அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 16 மே, 2015

கோதுமை அதிகமாக வழங்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகை

மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்
உதகை.

பொருள் : கோதுமை அதிகமாக வழங்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

அனைத்து நியாய விலை கடைகளிலும் தற்போது கோதுமை கார்டு ஒன்றிற்கு 2 கிலோ வீதம் வழங்கப்படுகின்றதுஇதுவும்பலருக்கு கிடைப்பதில்லைஆனால் பொதுமக்கள் அதிகம் கோதுமை கேட்கின்றனர்பலர் கோதுமை கேட்டு கிடைக்காமல்செல்கின்றனர்அவர்களுக்கு கோதுமை கிடைப்பதில்லை.  கூடுதல் கோதுமை கேட்டாலும் ஒதுக்கீடு இல்லாததினால் அதிகஅளவு கோதுமை மக்களுக்கு கிடைப்பதில்லை

ஆனால் நுகர்பொருள் வானிப கழக குடோன்களில் கோதுமை இருப்பு வைக்கபப்ட்டுள்ளதாக அறிகின்றோம்.  அவைபாதுகாக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கப்படுகின்றது.  எனினும் வண்டு உள்ளிட்டவை அவற்றை தின்றுசேதப்படுத்துகின்றது

இந்த கோதுமையை மக்களுக்கு வினியோகிக்கும் போது அவை பல பூச்சிகள் தின்ற கோதுமையாகவும்,  பூச்சிகளிடம் இருந்துகாக்க பயன்படுத்தபட்ட மருந்தினால்  விசத் தன்மை யோடான கோதுமையாகவும் மக்களுக்கு வினியோகிக்கப்படுகின்றதுஎனவே தரமற்ற கோதுமையை மக்களுக்கு வினியோகிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

ரேசன் கார்டுகளுக்கு ஒதுக்கீடு 5 கிலோ என்ற முழு அளவை தற்போது வழங்கினால் மக்களுக்கு அதிக அளவு கோதுமைகிடைக்கும் அதோடு குடோன்களில் கோதுமையை பாதுகாக்கும் பணியும் குறையும் நல்ல கோதுமையை மக்களுக்குவினியோகிக்கவும் முடியும்.

எனவே அய்யா அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கார்டுதாரர்களுக்கு முழு ஒதுக்கீடான 5 கிலோ கோதுமைவழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                                                                                                                                             இப்படிக்கு

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக