அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 23 நவம்பர், 2016

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
 “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இர ண்டுவித தானங்கள்தான் அதிகளவி ல் இருந்து வருகின்றன. வேறு எந்த மாதிரியான உடல் தானங்கள் கொடு க்கப்படுகின்றன என்பதை சொல்ல லாமே?”
“உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்ன ர் தருவது.
“உயிருடன் இருக்கும் போது தானமா க தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குட லின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.”
“இறந் த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல் லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”
 “யார் யார் உடல் உறுப்புக்களை தானமா க தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிக ள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
 “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60 வயது வரை யில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.”
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?”
“ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:–
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோ ர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போ ன்ற நெருங்கிய சொந்தங்கள் உட ல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என் று வைத்துக் கொள்வோம், அவர் களுக்கு தானம் தர முன் வருபவ ர்களின் உடல் உறுப்பு
ஒருவருக்கு பொருந்தாமல், மற் றொரு நோயாளிக்கு பொருந்து மேயானால் அவர்கள் ஒருவருக் கு ஒருவர் சிறு நீரகங்களை பரி மாறிக் கொள்ள லாம்.
“தானம்செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய் யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொ ம்ளாமல், நிராகரித்து விடும். இதற் கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தா ன் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறு வை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”
“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதா ல், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிறதா?”
“பொதுவாக, தானம் செய்கின்ற வர்களுக்கு எந்த பாதிப்பும் வரு வதில்லை. இரண்டு சிறு நீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெ ரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாக வே சரியாகி விடும். தானம் செய் தவர், தன் வேலையை, தானாக வே செய்து கொள்ளலாம், பாதி ப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதி கம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில் லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண் டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்க ளையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக் கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாக வோ அல்லது குறைந்த ரத்த அழு த்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களு க்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அன வரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டு ம்.”
“வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.
ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டா லோ அல்லது நுரையீரல் வேலை செய் யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிர யின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற் று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக்களையும், திசுக்களையும், எடு த்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரண மாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல் லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின் மூச்சு – சுவாசம் நின் ற பின்னர் என்ன மாறுதல் மூ ளையில் ஏற்படுகிறது?”  “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத் திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக் க முடியாது.”
“உடல் உறுப்புக்களை எவ் வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பத ற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படு த்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலு த்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்த லாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத்திரத்தி லோ, ஐஸ் பெட்டியிலோ வை க்கப்படுகின்றது.
அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந் த தண்ணீரையும் ஊற்றி நிரப் பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள் ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ï ரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயிய ல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்பு க்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.”
“முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது?”
 “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற் றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.”
1905ஆம் வருடம் டிசம்பர் மாத ம், டாக்டர் எட்வர்ட்ஸிம் என்ப வர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தா ர்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டுதான், அமெரி க்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகி ச்சை செய்தார்.
1954 ஆம் ஆண்டு பீட்டர் பெ ண்ட் மருத்துவம னையில், ரிச் சர்ட், ரோ னால்ட்
என்ற இரட்டையரில், ரொனா ல்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு “கொ லரா டோ” விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல் லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக் களை மாற்று அறுவை சிகிச் சைக்காக உப யோகித்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப் டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன்முதலாக ஒரு ம னிதனிடமிருந்து இன்னொரு மனித னுக்கு இதய மாற்று அறுவை சிகிச் சை செய்தார். “டென்னிஸ்டார் வெ ல்’ என்பவரின் இதயத்தை `லூயிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார்.
1968ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச் சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டு ம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீ ரலை தானமாக தந்தார்.
2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டி ன் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செ ய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப் புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறுநீரகம்-72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள்-5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாது காத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.
உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இதன்படி சட்டம் வகுத்துள்ள வழிமுறை அல்லாமல் வேறேந்த வழியிலும், எவர் தம் உயிரையும், சுதந்திரத்தையும் பறித்திடல் கூடாது. எது ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதில்லை சட்டத்தினால் உருவாக்கப்பட்ட வழிமுறைப்படி தலையிட அரசுக்கு அதிகரம் வழங்குவதாகவும், கொள்ளலாம். எனினும் நீதிமன்றங்கள் இப்பிரிவின் மூலமாக உயிர் வாழும் உரிமையை நாட்டுகின்றன.
தொடர்புடைய வழக்குகள்[தொகு]
மேனகா காந்தி எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1978, எஸ். சி. 597) வழக்கில் தனி நபர் வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான உரிமைகளை அரசு வழங்கிட வேண்டுமென்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக உடல் நலத்துக்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்குமான உரிமை 21-வது பிரிவின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பரமானந்த கட்டாரா எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1989, எஸ்.இ.2039) வழக்கில் விபத்துக்குள்ளான நோயாளிக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான வழிமுறை நெறிகளைக் கடைபிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தனியார் மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்ததைக் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. செய்முறை நெறிகள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்க உச்ச நீதிமன்றம் மருத்துவ நிலையங்களுக்கு உத்தரவிட்டது.
இதுபோன்ற ஹக்கிம் ஷேக் என்பவர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகிய போது படுக்கைகள் இல்லை என்ற காரணத்துக்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு சிகிச்சைக்காக அவர் பெரும் தொகை செலவழித்தார். மருத்துவமனையின் மனப்பான்மையால் துன்பத்துக்குள்ளான அவருக்கு அரசினால் சிகிச்சை தரவேண்டிய ஆரோக்கியத்தின் முக்கிய தேவையான சிகிச்சை பெறும் உரிமை மறுக்கப்பட்டது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டட்தென்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று ரூ.25,000/- இழப்பீடு வழங்கியது (ஏ.ஐ.ஆர் 1966, எஸ்.இ.1426)
மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994[தொகு]
மனித உறுப்புகளின் தானம் வியாபார ரீதியில் நடப்பதைத் தடுப்பதற்காக மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-ல் அமலாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி நெருங்கிய உறவினர்கள், (பெற்றோர்கள், தம்பிகள், சகோதர சகோதரிகள்) உறுப்பு தானம் செய்யலாம். இச்சட்டத்தின் பிரிவு 9(3)-ன் படி நெருங்கிய உறவினர் அல்லாதவர்களும் நோயாளிடம் கொண்டுள்ள அன்பு, பாசப்பிணைப்பு மற்றும் இதர சிறப்பு தானத்தை அங்கிகரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தானம் செய்பவர் உரிய அங்கிகாரத்தை மாநிலம் அங்கிகரிக்கும் குழுவிடம் பெற வேண்டும். இக்குழு திறமையான செயல்பட்டால் மனித உறுப்பு வியாபாரம் குறித்து காவல்துறை சரியான நடவடுக்கை எடுக்க இயலாது. இது தொடர்பாக அதிகாரம் கொண்ட குழுவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரோ நீதிமன்றத்தில் புகார் செய்தால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித நோயாளிகளின் உரிமைகள்[தொகு]
மாநிலச் சட்டம் 1987 மன நோயாளிகளின் உரிமைகளை கூறுகிறது. இச்சட்டம் 22.05.87-ல் அமலுக்கு வந்ததது. இச்சட்டத்தின் படி மன நோயாளிகளை சிறையில் வைக்க அனுமதி இல்லை. இந்தியாவில் மே 22-ம் தேதி மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1996-ல் பீகார் மாநிலத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் பீகார் மாநில சிறையில் வாடிய பல நோயாளிகளை ராஞ்சி மனநல காப்பகத்திற்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. மனநோயாளிகளின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டால் அந்த மனநோயாளிகளுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மாநில அரசு நஷ்டஈடு தர வேண்டுமென்று அவ்வாறு வழங்கப்பட்ட தொகை தவறு இழைத்த அதிகாரியின் சம்பள்த்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநோயாளிகள் பலர் விலங்கிடப்பட்டு இருந்த சூழ்நிலையில் திடிரென்று நெறுப்பு பற்றிக்கொண்டதால் அனேகர் தீயில் கருகீ உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் உரிய அங்கீகாரத்துடன் இயங்கவேண்டுமெனவும் மனநோயாளிகளுக்கு வைத்தியம் செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
உட‌ல் உறு‌ப்பு தான‌ம்: ‌வி‌திமுறை தள‌ர்வு
வியாழன், 30 செப்டம்பர் 2010 (12:10 IST)
‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச்சாவு ஏ‌ற்படுபவ‌ர்களது உட‌ல் உறு‌ப்புகளை தான‌‌ம் செ‌ய்ய அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள் மு‌ன் வருவது த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. எ‌னினு‌ம், உறு‌ப்புகளை உ‌ரிய நேர‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்த இயலாம‌ல் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ நடவடி‌க்கைக‌ள் ஏராளமாக உ‌ள்ளன.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌த்து‌க்கு உ‌ள்ள ச‌ட்ட நடவடி‌க்கைகளை த‌ள‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏராளமானோ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். இதையடு‌த்து உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ‌‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கைக‌ளி‌ல் நடைமுறைகளை தள‌ர்‌த்‌‌தி, சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.
த‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்துக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ப்போ‌ர் ஏராள‌ம். இ‌தி‌ல் தலை‌யி‌ல் அடிப‌ட்டு அதனா‌ல் மூளை‌ச்சா‌வு ஏ‌ற்ப‌டுபவ‌ர்களு‌ம் ஏராள‌ம். மூளை‌ச் சாவு எ‌ன்பது, உட‌ல் உறு‌ப்புக‌ள் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌‌க்க, அவ‌ர்களது மூளை செய‌லிழ‌ந்து, உ‌யி‌ர் வாழ வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்ய மு‌ன் வரு‌கி‌ன்றன‌ர்.
ஆனா‌ல் உட‌ல் உறு‌ப்புகளை தா‌ன‌ம் செ‌ய்வது என‌்று உற‌வின‌ர்க‌ள் முடிவெடு‌த்து ‌வி‌ட்டா‌ல் ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கென ‌சில மரு‌த்துவ ம‌ற்று‌ம் ச‌ட்ட நடைமுறைக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் முடி‌ப்பத‌ற்கு‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ரது உட‌ல் உறு‌ப்புக‌ள் ‌வீணா‌கிறது. இதனா‌ல் தானமாக ‌கிடை‌க்க வே‌ண்டிய உட‌ல் உறு‌ப்புக‌ள் பய‌ன்படு‌த்த ‌முடியாத ‌நிலையை அடை‌கிறது.
எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கு‌றி‌த்த ச‌ட்ட நடவடி‌க்கைகளை தள‌ர்‌த்‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய உ‌த்தர‌வி‌ல், மூளை சாவு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், மரு‌த்துவரே முத‌ல்க‌ட்ட ப‌ரிசோதனை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். இது உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் (மனை‌வி,குழ‌ந்தைக‌ள், பெ‌ற்றோ‌ர் அ‌‌ல்லது சகோதர, சகோத‌ரிக‌ள்) உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கொடு‌ப்பது தொட‌ர்பான ‌விரு‌ப்ப‌த்தை அ‌றியலா‌ம்.
தான‌ம் கொடு‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல், அடு‌த்த க‌ட்டமாக ‌விசாரணை நட‌த்து‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து, உடனடியாக மரு‌த்துவ‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
அவரது புல‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன்பு, உட‌ல் உறு‌ப்பு தான ச‌ட்ட‌ப்படி மூளை சாவு உறு‌தி செ‌ய்வத‌‌ற்கான 2வது ப‌ரிசோதனை நட‌த்த வே‌ண்டு‌ம். இற‌ப்பு‌க்கானகாரண‌த்‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல், உடனடியாக ‌விசாரணை அ‌திகா‌ரி, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ச‌ெ‌ய்வத‌ற்கான அனும‌தியை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.
‌பிரேத ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் என ‌விசாரணை அ‌திகா‌ரி கரு‌தினா‌ல், அத‌ற்கான அனும‌தி கடித‌ம், உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ன் இய‌ங்கு‌நிலை கு‌றி‌த்து மரு‌த்துவ அ‌திகா‌ரி கொடு‌க்கு‌ம் சா‌ன்றை சம‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் ‌பி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் வழ‌ங்குவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்]]]

திங்கள், 21 நவம்பர், 2016

இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள்

பந்தலூர் பகுதியில் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.  இதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைப்பெறுகின்றது.   பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் போட்டி தேர்வுகளில்  பங்கேற்கும் பெரும்பாலனவர்கள் பயிற்சி இன்றி தேர்வுகளில் வெற்றி பெறுவதில்லை.  போட்டி தேர்வுகளில் பங்கேற்ற முறையான பயிற்சி மற்றும் தொடர்முயற்சியும் மட்டுமே வெற்றியை கொடுக்கும்.  இதனை கருத்தில் கொண்டுகூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கூடலூர் காசிகா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து  பந்தலூர் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விவசாயிகளின் பிள்ளைகள் அரசு பணிகளில் சேர தேவையான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சியினை பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.   பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி மற்றும் கூடலூர் காசிகா பயிற்சி மையங்களில் நடைப்பெறும் பயிற்சிகளில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்  1 மற்றும் விரைவில் அறிவிக்க உள்ள அரசு பணியாளர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. 
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் கூடுதலாக இந்த பயிற்சியினை பெறலாம் கூடலூரில் தினசரி பயிற்சி நடத்தப்படுகின்றது.  பந்தலூரில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை  பயிற்சி நடத்தப்படுகின்றது.  மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாதிரி  போட்டி தேர்வும் நடத்தப்படும். இப்பயிற்சியில் ஏற்கனவே பயிற்சி பெறுபவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறலாம் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பவர்கள், படித்துவிட்டு தனியார் துறைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரும்  இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்   புதிதாக பயிற்சியில் சேர விரும்புபவர்கள்  பயிற்சி மையங்களை  அனுகி பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்  மேலும் விவரங்களுக்கு கூடலூர் பயிற்சி மைய பயிற்றுனர் சுரேஸ்குமார் 9894006772   பந்தலூர் பயிற்சி மையத்திற்கு 9488520800, 9489586999, 9489874075 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

சனி, 19 நவம்பர், 2016

'மூச்சுமுட்டும்' மூச்சிக்குன்னு கிராமம் நோய் வந்தால் தொட்டில் பயணம்



பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா மூச்சிக்குன்னு கிராமத்தில் சாலை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டில் கட்டி, துாக்கி வரவேண்டிய அவல நிலை தொடர்கிறது.

நெல்லியாளம் நகராட்சியின், 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மூச்சிக்குன்னு கிராமம் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கு பகுதியான இங்கு, பழங்குடியினத்தை சேர்ந்த,40 குடும்பங்கள்; பிற சமுதாயத்தை சேர்ந்த, 43 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மூன்று தலைமுறைகளாக இங்கு வாழும் மக்களுக்கு, சாலை, சுகாதாரமான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் முழுமையாக சென்றடையவில்லை. இவர்களுக்காக, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள், விரிசலடைந்து, விழும் அபாயத்தில் உள்ளன.

குறிப்பாக, இந்த கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால், மக்கள் 'மெயின்' ரோட்டில் இருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீடுக்கு வேண்டிய பொருட்கள்; தேயிலை உட்பட விவசாய விளை பொருட்கள் தலை சுமையாக தான் கொண்டுவரப்படுகிறது.

நோயாளிகளுக்கு தொட்டில்

இந்த கிராமத்தின் நோயாளிகள்; கர்ப்பிணி பெண்களை, மருத்துவ மனைக்கு தொட்டில் கட்டி துாக்கி வர வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வருகிறது. இதில், இரவு நேரங்களில் உயிருக்கு போராடும் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எவ்வித பயனும் ஏற்படவில்லை.

'தற்போது அளிக்கப்பட்டு வரும், மாவோயிஸ்ட் சிறப்பு நிதியில் இப்பகுதிக்கு சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என, முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் வலியுறுத்தியதை அடுத்து, நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வனத்துறையால் தடைஆனால், இப்பகுதிக்கு நிதி ஒதுக்கினாலும், வனத்துறையின் தடை நீடிப்பதால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் கூறுகையில்,“கடந்த, 47 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள்; நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தொட்டில் கட்டி துாக்கி வருகிறோம். இந்த நிலை எப்போது மாறும் என தெரியவில்லை,” என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,“மாநில எல்லையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு, போலீசார்; தன்னார்வ தொண்டு நிறுவனத்தார், அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்தபோது, சில பிரச்னைகளால், தடை ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். 

தேவாலா டி.எஸ்.பி., சக்தி வேல் கூறுகையில்,“அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும், மாவோயிஸ்ட் சிறப்பு நிதியில் இருந்து வளர்ச்சி பணிகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். உள்ளாட்சிகள் மூலம் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இந்த கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசப்படும்,” என்றார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1649804
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் காசிகா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் ஆகியன இணைந்து இலவச டிஎன்பிஎஸ்சி மற்றும் வங்கிகளின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சியினை நடத்தி வருகின்றது.  இதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளது.  இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் அஞ்சலக தேர்வு வங்கி தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.  இதுபோலா கூடலூரிலும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.  

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் பந்தலூர் மற்றும் கூடலூர் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்கின்றோம்

செவ்வாய், 15 நவம்பர், 2016

நாணய கண்காட்சி பந்தலூாில் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்