அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பந்தலூர் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும்

பந்தலூர்:"பந்தலூர் அரசு மருத்துவமனையை நவீன மயமாக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:பந்தலூர் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை தற்போதும் புறநோயாளிகள் மட்டும் பயன்பெறும் வகையில் செயல்படுகிறது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 கி.மீ., தூரமுள்ள கூடலூர் அரசு மருத்துவமனை அல்லது பத்தேரி தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் உள்ளனர். எனினும், போதிய உதவியாளர்கள்,செவிலியர்கள், லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இங்கு ரத்த பரிசோதனை மையம் அமைக்கவும், அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பழுதடைந்துள்ள எக்ஸ்- ரே இயந்திரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்த மருத்துவ மனையை நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக