அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 29 ஜனவரி, 2014

இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி நேரு யுவ கேந்திரா ஆகியன் இணைந்து இளையோர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கூடலூர் சக்சஸ் கல்வி நிலையத்தில் நடத்தின. 

நிகழ்ச்சிக்கு கல்வி நிலைய முதல்வர் ராஜேஷ் தலைமை தங்கினார்.
  
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போதுஇளைய தலைமுறையினர் பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றனர்.  ஆனால் அவர்கள் படித்தபின் வேலைக்கு செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.  அவர்களின் திறமையை பயன் படுத்தி சுய தொழில் செய்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முன் வருவதில்லை.  இதனால் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இன்றி வேலை கிடைக்கும் இடத்திற்கு இடம் பெயர்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே வளர்கிறது கிராம புரங்கள் மேம்பாடு அடைவது இல்லை.   இளைஞர் கள் தங்கள் படிப்பை கிராம வளர்ச்சிக்கு உகந்த வகையில் மாற்றி சுய தொழில் செய்ய முன்வரும் பட்சத்தில் சமூக பொருளாதாரம் மேம்படும் என்றார்.  

நேரு யுவ கேந்திர நிகழ்ச்சி அலுவலர் ஜெய பிரகாஷ் பேசும்போது  இளையோர்கள் மேம்பாடு அடைய வேண்டும் தங்கள் திறமைகளை மேம்படுத்த வழிக்காட்ட வேண்டும் என்ற நோக்கில் நேரு யுவ கேந்திரா துவங்க பட்டுள்ளது.  மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட  இளைஞர் மன்றங்கள் இருந்தாலும் பெரும்பான்மையான மன்றங்கள் துவக்கத்தில் உள்ள வேகம் இன்றி செயல் படாமல் உள்ளது.  கிராம ஒற்றுமைக்கு முக்கிய துவம் அளித்து இளையோர்கள் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல் படும் மன்றங்களுக்கு நேரு யுவ கேந்திரா சார்பில் பரிசுகள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கபடுகிறது என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  பேசும்போது  இளைஞர்கள் தற்போது சமூக சேவையில் ஆர்வம் இன்றி உள்ளனர்  மக்கள் சேவை மற்றும் அரசு சேவைகள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கிடைக்க இளைஞர் முன்வர வேண்டும்.  என்றார்.

நிகழ்ச்சியில் சுவாமி விவேகனந்தர் குறித்து நடத்தபட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசு கௌரி, இரண்டாம் பரிசு விக்டர், மூன்றாம் பரிசு கலாதேவி, ஆறுதல் பரிசு அமுல், ஸ்ரீ காளிதாஸ், ராஜலிங்கம் ஆகியோருக்கு பரிசுகளுடன்  பாராட்டு சான்றிதழ்களும்,  பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், வழங்கப்பட்டது.   நிகழ்ச்சியில் கூடலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் பாலாஜி சசக்ஸ் கல்வி மைய ஆசிரியர்கள் சுமித்ரா, திருச்செல்வி, கௌதமி,  நேரு யுவ கேந்திரா தேசிய சேவை தொண்டர்கள்  ஜீவிதா, ஆண்டம்மாள், இளையோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

முன்னதாக ஆசிரியர் மாணிக்க சாமி வரவேற்றார் முடிவில் ஆசிரியர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கூடலூர் மின்சார சேவை நவீனபடுத்தபடும்


கூடலூர் மின்சார சேவை நவீனபடுத்தபடும் என மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்

கூடலூர் சக்சஸ் கல்வி நிலையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடைபெற்ற நுகர்வோர்  விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்வி நிலைய முதல்வர் ராஜேஷ் தலைமை தங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  கூடலூர் மின்வாரிய உதவி மின் பொறியாளர் பாலாஜி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நுகர்வோர்  விழிப்புணர்வு முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது

நாட்டின் மிக பெரிய நுகர்வோர் சேவை நிறுவனங்களில் மின்சார வாரியமும் ஒன்று இன்றைய நிலையில் மின்சாரம் இன்றி எந்த  பணியும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.   நுகர்வோர் தேவையை நிறைவு செய்ய போதிய உற்பத்தி இல்லத்தினால் மாநிலத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் மின் சேவையில் முன்னணியில் உள்ளது. மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தடை நீக்கபடுகின்றது.   தற்போது மின்சார பகிர்மான கழகம்  மத்திய அரசு நிதி உதவியுடன் மின் விநியோக சேவையை  நவீன படுத்த உள்ளது. கூடலூர் பகுதியில் மின் தடை ஏற்படாமல் இருக்க கூடுதலாக 90 (25/40 கேவி திறன்) கொண்ட உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க பட உள்ளது.  ஏற்கனவே உள்ள 60 டிரான்ஸ்பார்ம்களும்  திறன் மேம்படுத்த படும்.  அனைத்து டிரன்பர்மர்களும் தானாக மின் அழுத்தம்  சமன்படுத்தும் வகையில் நவீன படுத்த பட உள்ளது.  கூடலூர் பகுதியில் அமைக்க பட உள்ள 110 கேவி மின் மாற்றி அமைக்க பட்டால் பொது மக்களுக்கு மின் தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் இனி வரும் 15 வருடத்திற்கு மின் தடை பிரச்சனை இருக்காது

மின் கட்டணம் குறித்த தகவல் மின் நுகர்வோர் பெறும் வகையில் செல் போன்களுக்கு குறுஞ்செய்தி  மூலம் தகவல் தெரிவிக்க செல்போன் எங்களை பதிவு செய்து கொள்ள அறிவுத்தியும் இன்னும் 70 சதவித மக்கள் பதிவு செய்ய வில்லை. விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மின்சார வாரியம் சார்பில் மின் வாரிய குறைகள் தீர்க்க வசதியாக நுகர்வோர் உதவி மையம் அமைக்க பட உள்ளது இதன்மூலம் மின் சம்பந்தமான அனைத்து விதமான புகார்களும் சென்னையில் இருக்கும் உதவி மையத்திற்கு தெரிவிக்கலாம். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல் முதல் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ரீடிங் உள்ளிட்ட அனைத்து வித புகார்களும் ஆன்லைன் முலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.  மின் பகிர்மான கழகம் தற்போது ஊழியர் பற்றாக் குறையிலும் சிறந்த சேவை வழங்கி வருகின்றோம். பொது மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும் என்றார்.

சசக்ஸ் கல்வி மைய ஆசிரியர்கள் சுமித்ரா, திருச்செல்வி, கௌதமி,  மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆசிரியர் மும்மூர்த்தி வரவேற்றார் முடிவில் ஆசிரியர் மாணிக்க சாமி நன்றி கூறினார்.






கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 27 ஜனவரி, 2014

kunthalady blood donation camp photots

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்























































கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்