அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 5 மே, 2012











பந்தலூர்
பந்தலூர் நெல்லியாளம்  நகராட்சியில் வேலு காமாட்சி என்பவர்  துப்புரவு ஆய்வாளராக பணிபுரிகின்றார்  இவர்  துப்புரவு ஆய்வாளர்  பணிக்கு வருவதில்லை.
இதனால் நெல்லியளம் நகராட்சியில் வகிக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்,  பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளரை காணவில்லை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ 1 ரூபாய் ஒன்று மட்டும் சன்மானம் வழங்கப்படும்  என துண்டு பிரசுரத்தை நகராட்சி பகுதியில் ஒட்டி உள்ளன
இவர் பணிக்கு முறைப்படி வரத்தினால் நெல்லியாளம் நகராட்சியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு
நகராட்சியில் பிறப்பு இறப்பு பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது
இதனால் அரசு வழங்கும் பெண் குழந்தை உதவி தொகை மற்றும் பிரசவ உதவி தொகை  இறந்தவர்களின் வாரிசு சான்று மற்றும் இறப்பு உதவித்தொகை மற்றும் இதர உதவிகள் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நகராட்சி பகுதிகளை உள்ள குடிநீர் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள படாமல் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை உள்ளது 
கோழி கழிவுகள் பந்தலூர் தேவாலா சாலையோரம் உப்பட்டி நெல்லியாளம் சாலையோரம் கொளப்பள்ளி சாலையோரம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளை முறையற்று கொட்டப்படுகிறது இதனை உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை இதனால் பொது மக்கள் மற்றுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  
துப்புரவு ஆய்வாளர் இல்லாததினால் நகர பகுதிகளில் கொசு தடுப்பு புகை அடித்தல் பணி நடை பெறுவதில்லை நகர கால்வாய்கள்  தூர் வரப்படாமல் உள்ளது
நகராட்சியில் உள்ள கறிக்கடைகள், மீன் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை  உரிய ஆய்வுகள் மேற்கொள்ள படாமல் உணவில் கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலை உள்ளது.
நகராட்சியில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் துப்புரவு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இவர் எத்தனை நாள் பணிக்கு வந்துள்ளார் என்னென்ன பணிகள் மேற்கொண்டுள்ளார் என தகவல் உரிமை சட்டத்தில் கேட்டும் இதுவரை எந்தவித பதிலும் நகராட்சியில் இருந்து வரவில்லை
இது போன்ற பல்வேறு பதிப்புகள்  ஏற்படுவதினால் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணி உரிய முறைப்படி வரவேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படத்தினால் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்  பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து நகராட்சி துப்புரவு ஆய்வாளரை காணவில்லை என துண்டு பிரசுரத்தை நகராட்சி பகுதியில் ஒட்டி உள்ளன பந்தலூர் பகுதியில் இத்துண்டு பிரசுரததை  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் நிர்வாகி தனிஸ்லாஸ் பந்தலூர் கூடலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விஜய சிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஒட்டினர்

--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center


Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250  9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.comகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக