அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 16 மே, 2015

அரசு பேருந்துகள் ஒழுகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொது மேலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம்
உதகை.

பொருள் : அரசு பேருந்துகள் ஒழுகாமல் இருக்க முன்னெச்சரிக்கை
     நடவடிக்கை  எடுக்க கேட்டல் சார்பாக

அய்யா அவர்களுக்கு வணக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் சில அதிகமாக ஓழுகுகின்றன.  இதனால் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பாதிக்கின்றனர்.  இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

அரசு பேருந்துகள் பலவும் வெளி மாவட்டங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் இடமாற்ற (ரீ-பிளேஸ்மென்ட்) அடிப்படையில் இயக்கப்படுகின்றன.  அவை மலைபிரதேசத்திற்கான வடிவமைப்பினை பெற வில்லை.  மேலும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக உள்ளன.  அவற்றில் மேற்கூரைகள் விரிசல் ஏற்படுவதால் மழை காலங்களில் பேருந்திற்குள் ஒழுகும் நிலை ஏற்படுகின்றது.  மக்கள் பெரிதும் பயனிக்கும் அரசு பேருந்துகள் ஒழுகுவதால் பொதுமக்கள் மழை காலங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதில் சிரம்மப்படுகின்றனர்.

அரசு பேருந்துகளில் ஒழுகும் நிலையை மாற்ற ஆண்டிற்கு ஒருமுறை அனைத்து பேருந்திற்கும் தார் சீட்டுகள் ஒட்டும் பணி நடைபெறும்.  தார் சீட்டுகள் ஒட்டும் பணி மழை காலங்களிலேயே ஆரம்பிக்கபடுவதால் அவை முழுமையாக பயன் அளிப்பதில்லை.  அவற்றை வெயில் காலமான தற்போது ஒட்ட வேண்டும்.  தற்போது தார் சீட்டுகள் ஒட்டும் போது வெயிலில் உருகி மேற்கூரைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்  அடைபடும் இதனால் மழை காலங்களில் ஒழுகும் நிலை குறையும்.

எனினும் சில பேருந்துகள் ஒழுகும் நிலை மாறுவதில்லை.  சில பேருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடிகள் அதை ஒட்டிய பீடீங் பகுதிகளில் உடைந்துள்ளதால் அவற்றில் நீர் கசிவு ஏற்பட்டு பக்கவாட்டு கண்ணாடி பகுதியில் உள்ள இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல முடியவில்லை.

பக்கவாட்டு காண்ணாடிகள் அதனை சார்ந்த  பகுதிகளில் உள்ள பீடிங்களில் உள்ள வின்¢சல்களில் நீர் கசிவு ஏற்படுவதால் அவற்றை தடுக்க பீடிங் பகுதியில்  புட்டி போல் பசையை ஒட்டுவதன் மூலம் பீடிங் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை குறைக்கலாம்.  இதனால் பக்கவாட்டில் ஏற்படும் நீர்கசிவு மற்றும் ஓழுகும் நிலையை போக்க முடியும் எனவே தற்போதே முன்னேற்பாடுகள் மேற்கொண்டு மழை காலங்களில் அரசு பேருந்துகளில் ஓழுகுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.


இப்படிக்கு

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக