அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 3 ஜூலை, 2015

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணக்கர்களுக்கு



பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணக்கர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தபட்டது.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-15ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணக்கர்களுக்கு பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது,  பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தானந்த் தலைமை தாங்கினார்.  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், ஆலோசகர்கள் காளிமுத்து, செல்வராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி தணிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்லீரமணியம் பேசும்போது மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் தினசரி படித்தாலே அதிக அளவு மதிப்பெண் பெற முடியும் படிப்பதால் வாழ்வின் நிலை உயரும்.  அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மேற்படிப்புகளுக்கு அதிக சலுகைகளும் கிடைகிறது.  ஆசிரியர்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற மாணவர்கள் கவணத்துடன் படிப்பது அவசியம் என்றார்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி கபீர் பேசும்போது மாணவர்கள் விருப்பபட்டு படிப்பதன் மூலம் எளிதில் பாடங்களை புரிந்து படிக்க முடியும், படிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியதுவம் வாழ்வில் முன்னேற எடுக்கும் முயற்சிக்கு சமம் என்றார்,
நிகழ்ச்சியில் பணிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சிவசங்கரி (1046-) மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அஸ்னா பெர்சின் (459) ஆகியோருக்கு பரிசும் 1000 ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.  பணிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் இடம்  பெற்ற அன்சின செரின் 1005 மற்றும் மூன்றாம் இடம்  பெற்ற விக்னேஸ்வரன் 974 மற்றும் பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்ற ஜெயஸ்வரூபா 443, மூன்றாம் இடம்  பெற்ற ரூபினா 440 ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது,
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் ரபீக், சலீம், சாதிக், ராம்பிரசாத், அபுதாகீர் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார், முடிவில் பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக