அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இயற்கையை பாதுகாப்பது அவசியம்

இயற்கையை பாதுகாப்பது அவசியம் கருத்தரங்கில் வலியுறுத்தல்

பதிவு செய்த நேரம்:2013-12-02 11:25:28
EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
ஊட்டி, : பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார குழு சார்பில் இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு `இயற்கையை பாதுகாப்பதில் நமக்கும் பங்கு உண்டு‘ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் லதா தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்« வார் மன்ற ஒருங்கிணை ப்பாளர் முரு கன் முன்னி லை வகித்தார்.
இயற்கை பாதுகாப்பு குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், ‘‘இயற்கை எழில் கொஞ்சும் மலை பகுதியில் வாழும் மாவட்ட மக்கள் இயற்கையின் கொடைக ளை உணராமல் இயற்¬ கயை சிதைப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை, உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்த்தை பெற்ற இப்பகுதி அதை தக்க வைக்க வேண்டும் எனில் இயற்கையை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகும்.
நகர பகுதிகளில் தொழி ற்சாலைகளில் உருவாகும் கழிவுகளை பூமிக்குள் திணிக்கின்றனர். நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சு பொருட்களும் நிலத் தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.
நிலத்தில் விளையும் காய்கறிகளில் நச்சு தன்மை படர்ந்து மனிதர்களின் உடலிலும் கலந்து விடுகிறது. சுற்றுப்புற சூழலை பாதுகாக் க மனித குலம் முன்னெடுத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இப்போது தவற விட்டால் ஒவ்வொரு தருணங்களிலும் பூமியின் ஆயுளை குறைத்து கொண்டு இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அன்றாடம் நிகழும் சிறு, சிறு செயல்கள் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுஇடங்களில் குப்பைகளை சேர்க்காமல் தொட்டியில் குப்பைகளை போடுதல், தேவையற்றவற்றை எரித்து காற்றை மாசுபடுத்துதல், தண்ணீரை தேவையற்ற விதத்தில் தேங்க விடுதல், கழிவுநீர் தேங்குமிடங்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிளாஸ் டிக் பயன்படுத்தாமை, தேவையற்ற பொருட்களை சேகரிப்ப தை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக