அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
siva லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
siva லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2011

15 Aug சுதந்திர தினம்

15 Aug 

சுதந்திர தினம்



காற்றில் ஆடும் தேசியகொடிகள்
காதைக் கிழிக்கும் மேடைப் பேச்சுகள்
அரசியல் சுதந்திரத்தின் ஆரவாரங்கள்
ஆகஸ்டு 15ன் மாயத் தோற்றங்கள்

வருடந்தோறும் விடாமல் நடக்கும்
பக்தி சடங்குகள் தேச சம்பிரதாயங்கள்
தேவை இல்லை இந்த சுதந்திரம்
எனக்கு வேண்டும் உண்மை சுதந்திரம்
இன்னும் சில நாட்களில் வருகிறது இன்னொரு சுதந்திர தினம். அதை முன்னிட்டு இதோ என்னுடைய கவிதை ஒன்று.

ஆகஸ்டு பதினைந்தும் சுதந்திரமும்

வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் - என்
வீட்டு வாசல் வேப்ப நிழலில்
காலை நீட்டி தூங்க முடிந்தால் - ஆஹா
கிடைத்தது சுதந்திரம் ! கிடைத்தது சுதந்திரம் !

நெருஞ்சி முட்களை ஒதுக்கி விட்டு - என்
குருஞ்சிப் பூக்களை விருந்துக்கு அழைத்து
மலர்களுடன் மயங்கியே கிடந்தால் - அன்று
மனதுக்கு கிடைத்தது மகிழ்ச்சி சுதந்திரம்
கொட்டும் மழையில் சிரிக்கும் நதியில்
பொட்டல் காட்டில் எரிக்கும் வெயிலில்
ஆயிரக்கணக்கில் ஆட்கள் நெரிக்கும்
அரசியல் கூட்டம் சந்தை திருவிழாவில்

முகமும், முகவரியும் இல்லாத உருவமாய்
தனியாய், காற்றாய், நிழலாய், அருவமாய்
இருந்தும் இல்லாமல் இருக்க முடிந்தால்
இனிப்பாய் இனிக்கும் இன்பச் சுதந்திரம்

ரகசிய சந்தோஷங்களை
ரணங்களை, ஆசைகளை
பயத்தையும், கூடவே என்
பொறாமையையும் சொல்ல ஒரு
தோழி - குறைந்த பட்சம் ஒரு தோழனாவது -
கூட இருந்தால் பாக்கியம். அது சுதந்திரம்.

என்ன தான் இருந்தாலும்
பிடித்தவளிடம் பல் இளிக்கவும்
பிடிக்காதவனிடம் முகஞ்சுளிக்கவும்
முடிந்தால் போதும்
அதுவே சுதந்திரம் !
 
அன்புடன் 
சு. சிவசுப்பிரமணியம்  
தலைவர்

---
பின்குறிப்பு

கொடிக்கு அல்ல, ஆசிரியர்களுக்கு மட்டும் மரியாதை கொடுத்து வெயிலில் நின்று, பின் கொடுத்த மிட்டாயை வாங்கி சாப்பிட்டு விட்டாலும், எல்லோரும் போன பின்பு இப்படி விளையாட முடிந்தால் அது தான் உண்மையில் சுதந்திரம்.
கொடிக்கு அவ மரியாதை என்று யாராவது இந்த குழந்தைகளின் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ ?
 
அன்புடன் 
சு. சிவசுப்பிரமணியம்  
தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இந்தியாவின் முதல் சுதந்திர தின photos

இந்தியாவின் முதல் சுதந்திர தின

photos 

National Flag
National Flag                      
வாசகர்கள் அனைவருக்கும்
சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
-
என்றென்றும் நட்புடன்
சு.  சிவசுப்பிரமணியம் 
தலைவர்
மற்றும் நிர்வாகிகள் 
 




சிவா





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் - மக்கள் மையம்

திங்கள், 13 ஜூன், 2011

"காகிதப் பை' காலத்தின் கட்டாயம்!

"காகிதப் பை' காலத்தின் கட்டாயம்!
சு. சிவசுப்பிரமணியம், தலைவர், 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பொருள்களில் கணிப்பொறிக்கு அடுத்த இடத்தைப் பாலித்தீனுக்கு வழங்கலாம். ஏதேனும் ஒருவகையில் இந்த இரு பொருள்களும் இல்லாமல் சந்தைப்படுத்துதல் இயலாத காரியமாகிவிட்டது.

காயப்பொடி தொடங்கி உயிர்காக்கும் விலையுயர்ந்த மருந்துகளும்கூட பாலித்தீன் பாதுகாப்பு வளையத்தோடுதான் விற்கப்படுகின்றன.
நிலத்தடிநீரைக் கேள்விக்குறியாக்குவதோடு, தூய்மையான காற்றுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த காத்திருக்கும் பாலித்தீன் கழிவுகளின் அபாயம் சாமானியர்களைச் சென்றடையாமல் இல்லை. கிராமத்து முதியோருக்கும்கூட பாலித்தீன் பைகளின் கேடுகள் தெரிகின்றன. ஆனால், அதன் பயன்பாட்டைத் தவிர்க்க முயற்சிப்பதில்லை.       


தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, பாலித்தீன் பைகளுக்குத் தடை விதித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் அக்கறையிலும், மக்களின் ஜீவாதாரப் பிரச்னையுடன் தொடர்புடையது என்பதாலும் இத் திட்டத்தை அமல்படுத்துவதோடு நின்றுவிடாமல், கண்காணிப்பை அதிகப்படுத்துவது அரசின் கடமை.

பாலித்தீன் பயன்பாடு விஷயத்தில் வணிகர்களை மட்டுமே குறை சொல்வதும் சரியாகாது. பைகள், கூடைகளை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்வதை மக்கள் நாகரிகக் குறையாகக் கருதுகிறார்கள்.

அக் காலத்தில் துணிப்பைகளில் பொருள்களை வாங்கிப் பழகிய முதியவர்கள்கூட, இப்போது "கேரீ-பேக்' இல்லையா எனக் கேட்கின்றனர். இது ஆரோக்கியமான சூழல் அல்ல, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு விதை விதைப்பது போன்றதாகும்.

பாலித்தீன் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் ஆணிவேராக பெரிய நிறுவனங்களே உள்ளன. ஏனெனில், இன்று திரும்பிய திசையெங்கும் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் பாலித்தீன் பைகள்தான் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

பொருள்களைத் தயாரிப்பதிலும், அதைச் சந்தைப்படுத்துவதிலும் வெளிநாட்டு யுக்திகளை விரும்பும் இந் நிறுவனங்கள், காகிதப் பை போன்ற பாலித்தீனுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துவதில் மட்டும் ஆர்வம் காட்டுவதில்லை.

பசுமை விரும்பிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஆனால், புல் வளருவதையும் விரும்பாத பாலித்தீன் பைகள் ஒவ்வொரு நாளும் சில நூறு கிலோவரை மண்ணில் புதைவதற்கு நாமும் ஒரு காரணமென்பதை இந் நிறுவனங்கள் உணர மறுப்பதேன்?

எனவே, முதல்கட்டமாக தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் உள்ள பெரிய நிறுவனங்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். அவர்களிடம், பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நிறுத்துவது அல்லது படிப்படியாக மாற்றுவழிகளைப் புகுத்துவது குறித்து வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கலாம்.

மக்களிடம் பாலித்தீன் பயன்பாடுகளைத் தடுக்க விழிப்புணர்வுப் பிரசாரம் செய்வதோடு, தேவைப்பட்டால் உள்ளாட்சித் துறைகள் மூலம் எச்சரிப்பதும்கூட தவறில்லை.

ஏற்கெனவே, உள்ளாட்சித் துறைகளின் கண்டிப்பால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. அதே பாணியில் பாலித்தீன் ஒழிப்புக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மாநிலத்திலேயே முன்னோடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பாலித்தீன் பயன்பாட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் மட்டுமன்றி, இந்தியாவின் மதிப்புக்குரியவர்களில் ஒருவராகத் திகழும் அப்துல் கலாமிடமும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நடவடிக்கைகளை மாநிலம் முழுமையும் செயல்படுத்துவதென்பது அரசு நினைத்தால் சாத்தியமே.

குறிப்பாக, உணவுப்பொருள் தொடர்பான நிறுவனங்களிடமும், ஜவுளித்துறை நிறுவனங்களிடமும் காகிதப் பை, துணிப் பை போன்ற மக்கும் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கினால் சிறப்பான மாற்றத்தைக் காண முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது எளிதில் இயலாத விஷயம் என்றாலும், எதிர்காலச் சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே பாலித்தீன் பைகள் உற்பத்தித் தொழிலில் இருப்பவர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தலாம்.

அத் தொழிலில் ஈடுபட்டவர்களில் விருப்பமுள்ளவர்கள் காகித மற்றும் துணிப் பைகள் உற்பத்திக்கு மாற விரும்பினால், சிறப்புக் கடனுதவிகளை அளிக்கலாம்.

மகளிர் சுயஉதவிக் குழுவினர், இளைஞர்கள் ஆகியோருக்கு வருவாய் தரும் வகையில் ஒவ்வோர் ஊராட்சி ஒன்றியத்திலும் அரசு சார்பில் காகிதப் பை தயாரிப்பு மையங்களைத் திறக்கலாம். இதன் மூலம் அப் பகுதிக்கான காகிதப் பை தேவையைச் சமாளிப்பதுடன், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.

 இன்னும் 10 ஆண்டுகளில் பாலித்தீனால் உருவாகப்போகும் சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுக்க அரசின் உறுதியான நடவடிக்கை இப்போதே தேவை

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 30 மே, 2010

தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாமே...! கழிப்பிட பராமரிப்பு விவகாரத்தில் யோசனை

ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் இலவச கழிப்பிடங்கள் அமைத்து, பராமரிக்க, தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய, மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் "அவசர' தேவையை நிறைவேற்ற, அரசு, மாநகராட்சி, உள்ளாட்சி மன்றங்கள் மூலம் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன; இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், குத்தகை ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், மறைவிடங்கள் பல, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்படுகின்றன; சுகாதார சீர்கேட்டால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில், ஒரு ரூபாய் முதல் 3 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆத்திரமடையும் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏ.டி.சி., அருகில், எச்.ஏ.டி.பி., அரங்கம் செல்லும் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகப்  பகுதி உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது; இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், முகம் சுளித்து செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித் துறை இணைந்து, புதிய சுகாதார தூய்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

தூய்மை நீலகிரி, தூய்மை ஊட்டி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முறையாக செயல்படுத்தாததால், நடைமுறையில் வெற்றி பெறாமல் உள்ளது.  இதை தவிர்க்க, மக்கள் அதிகம் திரளும் இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்; புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டாலும், கட்டணமின்றி பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கழிப்பிடங்கள், லாப நோக்கில் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சுகாதாரமான நீலகிரியை உருவாக்க முடியாது.

கழிப்பிடப் பராமரிப்பை, நகராட்சி தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது, மதுரை உட்பட மாநகராட்சிகளில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன; இங்கு பணிபுரியும் சுகாதார ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; கழிப்பிடத்தை பயன்படுத்த  மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.  இதே போல், நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைத்து தன்னார்வ அமைப்புகளிடம் பராமரிக்க வழங்கலாம்; அல்லது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனி ஊழியர் நியமித்து பராமரிக்கலாம். சுகாதார மாவட்டமாக நீலகிரியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்