அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 23 ஜூன், 2012

உணவு கலப்படம் விழிப்புணர்வு கருத்தரங்கம்


ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

கனரா வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், 
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில்,
 ‘உணவு மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படையானது. இன்றைய உலகில் அனைத்து பொருட்களிலும் கலப்படம் வந்து விட்டது. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பருப்பு வகையில் கேசரி பருப்பு, மைதாவில் மரவள்ளி கிழங்கு மாவு, தேயிலை தூளில் சாயப் பொடிகள் ஆகியவை கலப்பது பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படமாகும். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க சங்க தலைவர் பேசுகையில், ‘சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. நாம் வாங்கும் பொருட்களில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க முன் வர வேண்டும்’ என்றார். 

நிகழ்ச்சியில் பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலப்படம்   செய்யும் கல் நெஞ்சங்களே என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டதில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


ஊட்டி:"கவர்ச்சிகர விளம்பரங்களில் வரும் பொருட்களை கவனமுடன் வாங்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.பயிற்சி இயக்குனர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி பேசுகையில், ""உணவில் கலப்படம் அதிகரித்து வருகிறது. கடுகு, பருப்பு, தேயிலை தூள், மைதா மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களில் செய்யப்படும் கலப்படும் பலவித நோய்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. கவர்ச்சிகர விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் "ஜங்க்புட்' உணவுப் பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க பிரத்யேக உபகரணம் உள்ளது; இதில், 20 வகை பரிசோதனை உபகரணங்கள் உள்ளன. 

இதை மக்கள் பயன்படுத்தி, கலப்படத்தை கண்டறிய வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், ""சாலையோர தள்ளு வண்டிக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவை,'' என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவ சுப்ரமணியம், "நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய பயிற்சியாளர் சதீஷ், பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர். "கலப்படம் செய்யும் கல் நெஞ்சங்களே' என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக