அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 25 ஜூன், 2012

ஊட்டி பஸ் ஸ்டாண்டில் சமீபத்தில் அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது,'

ஊட்டி:"ஊட்டி பஸ் ஸ்டாண்டில் சமீபத்தில் அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது,' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்தும் பகுதி மிகவும் மோசமாக பராமரிப்பிலாமல் இருந்தது. வெயில் காலத்தில் மண் புழுதியும், மழை காலத்தில் சேறும், சகதியுமாக காட்சியளித்த அந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, மலை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குறிப்பிட்ட பகுதிகளை சீரமைக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாய்க் உத்தரவிட்டார்.

கோடை சீசனுக்கு முன்பாக பணிகள் முடியும் என்ற எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் நாட்களான மலர் கண்காட்சி நடந்த 18,19,20 ஆகிய தேதிகளில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை தார் தளம் போடும் பணியை செய்தவர்களோ, போக்குவரத்து கழகமோ கண்டுக்கொள்ளவில்லை.இந்நிலையில்,"அவசர கதியில் நடந்த சீரமைப்பு பணிகள் தரமில்லாமல் நடந்துள்ளது; விசாரணை நடத்த வேண்டும்,' என கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டி உள்ளது.

மையத்தின் தலைவர் சிவசுப்ரமணியம் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:ஊட்டி பஸ் ஸ்டாண்டில் நீண்ட காலத்துக்கு பின்பு, மலர் கண்காட்சி நடந்த நாட்களில் சீரமைப்பு பணிகள் வேண்டுமென்றே அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் தார் போடப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், தற்போது பஸ் சென்ற போது மீண்டும் குழி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு தரமில்லாத பணியே முக்கிய காரணமாகும். மேலும், மழை காலத்தில் தண்ணீர் செல்ல போதிய வடிகால் அமைப்புகள் இல்லாத காரணத்தால், அடுத்த மாதம் பருவமழை பொழிந்தால், நிச்சயம் குளம் மழை நீர் நிற்கும் அபாயம் உள்ளது. இங்கு மக்களின் வரிபணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்ட கலெக்டர் இப்பணிகள் குறித்து விசாரணை நடந்த வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக