அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 29 செப்டம்பர், 2011

காசநோய் விழிப்புணர்வு முகாம் எருமாடு

காசநோய் விழிப்புணர்வு முகாம்
பந்தலூர்,செப்.25:2011

எருமாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை நீலகிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், சேரன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தினர்.

 நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமை வகித்தார். 

ஆதிவாசி நல சங்க ஒருங்கிணைப்பாளர் சோமன்,காச நோய் பரவும் விதம், அறிகுறிகள், காச நோயின் பாதிப்புகள், கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். 

சேரன் அறக்கட்டளை அறங்காவலர் தங்கராஜா, தரமான உணவு வகைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசினார். 

மகளிர் சுய உதவி குழு பிரதிநிதி இந்திராணி உள்ளிட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஞானசேகர் வரவேற்றார். 

நீலகிரி ஆதிவாசி நல சங்க உதவியாளர் தேவ் நன்றி கூறினார்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக