அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 26 டிசம்பர், 2015

காளான் கபாப்

என்னென்ன தேவை?

காளான் - 1 கப்,
கடலைப் பருப்பு - 1 கப், 
உதிர்த்த ஸ்வீட் கார்ன் - 1/4 கப், 
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, 
கசகசா - 1 டேபிள் ஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
ஏலக்காய் - 2, 
ரொட்டித்தூள் - 2 டேபிள்ஸ்பூன், 
கிராம்பு - 2, 
காய்ந்த மிளகாய் - 2, 
வெங்காயம் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது), 
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், 
எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி (இவற்றை தனியாக கலந்து வைக்கவும்). 

எப்படிச் செய்வது?
  
காளானை நன்றாகக் கழுவி நறுக்கவும். சோளத்தையும் ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீர்விட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். கசகசா, சீரகத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஏலக்காய், கிராம்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நீர் சிறிது தெளித்து அரைக்கலாம்.  கடலைப் பருப்பு, வெந்த காளான், சோளமுத்தை உப்பு சேர்த்து மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா தூளைப் போட்டு பிரட்டி சோளமாவு, வேண்டுமெனில் மல்லித்தழை கலந்து வதக்கவும். உருண்டைகளாக இதை உருட்டி ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது ஊறவைத்திருந்த வெங்காயம், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் கலவையை இதன் மீது தூவி பரிமாறவும். 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக