அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 27 மார்ச், 2014

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 12 மார்ச், 2014

கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று






கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நேரு யுவ கேந்திரா சார்பில் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி முடித்தோருக்கு பயிற்சி  சான்றிதழ்கள் வழங்க பட்டது.

நீலகிரி நேரு யுவகேந்திரா மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கொளப்பள்ளி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தையல் மைய பொறுப்பாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
சேரங்கோடு ஊராட்சிமன்ற உறுப்பினர் ரமேஸ்குமார், கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மகளிர் தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள சுயதொழில் அவசியமாகின்றது. இதற்கு எளிதில்  பயன்படுத்திக்கொள்ள தையல் பயிற்சி உதவுகிறது. தையல் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து அரசின் இலவச சீருடைகளை தைத்து கொடுக்கலாம்.
சொந்தமாக தையல் இயந்திரம் வாங்க இயலாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மகளிர்கள் ஒன்று சேர்ந்து ஆயத்த ஆடைகள் தைத்து விற்பனை செய்யலாம். உள்ளூர் மக்களின் ஆடைகளை தைத்து கொடுத்தாலே மிக பெரிய வருமானம் பெற முடியும். எனவே தையல் தொழில் முடித்தவர்கள் சுயமாக முன்னேறி அடுத்தவர்களுக்கு எடுத்து காட்டாக வாழ வேண்டும், என்றார்.
தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நேருயுவகேந்திரா சார்பில் தையல் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள் மற்றும் மகளீர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா வரவேற்றார். முடிவில் தையல் பயிற்சி மைய ஆசிரியை நவமணி நன்றி கூறினார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இந்தி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இந்தி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்க ளும் வழங்க பட்டது.  இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி சார்பில் சுவாமி விவேகானந்தா வாழ்க்கை குறித்து கட்டுரை போட்டி இந்தியில் நடத்த பட்டது இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கட்டுரைகளை இந்தியில் எழுதினர்கள்.  இதில் முதல் பரிசு சாபிரா இரண்டாம் பரிசு வித்யா முன்றாம் பரிசு ஆர் அகிலா ஆகியோர் பெற்றனர்.  இவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்  தலைமை தாங்கினார்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.   

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய உதவி மின் கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது ஹிந்தி இந்தியாவில் முக்கிய மொழியாகும்.  மத்திய அரசு பணிகளுக்கு இந்தி தெரிந்து இருப்பது அவசியம். வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது மொழி தெரியாமல் தவிக்கும் நிலையில் இன்று நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் என்பது குறிப்பிட தக்கது.   எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது விருப்பட்டு கற்றுக் கொள்வதை தடுக்கவும் முடியாது.  தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று கொண்டு மற்ற  மொழிகளும் கற்று கொள்வது நம்மை முன்னேற்றி கொள்வதற்கு  பெரும் உதவியாக அமையும் என்றார்.  
தொடர்ந்து கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், திவ்யா தட்டச்சு பள்ளி ஆசிரியர் கதிரவன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.  முன்னதாக நுகர்வோர் மைய செயலாளர் கணேசன் வரவேற்றார் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி நன்றி கூறினார்.