அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் பயிற்சி

ஊட்டி, ஆக. 18:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் தீர்மானித்துள்ளது. இச்சட்டம் குறித்து சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம். இச்சட்டத்தின் சிறப்புகள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம். இந்த சட்டத்தின் நோக்கம் நுகர்வோருக்கான உரிமைகள், உணவு கலப்படம் தர நிர்ணயங்களின் தன்மைகள், பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை, நுகர்வோர் கடமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் தன்னார்வத்துடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பும் தன்னார்வ அமைப்பினர், சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரி மற்றும் சமூக செயல்பாடுகள் குறித்த விவரங்களை 
�கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் & மக்கள் மையம் பந்தலூர், நீலகிரி� என்ற முகவரிக்கு அனுப்பலாம். 
பயிற்சி குறித்த இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும். 
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 94885 20800 94898 60250 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

2 கருத்துகள்: