அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 25 ஜூன், 2012

பந்தலூர் :பந்தலூரில் நடந்த கண் சிகிச்சை இலவச முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மாகாந்தி பொது சேவை மையம் சார்பில், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், முகாம் நடந்தது.
நெல்லியாளம் நகரமன்றத் தலைவர் அமிர்தலிங்கம் துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல், சேவை மைய அமைப்பாளர் நவுசாத் முன்னிலை வகித்தனர். ஊட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளித்தனர். 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
டாக்டர் கணேசன், உதவி தலைமை ஆசிரியர் தண்டபாணி, நிர்வாகிகள் தனிஸ்லாஸ், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக