அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அரசு சலுகைகளுக்கு லஞ்சம் கொடுக்காதீங்க

9.அரசு சலுகைகளுக்கு லஞ்சம் கொடுக்காதீங்க... அலுவலகத்தை தொடர்பு கொள்ள அழைப்பு


குன்னூர் : ""உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றியோர் லஞ்சம் கொடுத்து அரசு சலுகைகளை பெற வேண்டாம்,'' என, மாவட்ட உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை அலுவலர் கூறினார்.நீலகிரி மாவட்ட மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தின் மூன்றாம் ஆண்டு விழா, அருவங்காடு பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை தேவாலய பங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது.


நீலகிரி மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்து பேசுகையில், ""உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றியோர் அரசின் சலுகைகளை பெற, உடல் ஊனமுற்றோர் மாவட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். உதவிகள் பெற லஞ்சம் கொடுக்க தேவையில்லை; லஞ்சம் கொடுத்து ஏமாற வேண்டாம்,'' என்றார். குன்னூர் டி.எஸ்.பி., தர்மராஜ் பேசுகையில், ""மனவளர்ச்சி குன்றியோர் மன தைரியம், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; வாழ்க்கையை சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோரின் ஊக்குவிப்பு மிக அவசியம்.மன வளர்ச்சி குன்றிய தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, தெய்வ பக்தி என்ற உணவை ஊட்ட தவறக் கூடாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை திருட்டு தொழிலில் ஈடுபடுத்துதல், பிச்சை எடுக்க வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட செய்யக் கூடாது,'' என்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் சகோதரி.ஷீலா பேசினர். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பெரியவர்களுக்கு குளிர்கால ஆடை, பள்ளி சீருடை, கம்பளி, போர்வை, பனியன், வேட்டி, புடவை, பாத்திரம் உட்பட பொருட்கள் வழங்கப்பட்டன. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவியர், பாய்ஸ்கம்பெனி புனித கிளமென்ட் துவக்கப் பள்ளி, லவ்டேல் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் கழக அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஆப்பிள் பீ பகுதி நலச்சங்க தலைவர் அந்தோணிசாமி, வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு உறுப்பினர் வினோத்குமார், நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன், கிளைத் தலைவர் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை, வடிவேல் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட மனவளர்ச்சி குன்றியோர் சங்கத் தலைவி இந்திரா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


 நன்றி தினமலர் 28 02 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக