அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்


ஊட்டி, செப். 5:
ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள எச்.பி.எப் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டது.
தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் சார்பில் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள எச்.பி.எப் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நேற்று நடந்தது.
நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார். 
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராமன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் பிளாரன்ஸ் முன்னிலை வகித்தார். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், மாவட்ட அரசு நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். 
விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசினார். 
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
முடிவில் ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக