அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 7 ஏப்ரல், 2014

பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
 பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்
 பந்தலூர் பஜாரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து தரப்பினரும் வாக்களிக்க வலியுறுத்தியும் வாக்கு சதவீதத்தினை அதிகப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்கள் கடமை, வேட்பாளரை தேர்வு செய்யும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.


இவற்றை பந்தலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பேருந்துகளில் உள்ள பயணிகள் என பலதரப்பினரிடையே வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
.
 காலையிலேயே சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்க தவறும் பட்சத்தில் கள்ள ஓட்டாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் போட்டியிடும் வேட்பாளர் யாரையும் பிடிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் எனவும் வலியுறுத்தினர். 

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகா த்மா காந்தி பொதுசேவை மைய அமைப்பாளர் நௌசாத், துணை தலைவர் சுரேஷ், கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக