அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 25 ஜூன், 2012

இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை உண்பதன் மூலம் மருத்துவ செலவு குறையும்

கூடலூர் : "இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களை உண்பதன் மூலம் மருத்துவ செலவு குறையும்' என கூடலூரில் நடந்த இயற்கை விவசாய பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை "ரீப் மினிஸ்டரி', கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நடுவட்டம் "கிரேஷ் ஆர்வேஸ்' அமைப்பு ஆகியவை சார்பில் இயற்கை விவசாய குறித்த பயிற்சி முகம், கூடலூரில் நடந்தது. சூரியபிரகாஷ் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சிவசுப்ரமணி தலைமை வகித்தார். சென்னை ரீப் மினிஸ்டரி அமைப்பின் தலைவர் ஜோதிபிரகாஷ் பேசுகையில்,""இன்றைய கால கட்டத்தில் விவசாயத்தில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களை உண்பதன் மூலம் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இதில் மாற்றம் காண விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார். பயிற்சி நிறுவன முதல்வர் மாணிக்கசாமி உட்பட பங்கேற்றனர். முருகன் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக