அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 28 ஜூலை, 2015

'மக்கள் ஜனாதிபதி' பாரதரத்னா அப்துல் கலாம்

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா அப்துல் கலாம் அவர்கள், தமிழகத்தை மையமாக வைத்து எழுதி வந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகாலயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 83 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர்.
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினார். இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடனும், திட்டங்களுடனும் இந்தியா-2020 என்ற புத்தகத்தை அப்துல்கலாம் எழுதியிருந்தார்.  
இதேபோல் தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திடங்களுடன் "எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்" என்ற புத்தகத்தை எழுதிவந்தார். தமிழில் அவர் எழுதிவந்த இந்த புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை சார்ந்து, "எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்" என்ற புத்தகம். 

கலாம் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது அவரது அறிவியல் ஆலோசகராக இருந்தவரும், இந்த புத்தகத்தின் இணையாசிரியருமான வி.பொன்ராஜ் கலாமுடன் இதுவரை நடத்திய விரிவான விவாதங்களுக்கு பிறகு 7 அத்தியாயங்களை முடித்துள்ளார். இந்த புத்தகம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூட பொன்ராஜுடன் கலாம் ஆலோசித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிகுறித்து பெரும் கனவுகளை வைத்திருந்த அப்துல்கலாம், புத்தகத்தை எழுதிமுடிக்கும் முன்பே மறைந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
 
புதுடெல்லி, 
மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்த செய்தி அறிந்து, நாடே சோகத்தில் மூழ்கிஉள்ளது. டெல்லி கொண்டுவரப்படும் அவரது உடலை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார்.
கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் இணைப்பு திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி. ராஜீவ் மேத்தா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.
அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி ராணுவ மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் வர வழைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார். தேசத்தின் அனைத்து மக்களின் அன்பை முழுவதும் பெற்று, மக்களின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களின் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது.
அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து காலை அவரது உடல் விமானப்படை விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்படுகிறது. புதுடெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும் அவரது உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக் கொள்கிறார்.  
‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று காலமானார். மேகாலயா மாநிலத்தில் கல்லூரி விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட தால் அவர் மரணம் அடைந்தார்.
ஷில்லாங், 
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது ஜனாதிபதி பதவி வகித்தவர் அப்துல் கலாம்.
கல்வித் துறையில் ஈடுபாடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர்.
கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார்.
கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் இணைப்பு திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

கல்லூரி விழாவில் மயங்கி விழுந்தார்
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி. ராஜீவ் மேத்தா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.
அப்துல் கலாம் மரணம்
அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி ராணுவ மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் வரவழைக்கப் பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார்.
இதுபற்றி பெதானி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜான் எல்.சைலோ ரிந்தாதியாங் கூறுகையில், “கிட்டத்தட்ட முற்றிலும் நினைவிழந்த நிலையிலேயே அப்துல் கலாம் கொண்டுவரப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கக்கூடும் என்று கருதுகிறோம்” என்றார்.
அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி ராமேசுவரத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஏ.பி.ஜெய்னுலாவுதீன் மரைக்காயர்- அஸ்மா அம்மாள். 
பள்ளி, கல்லூரி படிப்பு
தந்தை ஏ.பி.ஜெய்னுலாவுதீன் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாய்மரக்கப்பல் போக்குவரத்தை நடத்தியவர்.
அப்துல் கலாம் 5-ம் வகுப்பு வரை ராமேசுவரத்தில் உள்ள சாமியார் பள்ளிக்கூடத்தில் படித்தார். பின்பு ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதன்பின்னர், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் வான்பொறியியல் படித்தார். 1963-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஏவுகணை தளத்தில் பணி
20 ஆண்டுகள் கேரளாவில் உள்ள தும்பா வானவெளி ஆராய்ச்சி நிலையத்திலும், அடுத்த 20 ஆண்டுகள் ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சண்டிபூர் ராக்கெட் ஏவுகணை தளத்திலும் பணியாற்றினார்.
இங்கிருந்து அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்திய பெருமையும் அப்துல் கலாமுக்கு உண்டு.
அப்போது முழுவதும் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தையும் உருவாக்கினார்.
1982-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 
ஜனாதிபதி ஆனார்
1998- ஆண்டு பொக்ரானில் இந்தியா தனது 2-வது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அரிய சாதனைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் அப்துல் கலாம்.
1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார். இது கேபினட் மந்திரி அந்தஸ்துக்கு இணையான பதவி ஆகும். இதேபோல் அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்து உள்ளார்.
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இந்த தேர்தலில் 90 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.
விருதுகளை குவித்தவர்
அப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர். டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான ‘மோடி’ விருது, விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
30 கவுரவ டாக்டர் பட்டங்கள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல் கலைக் கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன. இந்தியாவில் இத்தனை பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.
அக்னிச் சிறகுகள்
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்.
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். ‘கனவு காணுங்கள்’ என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி இளைஞர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினார்.
தனது அறிவியல் லட்சியத்துக்கு இடையூறாக அமையும் என்பதால் அப்துல்கலாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக