளை அறங்காவலர் விஜயன் சாமுவேல், பந்தலூர், கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜய சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர் அஷ்ரப், முகாமினை துவக்கி வைத்தார். உதகை சமுதாய நல ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மகாவிஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்னர். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

வியாழன், 1 நவம்பர், 2012

ccc pandalur meeting 1.11.12.
















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்