அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 26 டிசம்பர், 2013

ஊட்டியில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் நுகர்வோர் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

நீலகிரி
ஊட்டியில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும்
ஊட்டி. டிச. 25:
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவரும், மாவட்ட கலெக்டருமான சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல துறைகளில் பலமுறை வலியுறுத்தும் இதுவரை காலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதுமிகவும் வருந்தத்தக்கது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற மின்சாதன பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுலா நகரமான ஊட்டியில் உணவு பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டியில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும். சேரம்பாடி உயர் நிலை பள்ளிக்கான இடம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல நியாய விலை கடைகளில் கடுகு, வெந்தயம் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. பொட்டலங்களில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கடைகளிலும் உள்ள காலாவதி தேதி குறித்த தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற வேண்டும். கூடலூர் & தேவர்சோலை & நெலாக்கோட்டை& பொன்னானி வழியாக காலைவேளையில் பஸ் இயக்க வேண்டும்.
பந்தலூர் பகுதியில் பஸ் இயக்கத்தினை முறைப்படுத்த நேர காப்பாளர் நியமிக்க வேண்டும். ஊட்டி, கூடலூர், பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஸ்கேன் எடுக்கும் நாள் என தனியாக நிர்ணயித்து, அந்நாளில் ஸ்கேன் எடுக்க வேண்டும்.
பந்தலூர் அரசு மருத்துவமனையில் முழுநேர உள்நோயாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். தேவாலா நீர்மட்டம் பகுதி, உப்பட்டி புஞ்சவயல் போன்ற பகுதிகளில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
பொது இடங்களில் கோழிகழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும், என்றார்.
மாவட்ட கலெக்டர் சங்கர் பேசுகையில், “அனைத்து துறைகளும் விரைவில் காலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தி நுகர்வோர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை சான்றுகளுக்கு எவ்வளவு கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்ற தகவலை அலுவலகங்களில் ஒட்டி வைக்க வேண்டும். மக்களை தேடி திட்டத்தின்மூலம் நீலகிரியில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை சான்றுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பு சுவர் கட்ட ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது ஊட்டியில் நம்ம கழிப்பிடம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துவதோடு சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றார். இதில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அத்திக்குன்னா இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் . பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் மருந்தகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், கிரீன் வூட் பவுண்டடேசன், மேங்கோ ரென்ஞ் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமினை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊட்டி அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 
 
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  16 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது, 10 விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், கலாவதி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பந்தலூர் வட்டார பொறுப்பாளர் தனிஸ்லாஸ், அத்திக்குன்னா எஸ்டேட் மருந்தாளுனர் செல்வகுமார் மற்றும் மருந்தக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

 ஊட்டி அரசு கண் மருத்துவர் அகல்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 

 

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.







முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



 மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதணை சிகிச்சைகள் அளித்தனர். 









 16 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியபட்டது, 10 விருப்பத்துடன் கண் புரை அறுவை சிகிச்சைக்கு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  




வெள்ளி, 20 டிசம்பர், 2013

இயற்கையை பாதுகாப்பது அவசியம்

இயற்கையை பாதுகாப்பது அவசியம் கருத்தரங்கில் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-12-02 11:25:28
EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
ஊட்டி, : பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு சார்பில் இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு `இயற்கையை பாதுகாப்பதில் நமக்கும் பங்கு உண்டு‘ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லதா தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்« வார் மன்ற ஒருங்கிணை ப்பாளர் முரு கன் முன்னி லை வகித்தார்.
இயற்கை பாதுகாப்பு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், ‘‘இயற்கை எழில் கொஞ்சும் மலை பகுதியில் வாழும் மாவட்ட மக்கள் இயற்கையின் கொடைக ளை உணராமல் இயற்¬ கயை சிதைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை, உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்த்தை பெற்ற இப்பகுதி அதை தக்க வைக்க வேண்டும் எனில் இயற்கையை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகும்.
நகர பகுதிகளில் தொழி ற்சாலைகளில் உருவாகும் கழிவுகளை பூமிக்குள் திணிக்கின்றனர். நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சு பொருட்களும் நிலத் தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
நிலத்தில் விளையும் காய்கறிகளில் நச்சு தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்து விடுகிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாக் க மனித குலம் முன்னெடுத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இப்போது தவற விட்டால் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளை குறைத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அன்றாடம் நிகழும் சிறு, சிறு செயல்கள் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுஇடங்களில் குப்பைகளை சேர்க்காமல் தொட்டியில் குப்பைகளை போடுதல், தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுபடுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவுநீர் தேங்குமிடங்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிளாஸ் டிக் பயன்படுத்தாமை, தேவையற்ற பொருட்களை சேகரிப்ப தை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இயற்கையை பாதுகாப்பது அவசியம்

இயற்கையை பாதுகாப்பது அவசியம் கருத்தரங்கில் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-12-02 11:25:28
EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
ஊட்டி, : பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு சார்பில் இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு `இயற்கையை பாதுகாப்பதில் நமக்கும் பங்கு உண்டு‘ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லதா தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்« வார் மன்ற ஒருங்கிணை ப்பாளர் முரு கன் முன்னி லை வகித்தார்.
இயற்கை பாதுகாப்பு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், ‘‘இயற்கை எழில் கொஞ்சும் மலை பகுதியில் வாழும் மாவட்ட மக்கள் இயற்கையின் கொடைக ளை உணராமல் இயற்¬ கயை சிதைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை, உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்த்தை பெற்ற இப்பகுதி அதை தக்க வைக்க வேண்டும் எனில் இயற்கையை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகும்.
நகர பகுதிகளில் தொழி ற்சாலைகளில் உருவாகும் கழிவுகளை பூமிக்குள் திணிக்கின்றனர். நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சு பொருட்களும் நிலத் தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
நிலத்தில் விளையும் காய்கறிகளில் நச்சு தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்து விடுகிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாக் க மனித குலம் முன்னெடுத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இப்போது தவற விட்டால் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளை குறைத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அன்றாடம் நிகழும் சிறு, சிறு செயல்கள் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுஇடங்களில் குப்பைகளை சேர்க்காமல் தொட்டியில் குப்பைகளை போடுதல், தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுபடுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவுநீர் தேங்குமிடங்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிளாஸ் டிக் பயன்படுத்தாமை, தேவையற்ற பொருட்களை சேகரிப்ப தை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பதிவு செய்த நேரம்:2013-10-25 10:58:34
EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
ஊட்டி, : கோத்தகிரி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஊட்டச் சத்துணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ‘நமது முன்னோர் விவசாயத்தின் மூலம் கிடைத்த உணவுகளை உண்டு வந்தனர். தற்போது நவீன உணவு வகைகளை பழக்கப்படுத்தி கொண்டோம். இந்த உணவுகள் மனிதர்களாகிய நமக்கு பாதகமாகி வருகிறது. டின் புட்ஸ், பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என எல்லாம் உப்பு மற்றும் அமில தன்மை உடைய உணவுகளாக மாறி வருகின்றன.
 இவற்றால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் 25 வயது முதலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வை குறைபாடு, சத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளான ராகி, கம்பு, தினை, கோதுமை, சோயா, நெல் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்த்து பருப்பு, பயறு, கடலை வகைகளை அவித்து உண்ணலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்’ என்றார்.
மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘விளம்பரங்களை பார்த்து நமது உணவுகளை தேர்வு செய்கின்றோம். இவை உடலுக்கு எந்த பயனையும் தருவதில்லை. இதில் நிறம் மற்றும் சுவைகளாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்று நோயை உண்
டாக்குகின்றன’ என்றார். கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ‘சிப்ஸ், கார வகைகள், ஐஸ்கீரிம் போன்ற உணவுகளை தவிர்த்து, தரமான உணவுகளை வீடுகளில் தயாரித்து உண்ண பழகி கொள்ள வேண்டும்’ என்றார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட கூட்டம் தொடர்பான கருத்துருக்கள்

பொருள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட கூட்டம்
           தொடர்பான கருத்துருக்கள் 
வணக்கம்
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்.  மக்களுக்கு இன்னும் இச்சட்டம் முலம் பயன் கிடைக்கும் வகையில் செயல் படுத்த கீழ் கண்ட கோரிக்கை களையும் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.
  1. மாவட்ட வாரியாக உணவு கலப்படம் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை கூடங்கள் அமைக்க வேண்டும்.  இதனால் பொது மக்கள் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்கள் எளிதில் கலப்படம் குறித்து கண்டறிய முடியும்.  வழக்கு தொடர விரைவான நடவடிக்கை எடுக்க முடியும்.
  1. காலியாக உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
  1. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அலுவலக தொடர்பு எண்கள் மக்கள் பார்க்கும் வகையில் ரேசன் கடைகள், பேருந்து நிலையங்கள், வட்ட அலுவலகங்கள்,  மருத்துவ மனைகள் உள்ளிட்ட இடங்களில் எழுதி வைக்க வேண்டும்.
  1. வட்டம் அல்லது நகரம் அல்லது கடைகள் எண்ணிக்கை அடிப்படையில் முகாம் நடத்தி வியாபாரிகள் பதிவு செய்ய உரிமம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்னும் பல வியாபாரிகளுக்கு இதற்க்கான தகவல்கள் தெரிய வில்லை.  பலர் மிக அதிக தொலைவிற்கு சென்று பதிவு செய்ய தயங்குகின்றனர்.  முகாம் முலம் அனைத்து வியாபாரிகளும் உரிமம் பெற செய்வதனால் நுகர்வோருக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.
  1. பிஸ்கட், குளிர்பானங்கள், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் கலாவதி தேதியை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விரும்பிய படி நிர்ணயிக்கின்றனர்.  இதற்கான  கால அளவை நிர்ணயித்து அனைத்து உற்பத்தியாளர்களும் ஒரே மாதிரியான கலாவதி காலத்தினை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  1. இந்த சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பல அலுவலர்கள் சட்டம் குறித்து விளக்கம் அளிக்க முன் வருவதில்லை.  இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.


பொன் கணேசன்                                                                              சு.சிவசுப்பிரமணியம்
     செயலாளர்                                                                                         தலைவர்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தரமான மின் சாதனங்கள் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியும்

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் தரமான சாதனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

பதிவு செய்த நேரம்:2013-12-14 10:27:47
EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
ஊட்டி, : தரமான மின் சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியும் என மின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், கூடலூர் மின்சார வாரியம், பள்ளி குடிமக்கள் மன்றம் ஆகியவை சார்பில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்து, உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்சார வாரிய உதவி பொறியாளர் செம்புலிங்கம் பேசுகையில், தற்போது அத்யாவசிய தேவையாக உள்ள மின்சாரம் காற்று, நீர், அனல், அணு மற்றும் சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாம் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த பல வழிகள் உண்டு. குண்டு பல்புகள் அதிக மின் செலவை தரும். அதற்கு பதிலாக சி.எப்.எல்., பல்புகள், எல்.ஈ.டி., பல்புகள் பயன்படுத்துவதால் 70 சதவீத மின் செலவை குறைக்க முடியும். மின் விசிறி, பல்புகள் மற்றும் நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை அடிக்கடி சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் தேவையற்ற மின் செலவினை தவிர்க்கலாம். மின்சாரத்தை பயன்படுத்திய பின் சுவிட்ச்களை ஆப் செய்வது, தரமான மின் சாதனங்கள் வாங்கி பயன்படுத்துவது போன்றவை மின் சிக்கன வழிகள் ஆகும். மின்சாரத்தினை சிக்கனப்படுத்துவதன் மூலம் மின் செலவினை குறைக்க முடியும் என்றார்.
மின்சார வாரிய உதவி பொறியாளர் அப்துல் மஜீத் பேசுகையில், ஆசியாவிலேயே நீர் மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கும் இடம் நீலகிரி ஆகும். இங்கு மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் நீர் பல இடங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தலோ சுவிட்ச் உடைந்து இருந்தாலோ மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார தூண்கள் மற்றும் ஸ்டே கம்பிககளில் ஆடு, மாடுகளை கட்டுவது, குழந்தைகளை விளையாட விடுவது, துணி காயவைப்பது போன்றவை மின் விபத்திற்கு வழிவகுக்கும் இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.
உதவி பொறியாளர் பாலாஜி பேசுகையில், மின்சார கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலகங்கள், வங்கிகள், இணையதள மையங்கள் மூலமாகவும் மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர்கள் தங்கள் செல்போன் எண்களை மின்வாரியத்தில் பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். முன்வைப்பு தொகையாகவும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றார்.
தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட், ஆசிரியர் காந்திமதி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் லிசீனா நன்றி கூறினார்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வியாழன், 19 டிசம்பர், 2013

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவரும் மாவட்ட ஆட்சியருமான சங்கர் தலைமை தங்கினார்.  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்பு அலுவலர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்
பேசும்போது   பல துறைகளில் பல முறை வலியுறுத்தியும் இது வரை காலாண்டு நுகர்வோர்  கூட்டம் நடத்த படவில்லை இது மிகவும் வருந்ததக்கது  இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.    வருவாய் துறை சான்றுகள் பெற விண்ணப்பங்கள் ஜெராக்ஸ் கடைகளில் வாங்க சொல்வதோடு விண்ணப்பத்தோடு பரிந்துரை கடிதங்கள் உள்ளிட்டவை  இணைக்க வேண்டும் எனவும் கட்டாயமாக கோர்ட் பீ ஸ்டாம்பு ஓட்ட வேண்டும் என கூறபடுகிறது. இது குறித்து விளக்கம் வேண்டும்.   தரமற்ற மின் சாதன  பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.   உதகை உணவு விலை ஏற்றத்தினை கட்டுபடுத்த வேண்டும். மக்கள் பயன் பெரும் விதமாக அம்மா உணவகம் உதகையில் அமைக்க வேண்டும்.
சேரம்பாடி உயர் நிலை பள்ளிக்கான இடம் குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் தடுப்பு சுவர் இல்லாததினால் பாதிப்பு  ஏற்படுகின்றது விரைவில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல நியாய விலை கடைகளில் இன்னும் பழைய முழுமையான தகவல் இல்லாத கடுகு மற்றும் வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய படுகின்றது  பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  அனைத்து கடைகளிலும் காலவதியான தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கூடலூர் தேவர்சோலை நெலாக்கோட்டை பொன்னானி வழியாக காலையில் ஒரு பேருந்து இயக்க வேண்டும்.  உப்பட்டி கூடலூர் ஈரோடு வழித் தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும். பந்தலூர் பகுதியில் பேருந்து இயக்கத்தினை முறை படுத்த நேர காப்பாளர் வேண்டும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறக்க வேண்டும்.

பந்தலூர் கூடலூர் ஊட்டி  அரசு மருத்துவ மனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது  ஸ்கேன் எடுக்கும் நாளை  தனியாக நிர்ணயித்து அந்நாளில்  முறையாக ஸ்கேன் எடுக்க வேண்டும் நோயாளிகள் அலைகழிக்க படுவது தவிர்க்க வேண்டும்.  பந்தலூர் அரசு மருத்துவ மனையில் முழு நேர உள்நோயாளிகள் அனுமதிக்க வேண்டும். அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.  
எலியாஸ் கடை அருகே, தேவாலா நீர்மட்டம் பகுதி மற்றும் உப்பட்டி புஞ்சவயல் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகள் தூர் நாற்றம் வீசுகின்றது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முக்கிய இடங்களில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.   பேருந்து நிலையங்கள் அருகில் பயணிகள் நலன் கருதி சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.  ஏ டி சி பகுதியில் உள்ள கழிவுகள் அப்புறபடுத்த வேண்டும் தொடர்ந்து சுத்தபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா  தேவர் சோலை பகுதியில் புதிய டவர் அமைக்க வேண்டும். பல பகுதிகளில்  BSNL டவர் சிக்னல் கிடைப்பதில் சிரம்மம் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட 45 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியரும் அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவருமான பி சங்கர் பேசும்போது   நுகர்வோர் நலன் கருதி செயல் படாத துறைகள் நிறுவனங்கள் நீண்ட நாட்கள் செயல் பட முடியாது ஒரு கட்டத்தில் நுகர்வோர்களை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்படும்.  அனைத்து துறைகளும் விரைவில் கலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தி நுகர்வோர் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் வருவாய் துறை சான்றுகளுக்கு எவ்வளவு கோர்ட் பீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்ற தகவலை அலுவலகங்களில் ஒட்டி வைக்க வேண்டும்.  பொது மக்களை அலைய வைக்க கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு அம்மா திட்டத்தினை நடத்தி வருகின்றது இம் முகாம்கள் மூலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு   வருவாய் துறை சான்றுகள் உடனுகுடன் வழங்க பட்டுள்ளது.  தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க படும்.  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளிக்கு தடுப்பு சுவர் கட்ட ஆய்வு மேற்கொள்ள பட்டு நடவடிக்கை எடுக்க படும்.  கூடுதல் பேருந்துகள் இயக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவும் விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகள் குறித்தும் தகவல்கள் போக்குவரத்து கழகம் சமர்பிக்க வேண்டும்.  சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் முக்கியதுவம் அளிக்க வேண்டும் தற்போது உதகையில் நம்ம கழிப்பிடம் திட்டம் செயல் படுத்த படள்ளது.  பொது மக்கள் பயன் படுத்துவதோடு சுத்தமாக வைக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் ஸ்கேன் எடுக்கும் நாளை குறித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் பல ஏமாற்றங்கள் தடுக்க நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏறபடுத்த வேண்டும். என்றார்.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட் ராமன், உதகை நகராட்சி ஆணையாளர் சிவகுமார்,   போக்குவரத்து கழக மேலாளர் கணேசன் மற்றும் வட்ட வழங்கள் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

உதகமண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை


உதகமண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை    



கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவு செய்து தர அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

  1. பேருந்துகளில் பாட்டு அதிக சப்தத்துடன் ஒலிக்கபடுவதால் பயணிகள் பாதிப்பு  ஓட்டுனர் நடத்துனர்களிடம் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

  1. கூடலூர் தேவர்சோலை நெலாக்கோட்டை பொன்னானி வழியாக காலையில் ஒரு பேருந்து இயக்க வேண்டும். அல்லது கூடலூர் பொன்னானி வழித்தடத்தில் தற்போது 3 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்க படுகின்றது இதற்கிடையில் இயக்கும் விதமாக ஒரு பேருந்து இயக்க பட வேண்டும்.  இப்பேருந்து காலை 6.00 மணிக்கு பொன்னானியில் புறப்படும் வகையில் உப்பட்டி பந்தலூர் வழியாக இயக்க பட வேண்டும் பொன்னானியில் தங்கும் அறை  வசதி ஏற்படுத்த பட்டுள்ளது.

  1. உப்பட்டி கூடலூர் ஈரோடு வழித்தடத்தில் மாலை 4 மணி அளவில் உப்பட்டியில் இருந்து புறப்படும் வகையில் ஒரு புதிய பேருந்து இயக்க வேண்டும்.

  1. பந்தலூர் பகுதியில் பேருந்து இயக்கத்தினை முறை படுத்த நேர காப்பாளர் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று நேர காப்பாளர் நியமித்தமைக்கு நன்றி. அதுபோல பந்தலூரில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறக்க வேண்டும்.

  1. பல பழைய பேருந்துகள் இயக்க படுகின்றன இவற்றை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும்

  1. குன்னூர் கைகட்டி பகுதிக்கு மாலை நேரத்தில் உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்க படுவதில்லை. பொது மக்கள் பதிப்பு கிளை மேலாளர்  கண்காணிக்க வேண்டும் .

  1. விரைவு பேருந்து சாதாரண பேருந்து தனி அடையாளம் தெரியாமல் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.  அடையாள படுத்த வேண்டும்.

  1. கிராம புறங்களுக்கு விரைவு பேருந்து இயக்க படுவது கிராம மக்களுக்கு பதிப்பை ஏற்படுத்துகிறது.  இவற்றை சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்.

  1. ஊட்டி - கூடலூர் ஆகிய இடங்களில்  போக்குவரத்து கழக கழிப்பிடங்களில் அதிக கட்டணம் ஆனால் சுத்தம் இல்லை பராமரிப்பு இல்லை நடவடிக்கை தேவை

  1. போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பும் புகார்களுக்கு பதில் கிடைப்பதில்லை விரைவான நடவடிக்கை தேவை

  1. கூடலூர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்க படும் பல பேருந்துகள் முறையான நேரத்திற்கு இயக்க படுவதில்லை.  சேரம்பாடி வழித்தடத்தில் அடிக்கடி இரு பேருந்துகள் அடுத்தடுத்து செல்லும் நிலை உள்ளது.  அது போல மாலை நேரத்தில் உப்பட்டி பாட்டவயல் பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கம் நிலை உள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. கூடலூர் -  கீழ் நாடுகானி  - கூடலூர் - தொரப்பள்ளி என இயக்கபட்ட பேருந்து காலையில் கீழ் நாடுகானி  8.15 மணிக்கு எடுக்க பட்டது இதனால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என பலரும் பயன் பெற்றனர்.  இப்பேருந்து தற்போது நிறுத்த பட்டுள்ளது.  மீண்டும் இப்பேருந்து இயக்க பட வேண்டும்.

  1. ஒரு பேருந்து பழுதானால் அதற்க்கு மாற்றுப் பேருந்து மூலம் இயக்க படவேண்டும்.  மாற்று பேருந்து  இயக்க படாமல் பழுதான பேருந்து சரி செய்தபின் இயக்க படுவதால்  தற்போது பல நடைகள் தாமதமாக இயக்க படுகிறது இதனால் மக்கள் பதிப்பு அடைக்கின்றனர்   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. உதகை கீழ்குந்தா வழித்தடத்தில் வேலை நாட்களில் இயக்க படும் பேருந்து ஒரே ஓட்டுனர் மூலம் இயக்கப் படுவதால் ஓட்டுனர் விடுப்பு எடுக்கும் பொது இப்பேருந்து இயக்க படுவதில்லை இதனால் இப்பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பெருமளவு பாதிக்கின்றனர்.  மீண்டும் இப்பேருந்து கால அட்டவணை படி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. ஊட்டி கூடலூர் வழித்தடத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பேருந்து இயக்கம் இல்லாததினால் பொது மக்கள் பாதிப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு

சு சிவசுப்பிரமணியம் தலைவர் பொன். கணேஷன் செயலாளர் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

TAMIL NADU STATE TRANSPORT CORPORATION

  
  
About Us
Information
Suggestions
Types of Services
Rules & Regulations
Special Services
Terms & Conditions
Compatible Browsers
Browser Settings
 Information
  HEAD OFFICE
 
E-MAIL  commercial@tnstc.in
Telephone1800 - 419 - 4287
 
KOYAMBEDU BUS STAND
 
1.KOYAMBEDU BUS STAND044 - 24794705
2.SG.ASSISTANT MANAGER (OPERATION)044 - 24794705
 S.E.T.C. Tamilnadu Ltd., Outstations
 
S.No.DesignationDepot
Phone No.
Bus Stand Phone No.Address
1B.M - Puduchery0413-22034640413-2203464Rajiv Ghandhi Central Bus Stand, Maraimalai Adigal Salai Puduchery-1.
2B.M - Nagapatinam04365-24782504365-242455S.E.T.C. Bus Stand, Velippalayam,
Nagapattinam - 611 001.
3B.M - Kumbakonam0435-24213130435-2431251New Bus Stand,
Kumbakonam- 612 001.
4B.M - Tanjore04362-230950--S.E.T.C. Bus Stand,
Thanjavur - 613 001
5B.M - Trichy-10431-23337370431-2460992S.E.T.C. Bus Stand,
Trichy - 620 001.
6B.M - Salem0427-24129600427-2446041S.E.T.C. New Bus Stand, Achavan Lake, Salem - 636 004.
7B.M - Coimbatore0422-24329390422-2524969S.E.T.C. New Bus Stand, Gandhipuram,
Coimbatore - 641 044.
8B.M - Madurai0452-25668200452-2585838Periyar Bus Stand,
Madurai - 625003.
9B.M - Tuticorin0461-23461400461-2345340S.E.T.C. New Bus Stand, Tuticorin - 628 002.
10B.M - Tirunelveli0462-25020350462-2554468Corporation New Bus Stand, Vendhankulam,
Tirunelveli - 627 607.
11B.M - Shencottah04633-235599--Municipal Bus Stand,
Shencottah - 627 809.
12B.M - Nagercoil04652-233431--S.E.T.C. Bus Stand, Meenashipuram,
Nagercoil - 629 001.
13B.M - Kanyakumari04652-24628504652-246019S.E.T.C. Bus Stand, Kanyakumari - 629 175.
14B.M - Marthandam04651-270097--Municipal Bus Stand, Marthandam - 629 165.
15B.M - Trivandrum0471-23430870471-2327756S.E.T.C. Tn.Ltd.,Thambanur, Tiruvanandapuram – 695 502.
16D.M - Puduchery0413-2202014----
17D.M - Trichy0431-2460680----
18D.M - Tirunelveli0462-2501735----
19D.M- Madurai0452-2566540----
20D.M.(W) Cws-Trichy0431-2332994----
21D.M - Nagercoil04652-233431----
22Sg.Ae - Vilupuram-Tindivanam04146-22284204146-222842--
23Abm - Vellore0416-2220552--
24A.M.- Tirupathi--0877-2225324Srinivasa Bus Stand, Apsrtc Bus Station, Thirupathi-517 501.
25B.M - Bangalore--080-22113454BMTC, Shanthi Nagar Bus Stand, Bangalore - 560 009.
26Tindivanam--04147-222134--
27Dindigul--0451-2427321--
28Ernakulam--0484-2372616--
29Myladuthurai--04364-222455--
30Palani--04545-242208--
31Pollachi--04259-223955--
32Rameswaram--04573-221263--
33Tiruchendur--04639-242211--
34Velankanni--04365-263467--
Chennai Depots
35Chennai Depot 1--044-26214463--
36Chennai Depot 2--044-25366351--
37Chennai Depot 3--044-24797020--
Note:- BM- Branch Manager, AM- Assistant Manager
 For Bank Queries: pgsupport@billdesk.com
  
Powered By
 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்