அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 29 ஜூலை, 2016

வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள மாணவா்களுக்கு அறிவுரை

பந்தலூா்

பந்தலூா் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும்
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
 அப்துல்கலாம் நினைவு  தின  சிறப்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு   பரிசளிப்பும்

கடந்த 2015 - 16 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு  பொது தோ்வில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு
வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணன் தலைமை தாங்கினார்.
கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகா் காளிமுத்து,
மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகா் செந்தாமரை,
பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் ஷமிர் உசேன்,
பள்ளி குடிமக்கள் நுகா்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி,
பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன் பேசும்போது

அப்துல் கலாம் அவா்களின் கனவு போல மாணவா்கள் உயா்ந்த லட்சியத்தினை உறுதிப்படுத்தி, அந்த லட்சியத்தை நோக்கி  சரியான வழியில் நமது அடிகளை எடுத்து வைக்கவேண்டும்.

 மாணவா்கள் விடா முயற்சியுடன் குறிக்கோளை நோக்கி போராடினால் வெற்றி பெற முடியும்.  
கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டால் நாம் சாதிக்க முடியும்,
தோல்விகளளை கண்டு துவண்டு விட கூடாது என்றார்.

கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் பேசும் போது
மாணவா்கள் பள்ளி படிப்போடு மட்டும் இல்லாமல் பொது அறிவை மேம்படுத்தும் விதமாக தினசரி செய்தி தாள்கள் மற்றும்
புத்தகங்களை வாசிப்பதை பழக்கமாக கொண்டால் இன்றைய போட்டி நிறைந்த நிலையில் 
பொது தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்றார்.

தொடா்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பில்
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும்
கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சாதிக், சலிம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளி வரலாற்று ஆசிரியா் சிவகிருஷ்ணன் வரவேற்றார்

முடிவில் பள்ளி உதவித்தலைமை ஆசிரியா் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக