அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 16 மே, 2015

உள்ளாட்சி அமைப்புகள் துவங்கும் வளர்ச்சி பணிகள் குறித்து அறிவிப்பு பலகை

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,
உதகை.

செயற்பொறியாளர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதகை.

அய்யா / அம்மையீர் அவர்களுக்கு

வணக்கம்,  பல்வேறு அரசு உள்ளாட்சி அமைப்புகள் துவங்கும் வளர்ச்சி பணிகள் குறித்து அறிவிப்பு பலகை பணி  மேற்கொள்ளும் இடங்களில் வைக்க வேண்டும் எனவும்

வளர்ச்சி பணி  மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நபர் தவிர  இரண்டாம் நபர், மூன்றாம் நபர் ஒப்பந்த பணியை மேற்கொள்ள கூடாது எனவும் கடந்த நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தபட்டது.  

கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலரும் இரண்டாம் நபர்கள் பணிகள் மேற்கொள்ள் கூடாது எனவும் ஒப்பந்தம் எடுத்த நபர்தான் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் குந்தலாடி பகுதியில் தற்போது கூடலூர் ஊராட்சி மூலம், மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க படவில்லை,

மேலும் மூன்றாம் நபர் தான் இந்த பணியை செய்து வருகின்றார் எனவும் புகார் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக