கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
பந்தலூர் : கூடலூர் கல்வி மாவட்டத்தில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரிய பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர் : கூடலூர் கல்வி மாவட்டத்தில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரிய பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர், கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகள் கூடலூர் கல்வி மாவட்டதிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் கட்டுப்பாட்டில் 63 ஆரம்ப பள்ளிகள், 34 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. மேலும் டான்டீ பகுதியில் 6 ஆரம்ப பள்ளிகளும் செயல்படுகிறது.மொத்தம் 97 பள்ளிகள் செயல்படும் நிலையில், இதில் 80 இடைநிலை ஆசிரிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 20 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
மாவட்டத்தில் 25 பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் 40 ஆசிரியர்கள் தேவை உள்ளது இதிலும் பத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பள்ளியாக செயல்படுகிறது மாணவர்கள் தாங்கும் விடுதிகளில் காப்பாளர்களும் இப்பள்ளி ஆசிரியர்களே பெறுப்பு வழங்க படுகின்றது இதனால் அதிக பணிசுமையுடன் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழல் இதனால் பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகின்றது
பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,பி.டி.ஏ. மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களிடம் பணம் வசூலித்து மாத சம்பளம் வழங்குவதால் தனியார் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்களாக உள்ள பெற்றோர்களுக்கு செலவினம் ஏற்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் கல்வி முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மையத் தலைவர் சிவசுப்ரமணியம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக