அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கூடலூர் பெரிய சூண்டி அரசு மேல் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கூடலூர் : மே  தினத்தை முன்னிட்டு, கூடலூர் பெரிய  சூண்டி அரசு மேல் நிலை பள்ளியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதிய தலைமுறை அறக்கட்டளை ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்,ஆகியன இணைந்து   கூடலூர் பெரிய  சூண்டி அரசு மேல் நிலை பள்ளியில்  இலவச கண் சிகிச்சைமுகாம் நடத்தின
முகாமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
புதிய தலைமுறை அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொருபனந்தன்,  மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்  மங்கை ,  மின் பணியாளர் வேலுப்பிள்ளை    முன்னிலை வகித்தனர்.

உதகை அரசு மருத்துவமனை  டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்; பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர்  பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், உட்பட பலர் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
DSC_2120.JPG
DSC_2126.JPG
DSC_2127.JPG
DSC_2130.JPG

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக