தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண் டும். நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் போது மொபைல் பேசுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களுக்கு மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும், கார், லாரி டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. ஒவ்வொரு வாகன விதிமீறல் களையும் சட்டம் போட்டு தடுப்பது என்பது இயலாத காரியம். தங்கள் உயிர், குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துக்கள் குறையும்
16 வயது நிரம்பியவர் முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு, "டிரைவிங் லைசன்ஸ்' வழங்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன், 50 சிசி, திறன் கொண்ட பழைய வாகனங்களை ஓட்டி காண்பித்து லைசென்ஸ் பெற்று செல்கின்றனர். தற்போது அனைத்து டூவீலர் உற்பத்தி நிறுவனங்களும், 50 சிசி திறன் கொண்ட வாகனங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டனர். 70 சிசி க்கு மேல் தான், வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற சிறுவர்கள் அதிக திறன் கொண்ட டூவீலர்களை அதிவேகமாக ஓட்டுகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு பிறர் காயமடையும் போது, இவர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்படும்.படிக்கும் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன், வழக்கு என அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் படிப்பு பாதிக்கும் நிலையும், வீணான மனக்குழப்பங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. மேலும் வாகனங்கள், உயிர் சேதங்கள் ஏற்படும் போது காப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முழு இழப்பீடையும் பெற்றோர்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.வேலை, திருமணம் என்ற சில நடைமுறைகளுக்கென வயது வரம்பு உள்ளது போல வாகனங்களை இயக்குவதற்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ரோட்டில் வாகனங்களை சிறுவர்கள் இயக்குவதை பெற்றோர் தடுத்தாலே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்
16 வயது நிரம்பியவர் முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு, "டிரைவிங் லைசன்ஸ்' வழங்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன், 50 சிசி, திறன் கொண்ட பழைய வாகனங்களை ஓட்டி காண்பித்து லைசென்ஸ் பெற்று செல்கின்றனர். தற்போது அனைத்து டூவீலர் உற்பத்தி நிறுவனங்களும், 50 சிசி திறன் கொண்ட வாகனங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டனர். 70 சிசி க்கு மேல் தான், வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற சிறுவர்கள் அதிக திறன் கொண்ட டூவீலர்களை அதிவேகமாக ஓட்டுகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு பிறர் காயமடையும் போது, இவர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்படும்.படிக்கும் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன், வழக்கு என அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் படிப்பு பாதிக்கும் நிலையும், வீணான மனக்குழப்பங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. மேலும் வாகனங்கள், உயிர் சேதங்கள் ஏற்படும் போது காப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முழு இழப்பீடையும் பெற்றோர்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.வேலை, திருமணம் என்ற சில நடைமுறைகளுக்கென வயது வரம்பு உள்ளது போல வாகனங்களை இயக்குவதற்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ரோட்டில் வாகனங்களை சிறுவர்கள் இயக்குவதை பெற்றோர் தடுத்தாலே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக