அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 17 மே, 2013

மந்தகதியில்-நுகர்வோர்-பாதுகாப்புச்-சட்ட-செயல்பாடுகள்

மார்ச் 14: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டச் செயல்பாடுகளில் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.
உலக அளவில் நுகர்வோர் தின விழா ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அப்போதைய பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ் காந்தியால் 24.12.1986-ல் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் நுகர்வோர் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, பொருள்களின் பயன்பாட்டில் பாதுகாப்புக்கான உரிமை, கருத்துகள், குறைகள் கேட்கப்படும் உரிமை, பொருள்கள், சேவைகள் குறித்த தகவல் பெறும் உரிமை, பாதிக்கப்பட்ட நுகர்வோர் நஷ்டஈடு அல்லது நிவாரணம் பெறும் உரிமை, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமை, நுகர்வோர் கல்வி பெறுவதற்கான உரிமை, அடிப்படைத் தேவைகளை அடைவதற்கான உரிமை என ஏராளமான உரிமைகளை நுகர்வோருக்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கவும், இழப்பீடு அல்லது நிவாரணம் பெற்றுத் தரவும் மாவட்டந்தோறும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆயினும், இந்தக் குறைதீர் மன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள் நுகர்வோருக்கு போதிய அளவுக்கு பயனுள்ளதாக அமையவில்லை என்பதும் நுகர்வோர் அமைப்புகளின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்) தலைவர் பிறை. அறிவழகன் கூறியது:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளை 90 நாள்களில் முடிக்க வேண்டுமென விதி உள்ளது. இங்கு முறையிட வழக்குரைஞர்களின் உதவி தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தற்போது வழக்குரைஞர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதால், வழக்குகளில் தொடர்ந்து வாய்தா வாங்கி, வழக்குகளை இழுத்தடிக்கும் போக்கு கவலையளிக்கிறது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளைத்தான் குறைதீர் மன்றங்களின் தலைவர்களாக அரசு நியமிக்கிறது. இதனால், வழக்கமான நீதிமன்றங்களில் உள்ள நடைமுறைகள் போன்று தான் குறைதீர் மன்றங்களிலும் வழக்கு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பல மாவட்டங்களில் குறைதீர் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கும் உள்ளது என்றார் அவர்.
கிரியேட் அமைப்பின் செயல் இயக்குநர் ஆர். ஜயராமன் கூறியது:
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு எளிமையாகவும், கால தாமதமின்றியும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் நோக்கம். ஆனால், அவை மற்ற நீதிமன்றங்களைப் போன்று வாய்தா மன்றங்களாகவே செயல்படுகின்றன. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
குறிப்பாக, நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் 19.8.2010-ல் (வழக்கு எண்.47/2010) வழங்கப்பட்ட நுகர்வோருக்குச் சாதகமான ஒரு தீர்ப்பில், எதிர்தரப்பினர் மாநில குறைதீர் மன்றத்தில் (மேல்முறையீட்டு மனு எண். 292/2011) மேல்முறையீடு செய்தனர். எதிர்தரப்பினர் ஒரு முறைகூட ஆணையத்தின் முன் ஆஜராகாததால், மனுதாரர் இன்னும் தீர்ப்பு பெற முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.
எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதற்கு நேர்மாறாக, அதன் செயல்பாடுகள் இருப்பதால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்குச் செல்லவே நுகர்வோர் அலுத்துக் கொள்ளும் நிலை தான் உருவாகியுள்ளது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையும் மக்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது என்றார் அவர்.
இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படும் நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்படுவதில் காலதாமதத்தைக் களைந்து, நுகர்வோருக்கு விரைந்து நீதி கிடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும்


மணிக்கணக்கில் கரண்ட் கட் ஆகிறதா கவலை வேண்டாம் இனி பவர் கட் பற்றி புகார் தந்தால் அதற்கான நிவாரணம் உடனடியாக கிடைக்கும். மின்சாரம் தடை படும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு மின்சார வாரியம் நிவாரணம் தரவேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஓழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : உடனடியாக புகார் தரலாம் மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். மின்வாரியம் தரவேண்டிய நிவாரணம் அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடை பிரச்சினைகளை தீர்க்க மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து புகார் அளிக்கப்பட்டால் நுகர்வோருக்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 2000 ரூபாய் வரை நிவாரணம் அளிக்க வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாளுக்கு 25 ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை நிவாரணம் தரவேண்டும். நிவர்த்தி செய்ய காலக்கெடு மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்தி இல்லை என்றால் புகார் பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

visit http://www.dinakaran.com/Dinakaran_search.asp?cx=partner-pub-1112317142011070%3A8620244187&cof=FORID%3A10&ie=UTF-8&q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+&sa=Search&siteurl=www.dinakaran.com%2F&ref=www.google.co.in%2F&ss=8488j26219770j4

About 96 results (0.20 seconds)
2 மார்ச் 2013 ... ஊட்டி,:கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியவை சார்பில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=163230&cat=504
30 ஜனவரி 2013 ... கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148085&cat=504
4 பிப்ரவரி 2013 ... கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு துவக்க ...என கூடலூர் நுகர்வோர் மற்றும் மனிதவள பாதுகாப்பு மையம் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=150190
27 மார்ச் 2013... கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=176370
20 பிப்ரவரி 2013... நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=157564
28 நவம்பர் 2012... பொருட்கள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=123040
29 அக்டோபர் 2012 ... பந்தலூர், : கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று சூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மையத்தின் ஆலோசனைக்கூட்டம் பந்தலூரில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=112330&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம்...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
4 மார்ச் 2013 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பொதுவிநியோக திட்டம் குறித்த ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=163860&cat=504


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 11 மே, 2013

ஜில்லுனு ஒரு டூர் : ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சுட்டெரிக்கும் சூரியனின் உஷ்ணம் ஒரு புறம்... பாடாய்படுத்தும் மின்வெட்டு மறுபுறம்... என, கோடைகால "கொடுமை'யில் இருந்து, சிலநாள் விடுதலை பெற்று இளைப்பாற, கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர், சுற்றுலா பயணிகள்.

வெப்பக்காற்றை சுவாசித்து, வியர்வைக் குளியலுடன், ஊட்டி மலைப்பாதைக்குள் நுழையும் போது, உடலை வருடிச்செல்லும் "குளு,குளு' காலநிலையால், வியர்வை துளிகளுக்கு விடைகொடுத்து, வியந்து போகின்றனர் சுற்றுலா பயணிகள். ஊட்டிக்கு வந்து ஓய்வெடுத்து, மாலை நேரத்தில், "வாக்கிங்' செல்லும் போது, உடலை வருடிச் செல்லும் குளிர்தென்றல் காற்றில் சிலிர்த்து போகும் இவர்கள், முதல் வேளையாக, ஸ்வெட்டர், தொப்பிகளை வாங்கி, மாட்டிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. குளு குளு ஊட்டிக்கு வருவோர், மலை மாவட்டத்தில் பார்த்து, ரசித்து, அனுபவிக்க வேண்டிய இடங்கள் குறித்த விபரம் இதோ:

ஊட்டி தாவரவியல் பூங்கா: கடந்த 1845ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்காவில், 120 குடும்பங்களைச் சேர்ந்த 3000 ரக தாவர இனங்கள் உள்ளன. 144 ரக பரணிச் செடிகள், 350 வகை ரோஜா, 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிச்செடிகள், "டைனோசர்' கால "ஜிங்கோபைலபா' மரம் என, ஏராளமான மர வகைகள் உள்ளன. பூங்கா முகப்பில் உள்ள புல் தரை, லண்டன் "க்யூ' பூங்கா தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உங்களது பாதங்களை அதன் மீது பதித்தாலே, பஞ்சு மீது நடப்பதுபோன்ற உணர்வை பெறுவீர்கள். இங்கு, தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து, ரசித்துச் செல்கின்றனர். குட்டீஸ்கள் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்கின்றனர்.

படகு இல்லம்:கடந்த 1823ல் உருவாக்கப்பட்ட ஊட்டி ஏரி, தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பராமரிப்பிலுள்ளது. 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 318 படகுகள் உள்ளன. சிறுவர், சிறுமியரை கவர, ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. குதிரை சவாரி மேற்கொள்ள ஏதுவாக, தனியார் சார்பில் குதிரைகளும் உள்ளன. ஏரிசாலையை ஒட்டி, வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மான் பூங்காவில் கடமான், வரையாடுகளை கட்டணமின்றி பார்க்க முடியும். ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், இங்கு வராமல் போவதில்லை. ஊட்டிக்கு வந்துவிட்டு, படகுப்பயணமின்றி ஊர் திரும்பினால், சுற்றுலா அனுபவம் முற்றுப்பெறாது என்பதை, பயணித்துப்பார்த்தவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதனால், இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

தொட்டபெட்டா சிகரம்:கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில், "தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்' என்ற பெருமையை பெற்ற தொட்டபெட்டா சிகரம், பார்வையாளர்களுக்கு பரவசம் தரக்கூடிய காட்சி முனை. இங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள "டெலஸ்கோப்' மூலம், ஊட்டி, குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு வியக்கலாம்.

பைக்காரா ஏரி:பைக்காரா அணையில் திறந்து விடப்படும் நீர், இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது, அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சியை அடுத்த ஒரு கி.மீ., தூரத்தில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், படகு சவாரி விடப்படுகிறது. நீரை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில் செல்லும், "ஸ்பீடு போட்' (அதிவிரைவு படகு) இந்த ஏரியில் மட்டுமே உள்ளது, என்பது, சுற்றுலா பயணிகளுக்கு குஷியான தகவல்.

சிம்ஸ் பூங்கா:குன்னூரில், கடந்த 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ்பூங்கா, 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களின் புகலிடமாக இப்பூங்கா உள்ளது. கற்பூர மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை மரங்கள் என, காணக் கிடைக்காத, மிகப்பழமையான மரங்கள் இப்பூங்காவில் உள்ளன. இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்

"டால்பின்ஸ் நோஸ்' காட்சிமுனை:சிம்ஸ்பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ் ராக், அங்கிருந்த 2 கி.மீ., தூரத்தில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனைகளில் இருந்து தெரியும், 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், பார்வையாளர்களுக்கு "திரில்' அனுபவத்தை தருகின்றன.

கோடநாடு காட்சி முனை:கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சிமுனை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வனங்கள், வயல் வெளிகள், பார்வைக்கு விருந்தாக அமையும். அங்குள்ள "பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை பார்க்க முடியும்; தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் "மாயாறு' ஆற்றின் பயணத்தையும் பார்வையில் "படம்' பிடிக்கலாம்.

கோத்தகிரி நேரு பூங்கா:கோத்தகிரியில் உள்ள கேத்ரீன் நீர் வீழ்ச்சி, பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை ஈரமாக்கி, சுற்றுலாபயணிகளின் மனதை இதமாக்குகிறது. கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ளது நேரு பூங்கா. பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் பூங்காவின் சிறப்பு அம்சம்.

பஸ் இருக்கு... ஜாலியா போகலாம்!* ஊட்டியில் இருந்து, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் "சர்கியூட்' பஸ்கள் விடப்பட்டுள்ளன. மரவியல் பூங்காவுக்கு, ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லலாம்.
* ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு, தனியார் வாடகை வாகனங்கள், அரசு பஸ்கள் மூலம் செல்லலாம்.
*கோத்தகிரி - கோடநாடுக்கு செல்ல காலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை அரசு பஸ்களும், கேத்ரீன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, காலை 9.00 மணியிலிருந்து இரவு 7.30 வரை மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
* கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் பகுதிகளில் இருந்து, நடந்து செல்லும் தூரத்தில் தான் நேரு பூங்கா உள்ளது.
* குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்ஸ்பூங்காவுக்கு, மினி, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குன்னூர் டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்'ராக் காட்சி முனைக்கு, பஸ் வசதி குறைவு என்பதால், தனியார் வாகனங்களே சிறந்தது.

த்ரில் சவாரி...:முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறை வாகனம், வளர்ப்பு யானைகள் மூலம், வனப்பகுதிக்குள் சவாரி செய்யலாம். வாகன சவாரி, தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, பிற்பகல் 3:00 மணி முதல் 5:30 மணி வரை நடத்தப்படுகிறது.
யானை சவாரி, தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:30 வரை உண்டு.
* முதுமலை தெப்பக்காடுக்கு, ஊட்டியிலிருந்து மைசூரு, பெங்களூரு குண்டல்பேட்டை பகுதிக்கு இயக்கப்படும்
தமிழக, கர்நாடக பஸ்கள் மூலமும், கூடலூரிலிருந்து அரசு பஸ், தனியார் வாகனங்கள் மூலமும் செல்ல முடியும்.
ஊசிமலை காட்சி முனைஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ள ஊசிமலை காட்சி கோபுரத்தில் இருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.
*அவலாஞ்சி, முக்கூர்த்திஊட்டி அருகே 20 கி.மீ., தூரத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்ல, வனத்துறை அனுமதியுடன், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பவானியம்மன் கோவில், புல்வெளி காடுகள், வரையாடு உட்பட இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். இதை தவிர, முக்கூர்த்தி காட்சி முனை பகுதிக்கு
"டிரக்கிங்' செல்ல வேண்டும்மெனில், வனத்துறையில் முறையான அனுமதி பெற்று செல்லலாம்.

இந்தாண்டு இது புதுசு:ஊட்டி - குன்னூர் சாலையில், வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ முகாம் பகுதியில், 3 ஏக்கர் பரப்பளவில், செயற்கை ஏரியும், ஏரிக் கரையில், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மாவட்டத்தில் முதன் முறையாக, ஏரியின் ஒரு பகுதியில், இசையின் பின்னணியில், மின்னொளியில் "நடனமாடும்' நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது; "அனுமதி இலவசம்' என்பது, கூடுதல் தகவல்.

என்ன வாங்கலாம்எங்கே வாங்கலாம்:சீசனை மையப்படுத்தி ஊட்டியில் அனைத்து விதமான விளையாட்டு பொருட்கள்; உடைகள்; உணவு பொருட்கள் சமவெளிப்பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மலை மாவட்டத்துக்கு உரித்தான, நீலகிரி தைலம், கல்தேரியா, ஜெரோனியா எண்ணெய், தேயிலை, ஹோம் மேட் சாக்லெட், வர்க்கி ஆகியவற்றை வாங்கி செல்லலாம். தரமான பொருட்கள் வாங்க அரசு சார்பில் நடத்தப் படும் கூட்டுறவு அங்காடிகள். பழமையான பேக்கரிகளை விசாரித்து வாங்கினால் பயன் தரும்.

ரோஜா பூங்கா : கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில், ஊட்டி ரோஜா பூங்கா அமைந்துள்ளது. நான்கு ஹெக்டர் பரப்பளவில், 5 அடுக்குகளை கொண்டு, 3,300 வகையைச் சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு ரோஜா செடிகளின் அணிவகுப்பில், வாசம் வீசிக் கொண்டிருக்கிறது இப்பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்று, என்பது கூடுதல் தகவல்.

மரவியல் பூங்கா:ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள பர்ன்ஹில் சாலையில் உள்ள மரவியல் பூங்காவில், 100க்கும் மேற்பட்ட சோலை மரங்கள், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. பூங்காவை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில், மாலை நேரங்களில் பறவைகளின் "கிரீச்' ஒலி காதுக்கு இனிமை சேர்க்கின்றன.

ஜான் சலிவன் நினைவிடம் : கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், நீலகிரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயர் "ஜான் சலிவன்' நினைவிடம் உள்ளது. இங்கு, நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், எல்லை கோடுகள் என முக்கிய தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நுழைவு கட்டண விபரம்:ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய். ஸ்டில் கேமரா கொண்டு செல்ல50 ரூபாய், வீடியோ கேமரா கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நுழைவு கட்டணமாக5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்