அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து  'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சிகள்  நடை பெற்றதையும் அனைவரும் அறிவோம்.

ஆனால் தற்போது சுற்றுப்புற சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பது மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது.   உள்ளாட்சி மன்றங்கள் சுகாதார பாதுகாப்பு மேம்பட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக செலவினத்தில் 1.2 சதவீதம் கண்டிப்பாக சுகாதார நடவடிக்கைக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகள் சுகாதார நடவடிக்கையாக கழிப்பிடம் கட்டி காசு பார்க்கும் நோக்கில் டெண்டர் விட்டு விடுகின்றனர் டெண்டர் எடுத்தவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால்  தெருவோர கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரம் கேள்வி குறியாகி விட்டது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய் குப்பை தொட்டிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் இதில் மக்கள் பயன் படுத்தாத இடங்களில் அமைப்பதால் பயனற்று உள்ளது  சுகாதரத்தினை பாதுகாப்பதில் உள்ளாட்சிகள் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளத்தினால் தெருவெங்கும் குப்பைகள் கழிவு நீர்கள் தேங்கி மக்கள் நோயினால் பாதிக்கும் அபாயத்தினை  ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகள் முறையாக  மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.
Facebook:   http://facebook.com/cchepnilgirisகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக